Friday, December 9, 2011

ஸ்டாப் தி மேட்னஸ் ( STOP THE MADNESS )


முல்லைப் பெரியார் அணை விவகாரத்தினால், பாரம்பர்யமாக நெருங்கிய நல்லுறவு கொண்டிருந்த தமிழர்களும்-மலையாளிகளும் அடித்துக் கொள்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் தமிழர்களும், தமிழகமெங்கும் டீக்கடை முதல், நகைக்கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் மலையாளிகளும் தாக்கப்படுகின்றனர்.  சாதாரண சபரிமலை பக்தர்களும், டீக்கடை நாயர்களும் என்ன தவறுசெய்தனர்?  அவர் களுக்கும் அணை விவகாரத்திற்கும் என்ன நேரிடைத்தொடர்பு? இவர்களை ஏன் அடிக்க வேண்டும்? போராட்டம் என்பது வேறு! அராஜகம் என்பது வேறு!

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது, “சிங் குகள் குறி வைத்து தாக்கப்பட்டது போன்ற அராஜகம் அல்லவா இது! பாஸிஸத் தின் ஆரம்பம். இதைக் கண்டிக்க வேண்டிய அரசியல் வாதிகளும், மீடியாக்களும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்?

மதியிழந்த அரசியல்வாதிகள், ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டி ருக்கின்றனர்.  UDF – LDF இரண்டுக்கும் இடையே, எம்.எல்.ஏ–க் கள் எண்ணிக்கையில், வித்தியாசம் இரண்டே இரண்டுதான்.  இது மாறி விட்டால் போதும்! கேரளத்தில் ஆட்சி மாறிவிடும். இதற்காகத்தான் இந்த கூத்தடிக்கின்றனரா?   

அரசியல்வாதிகளே! எப்படி நாட்டைப் பற்றியும், கொள்கைகள் பற்றியும்,  தேசத்தின் இறையாண்மை பற்றியும் சிந்தனையற்றுப் போய்விட்டீர்கள்?

எதை வேண்டுமானாலும் சொல்லலாம்! எப்படி வேண்டுமானாலும் மக்களை உசுப்பேற்றிவிடலாம்! வாக்கு அரசியல் மட்டுமே போதும் என நினைத்து விட்டீர்களா? உங்களால், எந்த பிரச்சினக்குமே தீர்வு காணவே முடியாதா? ஆகப் பெரிய தேசீய கட்சிகள் கூட, குறுகிய இன, மொழி உணர்வு களைத் தூண்டிவிட்டு ஏன் குளிர் காய்கிறீர்கள்?

நீங்களெல்லாம், பத்திரமாக திருவனந்தபுரத்திலும் சென்னையிலும் இருந்து கொண்டு, சாதாரண மக்களை ஏன் இரத்தம் சிந்தவைக்கின் றீர்கள்?

தமிழகத்திலும், கேரளத்திலும் இருக்கும் தொழிற்சங்கவாதிகளும், சமூகவியலாளர்களும், இலக்கியவாதிகளும், ஓய்வு பெற்ற “வி.ஆர்.கே“ போன்ற நீதிபதிகளும் என்ன செய்கிறார்கள்? மக்கள் அடித்துக் கொள்வதை நிறுத்த வீதியில் இறங்கியிருக்க வேண்டாம்? 

மக்கள் அராஜகத்திற் கெதிராகவும், இன-மொழி வெறி கோஷத்திற் கெதிராகவும் குரல் கொடுத்தாக வேண்டும்!


அரசியல்வாதிகளுக்கு, அணை விவகாரம் தீராமலிருந்தால்தான் ‘பிழைப்பு நடத்த முடியும். இவர்கள் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல மாட்டார்கள். மாறாக இன்னும் கொஞ்சம் எண்ணை ஊற்று வார்கள்! இன்னும் பிரச்சினை பெரிதாக எரியட்டும் என்று! ஏனெனில் இரத்தம் சிந்தப்போவது அவர்களல்லவே!

இந்து-முஸ்லீம்கள் இனக்கலவரம் நடந்த போதெல்லாம், தடுத்து நிறுத்த ‘உண்ணாவிரதம் மேற்கொண்ட “மகாத்மா காந்தியினைபின் பற்று வதாகக் கூறிக் கொள்ளும் சீடர்கள் ஒருவர் கூடவா இரு மாநி லங்களிலும் இல்லாமல் போய்விட்டனர் ?


அடிப்படையாக அணைவிவகாரம், ஒரு காலக்கெடுவுக்கு உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும். தேர்ந்த பொறியியல் நிபுணர்களின் சிபாரிசுப் படி அமைந்த, சுப்ரீம்கோர்ட்டின் முடிவுக்கு இரு மாநிலங்களும் உட் பட வேண்டும்!

அதுவரை, இரு மாநில மக்களும் நல்லுறவுடன் இசைந்து வாழ அனைத்து தரப்பிலும், உடணடியாக, முயற்சி எடுத்தாக வேண்டும்! 


தெருவில் அடித்துக் கொள்வது, பிரச்சினை தீர்வுக்கு உதவாது என்பதை புரிய வைக்க வேண்டும்! செய்வார்களா?
=======================================================
My related article:   Click here
=======================================================

No comments:

Post a Comment