Thursday, June 26, 2014

இல்லாதவருக்கு பிறந்த நாள்

26/6/1956 


இன்று உனக்கு பிறந்த நாள்!
நீயே மறைந்தபின்,
இந்த நாளில் உனக்கு நான் என்ன செய்யட்டும்?

இன்றாவது, நீ என்னுடன் இருக்க விழைகிறேன்!
உனக்கு வாழ்த்தாவது சொல்லலாமல்லவா?
ஏனெனில், அதை ஏற்றுக் கொள்ளும்
உன் அழகான புன்னகையை காண விழைகிறேன்!

அன்பு விஜி!
உனக்கு என்ன பரிசளிக்கட்டும்?
எனது கண்ணீர் உனக்கு பிடிக்குமா?
கனத்த இதயம் பிடிக்குமா?
வாழ்த்து பிடிக்குமா?
புரியவில்லை!

நீ இங்கே விட்டுச் சென்ற சந்தோஷம், சிரிப்பு,
உன்னுடன் வாழ்ந்த பல உன்னத கணங்கள்
ஆகியவற்றையே உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன்!

ஏற்றுக் கொள்!

என் காலம் முடியும்வரை,
உன் படத்தின்முன் அமர்ந்து,
உன் அன்பை, அரவணைப்பை அசைபோடுவேன்!
காய்ந்து போன நதியின் அழிந்து போன தடத்தை,
பொட்டை வெயிலில் ரசிக்கும் கிறுக்கன் போல!
சொச்ச வாழ்க்கைக்கு இதுவே போதும்!

இந்த பிறந்த நாளில்,
உன் அருகே இருக்கும் தேவதைகள்
உனைக் கட்டியனைத்து முத்தமிடட்டும்-உனக்கு
வாழ்த்துப் பா பாடட்டும்!
என் வாழ்த்தையும் ஏற்றுக் கொள் – என் அன்பே!


My dear Viji!


I wish you were here today
even for just a little while
so I could say Happy Birthday "Viji"
and see your beautiful smile.

The only gifts today will be
the gifts you left behind;
The laughter, joy and happiness...
precious memories...the best kind.

Today I'll do my very best
to try and find a happy place...
struggling to hide my heavy heart
and the tears on my face.

I'll sit quietly and look at your picture
thinking of you with love;
hoping you're doing ok
in Heaven up above.

May the angels hold you close and
sing you a happy song...
and I'll be sending wishes to you
today and all year long.

Tuesday, June 24, 2014

என்னில் என்ன பார்க்கிறாய்?

ஒரு பெண்ணிற்கு திருமணம்!
என்னில் எதைப் பார்க்கிறாய் என்றது திருமணம்.

சுகத்தை, மரியாதையை, சௌகர்யத்தை என்றான் – அவன்
பாதுகாப்பை என்றாள் – அவள்
ஒத்தாசைக்கு ஒருத்தி என்றாள் - மாமியார்!
கடமை முடிந்தது, இனி கடன் அடைக்கனும் என்றார் - அப்பா!
என்போலன்றி நீயாவது சுகமாயிரு என்றாள் - அம்மா!
கார் விற்பதற்கு தோதான  நேரம் என்றார் – கார் டீலர்!
ஒரு ஃப்ளாட்டிற்கு ஆள் தேத்தியாச்சு என்றார் – ரியல் எஸ்டேட்காரன்.
“தண்ணி பார்ட்டி எப்ப என்றனர் - அவன் நன்பர்கள்!
ஆஹா.. புன்ன(ந)கைத்தார் - ஜூவல்லர்!
ஆடித்தள்ளுபடி என்றார் - ஜவுளியார்!
LCD யா LED யா என்றார் – வஸந்த் அண்ட் கோ!
No Transfer – சீறினார் பெண் வேலைபார்க்கும் HR!
சுவற்றை காலி செய்தனர் – PIN UP பெண்கள்!
அட்மிஷனுக்கு இப்போதே அப்ளிகேஷன் வாங்கு என்றனர் – பள்ளியில்!

பத்து வருடம் கழித்து, திருமணம் அதே கேள்வியைக் கேட்டபோது,
குர்குரேயையும் –கிரிக்கட் பந்தையும்
தேடிக் கொண்டிருந்தனர் – குழந்தைகள்.


போ அப்பாலே.... பேச நேரமில்லை என்றான் அவன்!
சலிச்சிடுச்சி- இது குக்கரில் எத்தனையாவது விசில் என்றாள் அவள்!

இருபது வருடம் கழித்து அதே கேள்வி!


பசங்களின் Boy friend / Girl friend  கவலையே  பெரிசாயிருக்கு!
நடுவே  நீ வேறேயா...?
ஹோமிற்கு போய் அம்மா அப்பாவைப் பார்க்கனும்
பிறகு வா என்றனர் இருவரும்!

முப்பது வருடம் கழித்து...
அதே கேள்வியைக் கேட்க வந்தது திருமணம்!

வீட்டில் பேரமைதி!
தனிமையில் இருவரும்!
அவள் நல்லா இருந்தால் போதும் என்றான் அவன்!
அவர் நல்லா இருந்தாலே போதும் என்றாள் அவள்!!

கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வந்தது திருமணம்
அதே கேள்வியுடன்!

அப்படியெல்லாம் இந்த வீட்டில் எவரும் இல்லை!
போய்வா என்றனர் யாரோ!!


Monday, June 23, 2014

சண்டை

மக்கள் ஏதாவது ஒரு காரணத்தை உத்தேசித்து, அடுத்தவர்களுடன் சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.  நிரம்பவும் ‘நல்ல ஆட்கள் போல காட்டிக் கொள்ளும் மனிதர்கள் கூட தனக்கென வரும் பொழுது, ஈகோ பிராண்ட ஆரம்பித்து, ரௌத்ரதாரிகளாகி விடுகின்ன்றனர்.

தனி நபர்களுக்குள் சண்டை, குழுக்களுகிடையே சண்டை, குழுக்ளுக் குள்ளேயும் சண்டை, ஊருக்குள்ளே, ஊர்களுக்கிடையே, உறவுகளுக் கிடையே என அலுக்காமல் சலிக்காமல் ஆர்வத்தோடு ஓயாது சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த சண்டை இலக்கணத்தை, மாவட்டம், மாநிலம், நாடு என எங்கு விரிவுபடுத்திப் பார்த்தாலும் பொருந்தி வரும்.

விலங்குகளுக்குள்ளும் சண்டைவரும். அவையனைத்தும் உணவு, பாலுறவு, எல்லை மூன்று விதங்களுக்குள் அடங்கிவிடும். ஆனால், மனித இனத்திற்கு மட்டும் சண்டைக்கான காரணங்களுக்கு அளவே இல்லை. சும்மா, டைம்பாஸிற்காகக் கூட சண்டை போட்டுக் கொள்வார்கள் போல.

நாம் எதற்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டும், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை போன்ற நற்குணங்களை கைக்கொண்டால், அமைதிதானே மிஞ்சும் என்ற ‘தத்துவ விசாரணைக்குள் நுழைய வேண்டாம்.  மிகப்பெரிய மகான்களும், அவதார புருஷர்களும் முயன்று தோற்றுவிட்ட ஒரு விஷயத்தை ஏன் ஆராய வேண்டும்?

குறைந்த பட்சமாக ‘உதைத்துக் கொள்வதற்கு என சில வழிமுறைகளை (அக்காலத்தில், போரில், இரவுக்கு மேல் சண்டையில்லை, பெண்டிரையும்-குழந்தைகளையும் விட்டுவிடுதல் போல) வகுத்துக் கொண்டு, அதற்குள்ளாக சண்டையிட்டுக் கொண்டால் பரவாயில்லை.

சண்டையிட்டுக் கொள்வதில் பல தினுசுகள் இருக்கின்றன.

-காபி டம்ளரை ‘டொம் என வைத்தாலோ அல்லது ‘சாப்பிட வரலாம் என பொத்தாம் பொதுவாக அழைப்பு வந்தாலோ, மனைவி, கணவனிடம் சண்டைக்குத் தயார் என அர்த்தம்.

-யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிட மறுத்து (வரும் வழியில் ஒரு கட்டு கட்டிவிட்டு வருவது  வேறு விஷயம்) ஆபீஸ் விட்டு வந்ததும்  ரூமிற்குள் போய் புகுந்து கொண்டால் கணவன், மனைவியிடம் சண்டை என அர்த்தம்.

-“வந்தவர்களை ஏன் குறை சொல்லனும், நம்ம சரக்கு சரியில்லை என வசனம் வந்தால், மாமியார் மருமகள் மீது சண்டைக்கு தயார்.

-சுவற்றைப் பார்த்து உட்கார்ந்து கொண்டு, எவரிடமும் பேசவில்லை என்றால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது சண்டை.

-கண்டும் காணாமல் சென்றால் நண்பர்களுக்கிடையே சண்டை.

-ஜாடைமாடையாக பேசினால் உறவுகளுக்கிடையே சண்டை.

-சர்வ தேச விவகாரங்களில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஒரு அரசாங்கம் சொன்னால்,  சண்டையில் யார் பக்கம் ‘சைடு எடுப்பது குறித்து இன்னமும்  முடிவெடுக்க வில்லை என அர்த்தம்.

-உலகில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்- மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வந்தால், ‘பெரியண்ணண் குண்டு போடத் தயார் என அர்த்தம்.

-என் மீது வீண்பழி சுமத்தாதீர்கள். தொண்டர்களும்-மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு அரசியல்வாதி சொன்னால், கூலிப்படை ஏவி விடப்படுகிறது என்று பொருள்.

தற்போதெல்லாம் போர்களில், பல யுக்திகள் வந்துவிட்டாலும், ‘சில பாரம்பர்ய போர் முறைகளை இன்னமும் வழக்கொழிந்தபாடில்லை.

அந்தக் காலத்தில் பெண்களுக்குள் சண்டை வந்தால், அடுத்தவள் முடிக்கு வந்தது ஆபத்து! சிண்டைப் பிடித்து இழுத்துக் கொள்வர். பின்னலைப் பற்றிக்கொண்டு விட்டால் குரங்குப் பிடிதான். ஒரு பத்து பேர் வந்து பிடுங்கி விட்டால்தான் ஆயிற்று.

ஆண்களுக்கு உபயம் ‘கழிகளும், முஷ்டிகளும் .

கட்சிகளில் சண்டை வந்தால், அவர்களுக்கு என சில பிரத்யேகமான் அஸ்திரங்களை வைத்திருக்கின்றனர். அஸ்திரங்களைக் கொண்டே எய்தவர் யார் என கண்டுவிடலாம்.

சில கட்சியினருக்கு, உட்கட்சி சண்டை வந்தால், நாற்காலிகளுக்கு வநத்து ஆபத்து!   நாற்காலியின் கால்களைப் பிடித்து சுழற்றி எதிராளி மீது வீசியெறிந்தால், ரெண்டு பல்லாவது போகனுமல்லவா?

வேறு சில ‘மைக்மோகன்களுக்குஒலி பெருக்கி மீது தீராக் காதல். அதன் கழுத்தைத் திருகி, பிடிங்கி எதிராளி மண்டை மேல் ஓங்கி போடுவர்.

வேறு சிலர், குண்டாந்தடிகளை எங்கே மறைத்து வைத்து கொண்டுவருவார்களோ தெரியாது. சில சமயம் முதுகுக்கு பின்னாலிருந்து அரிவாள் வெளிவரும்.

இவையெல்லாம் ‘அசைவ போர் முறைகள். சில ‘சைவ யுக்திகள் இருக்கின்றன. சில கட்சியினருக்கு, சண்டைவந்ததும், அடுத்தவன் கட்டியிருக்கும் வேட்டி மேலே அலாதி பிரியம் வந்துவிடும். ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அடுத்தவன் வேட்டியை உருவினால்தான் நிம்மதி. மல்லுக்கு நின்றாவது வேட்டியை பிடுங்கி உருவியாக வேண்டும். திகம்பர சாமியார்கள்.

சில குடிமகன்கள்  இருக்கின்றனர். அவர்களுக்குள் சண்டை வந்தால், என்ன தோன்றுமோ தெரியாது! அடுத்தவன் காதைப் பிடித்து கடித்து துப்பிவிடுவான். ‘ஏண்டா...., காது என்னடா பண்ணிச்சு உண்ணை? அதைப் போய் ஏன் கடிக்கிறாய் என  எவரும் கேட்க முடியாது. இன்னும் சில அதீத சண்டையாளிகள் இருக்கின்றனர். சரக்கு ஏறிவிட்டால், காதை மாத்திரமில்லை; வேறு ஒன்றையும் கவ்விக் கொண்டுவிடுவர்.

சிலருக்கு, இந்த மாதிரியான காலாவதியான டெக்னிக்குகளில் நாட்டம் இல்லை. அவர்களுக்கு தலைவர்கள் மேலே, பாதரட்சைகளை விட்டெறிவது ஃபேஷன்.  குறி தவறாமல் மேலே படுகிறதோ இல்லையோ, ஒரு விளம்பரம் கிடைக்குதில்ல....

அவ்வளவு ஏன்? FB –ல் சில கமெணன்ட்கள் வரும் பாருங்கள். அடாடா... 
படிப்பதற்கு இரு கண்கள் போதாது. இந்த விஷயத்தில் அமெச்சூர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க முடியாது. ஆசிட் தோய்ந்த வார்த்தைகள் சரளமாக விழும். சில சென்சிடிவான சப்ஜட்டுகள் இருக்கின்றன. சாகபட்சினிகளும் பூச்கிகளும் அந்தப் பக்கம் போகாமல், அதைத் தொடாமல் நகர்ந்து கொண்டால், இரவுத் தூக்கம் உத்தரவாதம்.

சண்டைகளுக்காண காரணங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. அமைதிக்கும் சமாதானத்திற்கும்தான் காரணம் தென்படவேயில்லை.

Monday, June 16, 2014

இறந்தபின் பால் ஊற்றுவது எதற்காக? - சத்குரு...

கடைசியில ஒரு வாய் பால் ஊத்த வர மாட்டியா” என வெளிநாட்டிற்குச் செல்லும் பேரனின் கன்னத்தை தடவும் பாட்டிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் பிறந்தவுடன் முதல் உணவாகும் பால், இறுதி வரை வாழ்கையில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இறப்பிலும் நம் வாழ்வுடன் ஒன்றிவிட்டது. இது குறித்து சத்குரு என்ன சொல்கிறார்? படியுங்கள்.
கேள்வி
சத்குரு, ஒருவர் இறந்த மூன்றாவது நாளில், அவருக்கு பால் அல்லது நீர் ஊற்றுகிறோமே… எதற்காக?
சத்குரு:
இறப்பிற்குப் பின் வரும் மூன்றாவது நாளில் பால் அல்லது நீரை ஒருவரை புதைத்த இடத்திலோ, எரித்த இடத்திலோ அர்ப்பணிப்பது பாரம்பரியமாக நாம் செய்துவரும் சடங்காக உள்ளது. அவர்கள் இறந்துவிட்ட பின் உங்களால் ஏதும் செய்ய முடியாத நிலையிலும், அவர்களுக்கு உணவூட்ட வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான தேவை உங்களுக்கு ஏற்படுகிறது. நீங்கள் நீர் ஊற்றினாலும், பால் ஊற்றினாலும் அல்லது உணவே கொடுத்தாலும் அதை நுகர்வதற்கு ஒரு உடலால் மட்டுமே முடியும். உடல் இல்லாத ஒருவரால் இவற்றையெல்லாம் வைத்து ஒன்றும் செய்ய முடியாது.
அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது.

ஆனால் இதுபோன்ற சடங்கு, உயிர் வாழ்பவர்களிடத்தில் ஒரு ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு விதத்தில் பார்க்கும்போது, தனது பிராரப்த கர்மவினை (வாழ்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மவினை) தீர்ந்து போவதற்கு முன்னதாக ஒருவர் இறக்கும்போது அல்லது நிராசையுடன் அவர் மரணமடையும்போது, அந்த உயிருக்கு இதுபோன்ற அர்ப்பணிப்புகளை நாம் செய்யும்போது அவரது ஏக்கம் தணியக்கூடும். ஆனால் இது மரணமடையும் அத்தனை உயிர்களுக்கும் பொருந்தாது. சில வகை மரணங்களில் இது நிச்சயமான உண்மை. அதனால் இதனை பொதுவான ஒரு சடங்காகச் செய்துவிட்டார்கள்.
அனைத்திற்கும் மேலாக, நீங்கள் பாசமும் பற்றும் கொண்டிருந்தவர் இறந்துவிட்ட பிறகும், அவருக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற உங்களது ஏக்கம் உளவியல் ரீதியாகத் தணிகிறது. ஒருவேளை, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் கோபித்துக்கொண்டு, நீங்கள் அவருடன் பேசாமல் இருந்திருக்கலாம்; குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீர் கேட்டபோது, கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
நிச்சயமாக இறந்து போனவருக்கு நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் அதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. இறந்தவரை தன் சொந்தமாக பார்க்காமல் ஒரு உயிராக உங்களால் பார்க்க முடிந்தாலே ஒழிய அவருக்கு உங்களால் எதுவும் செய்ய இயலாது. அதனால்தான் நாம் காலபைரவ கர்மா என்னும் ஒரு செயல்முறையை தொடங்கினோம். இறந்த 14 நாட்களில் நாம் அந்த உயிரைத் தொட முடியும். நம்மால் வேறு ஒரு பரிமாணத்தில் அந்த உயிருக்கு தேவையானதைச் செய்ய முடியும்.
இந்தக் கலாச்சாரத்தில் நாம் பிறப்பையும் இறப்பையும் மிகச் சரியாக புரிந்து கொண்டோம். அதனை சரியாக கையாளவும் செய்தோம். உணர்வு மேலோங்கி இருக்கும் மரண வீட்டில் உங்களால் ஒரு உயிரை சரியாக கையாள இயலுவதில்லை.
இதுபோன்ற ஆன்மீக அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும், உடல் கடந்த பரிமாணத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்களின் விழிப்புணர்வில் கண்டுணர்ந்து வழங்கிய ஒன்று. இதுபோன்ற முறைகளை உருவாக்கியவர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டமைத்தனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு மேல், இதுபோன்ற சடங்குகள் அனைத்தும் அவை கூறப்பட்ட காரணத்தின் புரிதலின்றி, திரிந்து உருமாறிவிட்டது. அதுபற்றிய அறிவு இல்லாமல் மக்கள் அற்பமான செயல்களைச் செய்யத் துவங்கிவிட்டனர்.

Friday, June 13, 2014

இரவு முடிந்துவிடும்...(குறுங்கதை)

இரவு முடிந்துவிடும்...

மாலை நான்கு மணி. ஆட்டோக்களும், வேன்களும் பள்ளியிலிருந்து அள்ளிக் கொண்டுவந்த பிள்ளைகளை ‘அலமேலு அபார்ட்மென்ட்’ வாசலில் உதிர்த்துவிட்டு, அவசரம் அவசரமாக திரும்பிக்  கொண்டிருந்தன.

ஏராளமான கால்களையும், கொம்புகளையும், துதிக்கைகளையும் வைத்துக் கொண்டிருக்கும் ராட்சத விலங்கு போல, மேற்கிலிருந்து, ஒரு பிரம்மாண்டமான மழைமேகம், நகர்ந்து வந்து கொண்டிருந்தது!  அன்று முழுவதும் வறுத்தெடுத்த வெயிலைனைக் கண்டு, மேகங்கள் கடும் கோபமுற்றிருந்தன போலும். அவ்வளவு கரு மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருந்தன.

திடீரென வானிலை மாறியது. புழுதி பறக்க, அவேசமாக சுழன்றடித்தது. காற்று. சுழலில்  குளுமை ஏறியது.

‘அபார்ட்மென்ட்’ ன் மூன்றாம் மாடியில், படுக்கையறையில், கட்டிலின் நடுவே, முழங்கால்களுக்கிடையே முகத்தை புதைத்து, கைகளால் கால்களை கட்டிக் கொண்டு, வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அனு.

கோடை மழைத் தூரல்கள் அவேசத்துடன், வெக்கையை பழிதீர்த்துக் கொள்ள தீர்மானித்தது போல, வெறி கொண்டு ‘ஓ வென்ற இறைச்சலுடன் இறங்கியது. ஐந்தாவது மாடிக்கு மேல் மொட்டைமாடியில் போட்டிருந்த தகர ஷெட்கள், மழையின் அடி தாங்காது பித்து பிடித்தது போல சப்தமிடுவது, அனுவின் பெட் ரூமில் எதிரொலித்தது. பெரும் ஓசையுடன், நெஞ்சு கிடுகிடுக்க, இடைவிடாது பயமுறுத்தும் இடிகள்.

இந்த களேபரமான மழையை, எங்கோ டி.வி யில் பெய்யும் மழையைப் பார்ப்பது போல, சலனமற்று, எதைப் பார்க்கிறோம் என்ற இலக்கின்றி,, ஜன்னல்னூடே, மழையை ஊடுருவிப் வெறித்துக் கொண்டிருக்கிறாள் அனு. இப்படித்தான் இருக்கிறாள் கொஞ்ச நாட்களாக! பேசுவது, நடப்பது, அலுவலகம் செல்வது எல்லாம் முடுக்கி விடப்பட்ட பொம்மை போல. ஈர்ப்பின்றி, ஈடுபாடின்றி வெறுமைக்கு பிறந்தவள் போல நடந்து கொள்கிறாள்.

எதிர் ஃப்ளாட்டில் இருக்கும் வத்ஸலா சொல்லி சொல்லி மாய்ந்து போவாள். “உனக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் டீ! கடவுளுக்கு கண் இல்லை என்பது, சரிதான் போல. எப்படி இருப்ப டீ நீ!  நீ இருக்கும் இடமே கலகலப்பாகிவிடுமே! இப்படி தனியே,  நடைப் பிணமாக இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போற? பழையபடி கொஞ்சம் பேசு, சிரி டீ! அழுதாவது தீர்த்துவிடு. இப்படியே கல்லு மாதிரி ஏன் இருக்கே?’

மௌனம்தான் அனுவிடமிருந்து பதிலாக வரும்


ஆரம்ப ஆவேசம் தனிந்து இப்பொழுது சீராக,  நின்று நிதானமாக பெய்யத் துவங்கியிருந்தது மழை.

நெட்லானை மீறி, முகத்தில் வந்து விழுந்த மழைத்துளி ஒன்றினை ஒற்றி எடுத்தாள் அனு. விரல் நுனியில் எடுத்த துளியை கண்களில் தெளித்துக் கொண்டாள்.

மழைத்துளி ஒவ்வொன்றும் மேகத்தை விட்டு புறப்படும் பொழுது என்ன நினைத்திருக்கும்? எங்கே, எப்பொழுது, எப்படி விழப்போகிறோம் என்பது அவற்றிற்குத் தெரியுமா? வெளியே கவணித்தாள். வானிலிருந்து ஈர்க்கு ஈர்க்காக கீழே இறங்கும் குச்சிகளாகத் தெரிந்தனவேயன்றி, துளிகள் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. மழைத் துளிகளுக்காக பரிதாபப் பட்டாள். எவ்வளவு நிமிட வாழ்க்கை அவற்றிற்கு? மேகத்தை விட்டு விலகி, தரையில் மோதி கரையும் வரைதானே அவற்றின் வாழ்வு? எங்கே விழப்போகிறோம் என்பது தெரியாத கண நேர வாழ்வு! சாக்கடையிலா? ஏரியிலா? குளத்திலா? எங்கு சங்கமம்? தெரியாது. இல்லை கீழே விழும்போதே ஆவியாகிவிடுமா? அதுவும் தெரியாது.

நமது வாழ்க்கை கூட அப்படித்தானே? புறப்பட்ட நொடிதொட்டு மண்ணில் புதையும் வரை   நீடிக்கும் கணங்களே, நமக்கும் - மழைக்கும் வாழ்க்கை! அதற்குப் பின் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? தாயிடமிருந்து புறப்பட்டுவிட்டேன்-எந்தக் கணம் மண்ணில் புதைவேன்? சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.


சென்ற வாரம் வத்ஸலா, கிட்டத்தட்ட, அனுவை மிரட்டி, சைக்காடிரிஸ்டிடம் அழைத்துச் சென்றாள். அங்கே, கேள்வி மேல் கேள்விகள். எதை பேச அஞ்சுகிறாளோ, எதைப் பார்த்தால் பயப்படுகிறாளோ அவற்றைப்பற்றியே  கேட்டார் டாக்டர். பாதி கேள்விகளுக்கு வத்ஸலாவே பதில் சொல்லிவிட்டாள்.  ஒரு கட்டத்தில் வெறி கொண்டு கத்த ஆரம்பித்து விட்டாள் அனு.

“.....வேண்டாம்... எனக்கு எதுவும் வேண்டாம். ஆஸ்பத்திரியைப் பார்த்தாலே பயமாய் இருக்கிறது. ஆம்புலன்ஸ் சப்தத்தைக் கேட்டால் பயமாய் இருக்கிறது. மாத்திரையைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது... ஆப்பிளைப் பார்த்தால் கூட ஆஸ்பத்திரி நினைவுதான் வருகிறது!  எதுவும் பிடிக்கவில்லை! எனக்கு எதுவும் வேண்டாம்.. எந்த கவுன்ஸிலிங்கும் வேண்டாம்....”

பொறுமையாக கேட்டுக் கொண்டார் சைக்காடிரிஸ்ட். 

“பாருங்கம்மா... உங்களுக்கு இமோஷனல் மைன்ட், லாஜிக்கல் மைன்டை டாமினேட் செய்கிறது. நடந்தவற்றை மீண்டும், மீண்டும் உங்களுக்கு நடந்த டிராஜிடியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அது பற்றி பேசுங்கள். என்னிடம், உங்கள் நெருங்கிய ஃப்ரண்டிடம் – யாரிடமாவது பேசுங்கள். பேசப்பேசத் தான், இமோஷனல் மைண்டிலிருந்து அந்த சம்பவம், விலகி லாஜிக்கல் மைண்டிற்கு வரும். அப்பொழுதான் உலகில் எதுவும் அசாதாரணமானது அல்ல என்பது புரியும்.

‘எல்லாம் எனக்கும் தெரியும்... உங்க பொண்டாட்டி செத்தால் எனக்கு சொல்லியனுப்புங்கள். நீங்கள் சொன்ன லாஜிக்கை உங்களுக்கே திரும்ப சொல்கிறேன்.  நீங்க எப்படி நடந்துக்கறீங்கன்னு பாக்கறேன். சாவு சகஜம்தான் என சிரிச்சுக்கிட்டே பொண்டாட்டிய கொண்டுபோய் மயானத்துல வச்சுட்டு வாங்க பாக்கலாம்....... பேசரது எல்லாத்துக்கும் சுலபம்.. அவுங்க அவுங்களுக்கு வந்தால் தெரியும், வயித்து வலியும் வாய் வலியும்.....”  கத்திவிட்டு, சட்டென டாக்டர் அறையை விட்டு வெளியேறினாள் அனு.

ஐந்தடி வெளியே போனவள், சட்டென திரும்ப உள்ளே வந்து, “ஐ யாம் சாரி... வெரி சாரி டாக்டர்....  நான் இந்த இலவச உபதேங்களைக் கேட்டுக் கேட்டு எரிச்சலாகிக் கிடக்கிறேன்..  என்னவாக இருந்தாலும் உங்களிடம் அப்படி பேசியிருக்க்க் கூடாது... ஆண்டவன் உங்களை நல்லா வச்சிருக்கட்டும்... ஐ யாம் சாரி...”  வெளியேறினாள் அனு.

அதற்கு அப்புறமும், டாக்டரிடம் பத்து நிமிஷம் பேசி விட்டுத்தான் வந்தாள் வத்ஸலா. கையில் மாத்திரைப் பட்டைகளுடன்.

எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். வீட்டில் கதவைத் திறக்கும் பொழுது, ‘மன்னிச்சுக்கோடி வத்ஸலா... உன்னை எம்பாரஸிங் பொஸிஷனில் மாட்டிவிட்டுடேன்..’ என்றாள். “ச்சீ... அப்படிப் பேசாதே.. அப்படியாவது மனசைவிட்டு கொஞ்சம் கத்தினியே... அதுவே போதும்.. இந்தா, இந்த மாத்திரைகளை, லேபிளில் எழுதியபடி சாப்பிடு” என்றாள்.

இரவுக்கானது தூக்க மாத்திரை போலும்.. அன்று நாலு மணி நேரம் நன்றாகத் தூங்கினாள்.


இன்னமும்  மழை விட்டபாடில்லை. வெறித்த பார்வையை விலக்கவில்லை அனு.  

அவள் கணவன், வரதராஜனுக்கு மழை என்றால் கொண்டாட்டம். குழந்தை போல மழையை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு சலிக்காத விஷயம். மொட்டை மாடியில் சேகரிக்கப்படும் நீர் வழியே வேகமாக வெளியே கொட்டி, செம்மண் நிறத்தில் சாலையில் வழிந்தோடுவதைக் கூட ரசிப்பான். வானத்தை அண்ணாந்து பார்த்து, மழை நீரை நேரடியாக கண்களில் வாங்கிக் கொள்வதில் ஆர்வம்.  ‘இதென்ன விளையாட்டு, சின்ன புள்ள மாதிரி... உள்ள வாங்க, ஜலதோஷம் பிடிக்கும்  என்றால், அவள் மேல் மழை நீரை பிடித்துத் தெளிப்பான்.

“ரசி அனு, ரசித்துப் பார், மழை ஆச்சர்யமாக இல்லை உனக்கு, இவ்வளவு நீரும் மேகத்துள் மறைந்திருப்பதும், நீக்கமற, எந்த பேதமும் இன்றி, எல்லா இடத்திலும் பெய்வதெல்லாம் உனக்கு ஆச்சர்யாமாய் இல்லை?”

“இப்படித்தானே காலாகாலமாய் பெய்து கொண்டிருக்கிறது? புதுசா என்னத்தப் பாத்தீங்க இப்ப?  ஒவ்வொரு வாட்டி மழை பெயும் போதெல்லாம், போய் பால்கனியில நின்னுக்கறது! இதுல ரசிச்சுக்கிட்டே இருக்கறதுக்கு என்ன இருக்கு?”

“இயற்கை எல்லாவற்றிலும் முழுமை அனு! அழகு! அதிசயம்! உன்னதம்! குறை செல்ல முடியாத சிருஷ்டி! கொஞ்சம் ஆழ்ந்து பார் தெரியும். மலை, வானம், இந்த பூமி, சூரியன், இந்த பிரபஞ்சம் எல்லாமே உனக்கு ஆச்சர்யமாக இல்லை?”

அவனுக்கு எல்லாவற்றையும் ரசிக்க முடியும்! பெரும் அருவியோ, அல்லது சிறு நீர்த் தாரையோ, எல்லா வற்றிலும் அழகைப் பார்ப்பான்.  நான் தான் அவனுடன் சேர்ந்து அனுபவிக்க தவறிவிட்டோமோ?

ப்ப்ச்ச்... எல்லாம் கனவு போல இருக்கிறது!

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வரதராஜன்  என்னும் மழைத்துளி, சடாரென் தரையில் மோதி, பூமியில் புதைந்து போயிற்று!..

எல்லம் சட்-சட்டென நடந்தது. ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்வாக வந்தான். ஒரு நாள், இரண்டு நாள்.. ஒரு வாரமாயிற்று.  உடல் நிலை பின்னோக்கி செல்வது, தீவீரமாகவும், வேகமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் உடம்புக்கு வருவது சகஜம்தானே என்று இலேசாக இருந்தாள். நிலைமையின் தீவீரம் உணர்ந்ததும் ஆடிப்போனாள் அனு! லட்சங்கள் கரைந்தன. டாக்ஸியில் போய், ஆட்டோவில் போய், சிட்டி பஸ்ஸில் போய்வந்தாள் ஆஸ்பத்திரிக்கு! மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளின் லிஸ்ட் ஒன்று தனியாக இருக்கிறது என்பது புரிந்தது!

வீட்டில், நிலைமை தலைகீழானது! பணம் எவ்வளவு வந்தாலும் போதவில்லை! லட்சம் லட்சமாக ஆஸ்பத்திரிக்கு கொட்டித் தீர்த்தாள். மூன்றே மாதம்; வரதராஜன் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டான்.

“வரது தன்னுடன் இல்லை” என்பதை  நம்ப மறுத்தாள் அனு. உண்மை உரைக்கும்போதெல்லாம், துக்கப் பந்து அடிவயிற்றிலிருந்து திரண்டு வரும். அழது புரள்வாள். அவள் சேலை, கண்ணீரால் நனைவதும், மூச்சுக் காற்றால் காய்வதும் தினசரி நிகழ்வுகளாகி  விட்டன.

கடவுள் என்னிடம் ஏன் இரக்கமற்றுப் போனார்? நினைக்க நினைக்க அவளுக்கு, ஆத்திரமும் ஆங்காரமும் மேலிடும். நிராதரவும் தனிமையும் அவளை சுழற்றி எறிந்தன. சுவற்றில் முட்டிக் கொள்வாள். வீட்டை கண்ணீரால் நிரப்புவாள். யாராவது வந்து, “நடந்தது எல்லாம் கனவு.. இதோ வரது வந்து கொண்டிருக்கிறான் என சொல்ல மாட்டார்களா” என சிறு பிள்ளை போல எண்ணுவாள். மணிக் கணக்காக காலில் முகம் புதைத்து நினைவுகளில் மூழ்கிக் கிடப்பாள். வத்ஸலா தான் அவளுக்கு ஒரே ஆதரவு.

நிஜத்தின் நினைவுகளை, மீண்டும்-மீண்டும் நினைவுகளில் வாழ்வது, நிஜத்தைக் காட்டிலும் இன்பமாய் இருக்கிறதா என்ன? அனு அப்படித்தான் சதா நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறாள்.

சிறு வயதில் இது நடந்திருந்தால்,  நிகழ்வையும் மீறி, வாழ்வில் எஞ்சியிருக்கும் பசுமைத் திட்டுக்கள் அவளை மாற்றியிருக்குமோ என்னமோ? முதுமையில் என்றால் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்திருக்கலாம்.வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற திருப்தியாவது இருக்கும்.  இது என்ன இரண்டும் கெட்டான் வயதில், இப்படி ஒரு அல்லல்?

வரது சொல்வான். “இதோ பார்... எல்லா கடமைகளையும் ஐம்பத்தைந்து வயதிற்குள் முடித்து விட வேண்டும். அதற்குப் பின், நமது வாழ்க்கை நமக்கே நமக்காக வாழ வேண்டும். காரை எடுத்துக் கொண்டு எங்கு செல்வதென தீர்மாணிக்காமல், மனம் போகும் இட்த்திற்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும். உறவுகளை திடீரென விசிட் செய்யனும். அவுங்களுக்கு ஆசை தீர ஏதாவது வாங்கிக் கொடுக்கனும்” என்பான்.

ஆசை விதைகளை அவளுள் தூவிவிட்டு, அவள் கனவு கண்ட ஐம்பது வயது நெருங்கிய உடன், அவன் சென்று விட்டான். கவர்ச்கிகளும், கடமைகளும்  விலகி, தாம்பத்யத்தின், திரண்ட  அனுபவத்தினை ருசிக்கும் காலத்தில், கலையம் உடைந்தது.

சட்டென நினைவுக்கு வந்தாள் அனு. மழை இன்னும் தூரிக் கொண்டுதான் இருந்தது.  அறை இருள் சூழ்ந்திருந்த்து.  மணி ஏழாகிவிட்டதா? சுவாமி விளக்கு கூட ஏற்றவில்லை, என்பது நினைவுக்கு வந்த்து. ‘ஆமாம்... விளக்கு ஏற்றினால் என்ன?  ஏற்றாவிட்டால்தான் என்ன? பூஜை செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? எல்லாமே பொருளற்றதாக இருந்தது அனுவிற்கு.

எல்லாவற்றையும் முறையாகத்தானே கடவுளுக்குச் செய்தோம். அதற்கு பலன் என்ன? வரதுவை கடவுள் அழைத்துக் கொண்டதுதானா?

மெல்ல எழுந்து முகம் கழுவிக் கொண்டு, விளக்கேற்றினாள். பழக்க தோஷத்தில் ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.

‘அஸ்மின் பராத்மன் நனு பாத்ம கல்பே
த்வமித்த முத்தா பித பத்ம யோனிகி
அன்ந்த பூமா மம ரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணு....|

தனக்குள் பேச ஆரம்பித்து விட்டாள் அனு...

சட்... என்ன ஸ்லோகம் வேண்டிக் கிடக்கிறது.. அவையெல்லாம் பொருளற்ற உளறல்கள்... கடவுள் இருக்கிறாரா இல்லையா? நம்புவதா வேண்டாமா? இருக்கிறார் என்றால் அவர் கடமைதான் என்ன?

ஏன் இப்படி இலக்கின்றி, தெளிவில்லாம் ஏதாவது யோசித்துக் கொண்டே இருக்கிறேன்... கடவுளை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருப்பதற்கும் பயமாய் இருக்கிறது...

அப்படியெல்லாம் வீண் சிந்தனைகளை வளர்க்காதே! ‘புனரபி ஜனனம்.. புனரபி மரணம்...’ சமீபத்தில் பியாஸ் நதியில் இருபத்து நாலு சிறு வயது மாணவர்கள், வெள்ளத்தில் சிக்கி இறந்தனரே? அவர்களது பெற்றோர் மனது எப்படித் துடித்திருக்கும்? கடவுளுக்கு ஒவ்வொரு ஜனனத்தையும்-மரணத்தையும் ப்ரொக்ராம் செய்துகொண்டிருப்பதுதான் வேலையா? கடவுள் படைப்பை நன்றாகத்தான் செய்திருக்கிறார். நாம் தான் சூழலைக்கெடுத்து, சாலைகளைக் கெடுத்து, பயிர்களைக் கெடுத்து, பன்றிகளைப்போல கணக்கின்றி பெற்றுத்தள்ளி ஈசல்கள் போல சாகிறோம். கடவுளுக்கு இதில் ஜோலியே இல்லை.

பிறந்த கணம்தொட்டு கல்லறையை நோக்கிய பயணம்தானே? இதில் 50 என்ன, 60 என்ன...

ம்ம்ம்ம்ம்ம்....  இப்படித்தான் ஒவ்வொரு இரவையும் குழப்பமான சிந்தனையுடன் அனு செலவழிக்கிறாள். எல்லாம் தெரிந்தது போல யோசிப்பாள்.. எதுவும் தெரியாதது போலவும் யோசிப்பாள்.

பொழுது விடிந்ததும்,  தினசரி கடமைகளில் மூழ்கி மரத்துப் போவதும்... இரவானதும் சிந்தனைச் சுழலில் சிக்கிக் கொள்வதுமாய் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

இன்றும் அப்படித்தான். மழை அவளுக்கு கடந்த காலத்தை தீவீரமாக நினைவூட்டிவிட்டது. தூக்க மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்.

காலை எழுந்து முகம் கழுவும் போது, தலைமுடியைக் கோதிக் கொண்டாள். அட... இன்னமும் கருப்பு முடி நிறையத்தான் இருக்கிறது! நரை தன் மனதில் தானா என்பது போல சிரித்துக் கொண்டாள். வாழ்க்கை இன்னமும் முடியவில்லை!









Saturday, June 7, 2014

Cancer and PH Value

Information drawn from various sources.



Cause Of Cancer & pH

Herman Aihara, in his book entitled "Acid & Alkaline" states that:
If the condition of our extra cellular fluids, especially the blood, becomes acidic, our physical condition will first manifest tiredness, proneness to catching colds, etc. When these fluids become more acidic, our condition then manifests pains and suffering such as headaches, chest pains, stomach aches, etc. According to Keiichi Morishita in his Hidden Truth of Cancer, If the Blood develops a more acidic condition, then our body inevitably deposits these excess acidic substances in some area of the body such so that the blood will not be able to maintain an alkaline condition which causes these areas such as the cells to become acidic and lowers in oxygen.

As this tendency continues, such areas increase in acidity and some cells die; then these dead cells themselves turn into acids. However, some other cells may adapt in that environment. In other words, instead of dying - as normal cells do in an acid environment - some cells survive by becoming abnormal cells. These abnormal cells are called malignant cells. Malignant cells do not correspond with brain function nor with our own DNS memory code. Therefore, malignant cells grow indefinitely and without order. This is cancer.

One of the least understood concepts of nutrition is understanding what acid and alkaline balance is. The cells of the human body depend on a balanced acid-alkaline pH. If any fluids are abnormal, digestive enzymes are rendered inactive, food does not digest properly, and allergic reactions can result. Food bound microorganisms such as yeast, bacteria, parasites; molds, viruses, etc. are liberated in the body, which puts stress on the immune system.
The body is largely made up of water, a medium which is biologically useful in allowing nutrients, oxygen and bio-chemicals to be transported from place to place. This water-based medium can have either acid or alkaline properties that are measured by a graduated scale called pH (for potential hydrogen), wherein 1.0 to 6.9 is considered acidic, 7.0 is neutral and 7.1 to 14.0 is alkaline. The lower the pH number, the greater the acidity, and the higher the pH number, the greater the alkalinity. Optimally, we want the fluids in our bodies to have a neutral or 7.0-7.2 pH level. Under 5.3 you can not assimilate vitamins or minerals, it must be above 6.4 for maximum utilization and weight loss. Urine or saliva pH levels should be tested in A.M. prior to eating, drinking, or exercising.

Why should we be concerned about pH levels? Since most of the body is water-based (50-60%), the pH level has profound effects on all body chemistry, health and disease. All regulatory mechanisms (including breathing, circulation, digestion, hormonal production) serve the purpose of balancing pH, by removing caustic metabolized acid residues from body tissues without damaging living cells. If the pH deviates too far to the acid side or too far to the alkaline side, cells become poisoned by their own toxic waste and die. Just as acid rain can destroy a forest and alkaline wastes can pollute a lake; an imbalanced pH corrodes all body tissue, slowly eating into the 60,000 miles of veins and arteries like corrosives eating into marble. If left unchecked, an imbalanced pH will interrupt all cellular activities and functions, from the beating of your heart to the neural firing of your brain.

You can raise your body’s alkaline level with the Neutralizer and all-natural soap. The Neutralizer cleanses the body internally by washing bacteria and toxins out of the bloodstream while helping to optimize pH levels. The soap cleanses the body externally by unclogging pores, which allow toxins to be excreted through the pores.

Our bodies contain many toxins, chemicals, parasites, fungus, bacteria and yeast that, if not cleansed from our system, tend to develop into major illnesses. Most people use soaps that contain animal fat causing the pores of the skin to clog, therefore trapping chemicals and toxins in the body.


Understanding pH Level and Why Many People Have Cancer and Other Diseases

According to the research of the world famous Dr. Enderlein, total healing of chronic illness ONLY takes place when and if the blood is restored to a normal, slightly alkaline pH. 

pH: what does it mean? pH is the abbreviation for Potential Hydrogen or the measurement of hydrogen-ion concentration of any solution. The higher the pH reading, the more alkaline and oxygen rich the fluid is. The lower the reading, the more acidic and oxygen deprived the fluid is. The pH scale is from 0 to 14 with 7.0 being neutral. Anything above 7.0 is alkaline; anything below 7.0 is acid.
To be considered healthy, human blood must maintain a narrow pH range of 7.365. Any slight variation means symptoms and disease. If blood pH drops below 6.8 or increases above 7.8, cells stop functioning and the patient dies. Blood pH is difficult to test, but home test kits are available to test urine and saliva pH. Optimum urine and saliva pH is 7.0 to 7.4. Test you pH each morning before food, drink or exercise.

If you have health problems, this is a sign that you are acidic. When the body goes into extreme acidosis, the kidneys start producing ammonia, which may cause the pH to test too alkaline. This condition is frequently found in older people and is the cause of the unpleasant odor in old folks homes. Treating for acidosis will help the kidneys to stop producing ammonia.

In 1964, only 1 person in 214 contracted Cancer. Today it is 1 in 3 females and 1 in 2 males. The determining factor between health and disease is pH. It is not uncommon for the average American to test between 4 pH to 5 pH. Oxygen levels in the body are directly related to pH. Increasing pH from 4 pH to 5 pH increases oxygen to the cells by ten fold. From a 4 to a 6 increases oxygen by 100 times and raising pH from 4 pH to 7 pH increases oxygen levels by 1,000 times.

Research shows that unless the body’s pH level is slightly alkaline, the body cannot heal itself. So, no matter what type of modality you use to take care of your health problem, it won’t be effective until the pH level is up. All drugs, medications and toxic chemicals have the effect of lowering the pH of the body. That is why there are side effects to every drug and none of them effect a cure.

When body pH drops below 6.4, enzymes are deactivated, digestion does not work properly; vitamins, minerals and food supplements cannot effectively assimilate. Acid decreases energy production in the cells, the ability to repair damaged cells, the ability to detoxify heavy metals and makes the body more susceptible to fatigue and illness. Your body pH affects everything.

Research has proven that disease cannot survive in an alkaline state, however, viruses, bacteria, yeast, mold, fungus, Candida and Cancer cells thrive in a low oxygen, / low pH environment. An acid pH can result from an acid forming diet, emotional stress, toxic overload, and/or immune reactions or any process that deprives the cells of oxygen and other nutrients. The body will try to compensate for acid by using alkaline minerals, like sodium from the stomach and calcium from the bones. This is the cause of Osteoporosis and a number of other diseases. If there are not enough minerals in the diet to compensate, a build up of acids in the cells will occur, resulting in symptoms like pain, Arthritis, Fibromyalgia, MS, Lupus, etc.

There are two factors that are ALWAYS present with Cancer no matter what else may be present. Those two factors are Acid pH and Lack of Oxygen. Can we manipulate those two factors that always have to be present for Cancer to develop and by doing so will that help reverse the Cancer? If so, we need to learn how to manipulate pH and Oxygen.

Remember that the pH number is an exponent number of 10; therefore, a small difference in pH translates to a BIG difference in the number of oxygen or OH-ions. In other words, blood with a pH value of 7.45 contains 64.9% more oxygen than blood with a pH value of 7.3. Cancer needs an acid / low oxygen environment to survive and flourish. Terminal Cancer patients are about 1000 times more acidic than they should be. This equates to dangerously low amounts of oxygen at the cellular level.

In the absence of oxygen, glucose undergoes fermentation to lactic acid. This causes the pH of the cell to drop even lower. Urine and saliva pH of Terminal Cancer patients almost always runs between 4.0 and 5.5. When the cancer goes into metastases the pH drops even lower. Our bodies simply cannot fight disease if our body pH is not properly balanced. In other words, it’s either alkalize or die. It’s that important!




http://myplace.frontier.com/~felipe2/id18.html

இந்நோய்  சம்பந்தமாக எதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கொடுப்பதற்கு காத்திருக்கிறேன்.

Thursday, June 5, 2014

ஜோதிடம் உண்மையா - சத்குரு சொல்கிறார்.

தன் சிறு வயதில் ஒரு ஜோதிடர் தன்னைப் பார்த்துச் சொன்ன ஆரூடம் பலித்ததை இந்தக் கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. அப்படியென்றால் “ஆரூடமும் ஜோசியமும் உண்மையா?” என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அதற்கான பதிலையும் தருகிறது இக்கட்டுரை…
சத்குரு:
வடக்கு கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இருக்கிறார்கள். உங்கள் முகத்தைப் பார்த்தே உங்கள் இறந்தகாலம் என்னவாக இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஞானிகள் அல்லர். போதகர்கள் அல்லர். ஆனால், அவர்கள் சொல்வது நம்புவதற்குக் கடினமான அளவுக்கு கச்சிதமாக இருக்கும். அவர்களிடத்தில் இயல்பாகவே அந்தத் திறமை இருக்கிறது.
என் தமக்கையின் திருமணம் தொடர்பாக வீட்டுக்கு ஒரு ஜோசியர் வந்திருந்தார். அவர் என் முகத்தைப் பார்த்தார். ‘நீ ஒரு கோயில் கட்டுவாய்’ என்றார்.

எனக்கு 17 வயது இருக்கும்போது, என் தமக்கையின் திருமணம் தொடர்பாக வீட்டுக்கு ஒரு ஜோசியர் வந்திருந்தார். அவர் என் முகத்தைப் பார்த்தார். ‘நீ ஒரு கோயில் கட்டுவாய்’ என்றார். ‘கோயில்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருக்கும் கோயில்களுக்குள் நுழைந்ததுகூட இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் கோவில்களைத் தகர்ப்பேனே தவிர, நானாவது கோயில் கட்டுவதாவது’ என்று அதை நிராகரித்தேன்.
ஆனால், ஏழெட்டு வருடங்களில் தியானலிங்கம் கோயில் கட்டுவது என்று தீர்மானித்தபோது, அன்றைக்கு வீட்டுக்கு வந்த ஜோசியர் பற்றி நினைத்து ஆச்சர்யப்பட்டேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டதற்காக வருத்தப்பட்டேன்.
வெறும் பத்துக்கும், இருபதுக்கும் ஆரூடம் சொல்பவர் ஒருவருக்கு முன்கூட்டித் தெரிந்திருந்த ஒரு விஷயம் எனக்குத் தெரியவில்லையே என்று அவமானகரமாக உணர்ந்தேன். ஏன் அப்படி ஆனது? கோயில்கள் பற்றி எனக்கு இருந்த அவநம்பிக்கையில் அமிழ்ந்து இருந்ததால், என் பார்வை பழுதாகிவிட்டதைப் புரிந்து கொண்டேன்.
சுய விருப்பு-வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால்தான், தெளிவு கிடைக்கும். கண்மூடித்தனமாக எதையும் ஆதரிக்கவும் கூடாது, எதையும் நிராகரிக்கவும் கூடாது என்று புரிந்து கொண்டேன்.
தென் இந்தியாவில் சில குடுகுடுப்பைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சில சமயம் சில காட்சிகள் தோன்றும். தங்களால் பார்க்க முடிந்ததை விடிவதற்குச் சற்று முன்பாகவே உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று அறிவித்துவிட்டுப் போவார்கள். நீங்கள் அதை நம்புவீர்களா, மாட்டீர்களா என்பது அவர்கள் பிரச்சனை அல்ல. உங்களிடம் பணம் கேட்டுக் கூட அவர்கள் நிற்கமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இப்போது அருகிவிட்டார்கள். மூடநம்பிக்கையை சார்ந்திருக்கும் ஜோசியர்கள் பெருகிவிட்டார்கள். கிரகங்களைக் கட்டங்களில் சிறைப்படுத்தி, உங்கள் எதிர்காலத்தை இவர்கள் தீர்மானிக்கப் பார்ப்பார்கள்.
ஒரு கைக்குட்டைக்குக்கூட சில அதிர்வுகள் உண்டு. அந்த விதத்தில் நட்சத்திரங்கள், கோளங்கள், கிரகங்கள் இவற்றுக்கும் அதிர்வுகள் உண்டு. பூமி மீது கொஞ்சம் ஆதிக்கம் உண்டு. அதற்காக, உயிரற்ற அந்த ஜடப்பொருள்கள் உயிருள்ள நம் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடுவதா?
உங்களுக்குத் தெளிவும், ஸ்திரத் தன்மையும் இல்லையென்றாலும், எது வேண்டுமானாலும் உங்களை ஆட்டி வைக்க முடியும்.

உங்களுக்குத் தெளிவும், ஸ்திரத் தன்மையும் இல்லையென்றாலும், எது வேண்டுமானாலும் உங்களை ஆட்டி வைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள உயிரற்ற ஜடப்பொருள்கள் தங்களைப் போல் உங்களை ஆக்குவதற்கு முயற்சி செய்தால், அதற்குப் பணிந்து போவீர்களா? அல்லது புத்திசாலித்தனத்துடன் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்வீர்களா? நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களை எந்தக் கிரகம் என்ன செய்துவிட முடியும்? எந்தச் சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால், நீங்கள் பயப்படமாட்டீர்கள்.
இந்திய எல்லையில், ஆர்மி அவுட் போஸ்ட். அங்கே சங்கரன்பிள்ளைதான் மேஜர்.
ஒருநாள், ஒரு சிப்பாய் பதைப்பதைப்புடன் ஓடி வந்தான். சல்யூட் அடித்தான். ‘மேஜர், நம் கூடாரங்களை எதிரி ராணுவத்தினர் எல்லாப் பக்கங்களிலும் சூழந்துவிட்டனர்’ எனப் பதறினான். சங்கரன்பிள்ளை தன்னம்பிக்கை மிளிர, உற்சாகத்தோடு சொன்னார், ‘நல்லதாகப் போயிற்று. எந்தத் திசை பார்த்துச் சுட்டாலும், ஓர் எதிரி வீழ்வானே!”
நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்றோ, எப்படி வாழ வேண்டும் என்றோ யாரோ ஒருவர் காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதன்படி வாழ்வீர்கள் என்றால், உங்களுடைய புத்திசாலித்தனத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
விழிப்புணர்வு இல்லாமல், நீங்கள் தூவிய பல விதைகள்தான் பூச்செடிகளாகவும், விஷச் செடிகளாகவும் உங்களைச் சுற்றி வளர்ந்து நிற்கின்றன. நீங்களே அவற்றுக்கு வழி கொடுத்தீர்கள் என்பதை நீங்கள் உணர்வதில்லை என்பதுதான் பிரச்சனை.
கிரகங்கள் எப்படி நகரும் என்பது கணிக்கக்கூடியது. ஆனால், மனிதனையும் முன்கூட்டியே கணிப்பது அவனை ஜடப்பொருளாகக் கருதுவதற்குச் சமம். விழிப்புணர்வுடன் இருந்தால், உங்களை முன்கூட்டி யாரும் தீர்மானிக்க முடியாது.
கிருஷ்ண தேவராயன் நாட்டின் மீது எதிரிகளின் படை திரண்டு வந்தது. எதிரிகள் தங்கள் கடவுளின் பெருமையை நிலைநாட்டப் போரிடுவதாக நம்பினர். அதனால், தங்கள் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
கிருஷ்ண தேவராயருக்குத் தெனாலிராமன் ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார்.
‘அரசே… எதிரிகளின் சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. பன்றி ரத்தத்தைத் தீண்டிவிட்டால், அதைச் சுத்தம் செய்து நீக்கும் வரை, கடவுளின் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். அதை நமக்குச் சாதகமாக்கிக் கொள்வோம்’ என்றார்.
தெனாலிராமன் ஆலோசனைப்படி, பன்றிகளின் குருதி பெரும் பாத்திரங்களில் நிரப்பப்பட்டது. யானைகள் மீது, போர்க்களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எதிரிகளின் மீது வீசப்பட்டது. அப்போது கடவுளின் பெயரை உச்சரிக்க முடியாமல் திகைத்து நின்றதால், எதிரிகளால் தாக்கப்பட்டனர். வீழ்த்தப்பட்டனர். அங்கு மூடநம்பிக்கையை புத்திசாலித்தனம் வெற்றி கொண்டது.
கவனமோ, விழிப்புணர்வோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு வேண்டுமானால், கிரகங்கள் தீர்மானித்தபடி வாழ்க்கை நடக்கலாம். கொஞ்சம் விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுபவர்கள் தங்கள் வாழ்க்கையின் திசையைத் தாங்களேதான் தீர்மானித்துக் கொள்ள விரும்புவார்கள்.
அதற்காக கிரகங்களுக்கு நம் மீது ஆதிக்கமே இருக்காதா? இருக்கும். ஆனால் ஜோசியத்தில் மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு அல்ல. நீங்கள் உறுதியாக இருந்தால் எந்தக் கிரகம், எந்தத் திசையில் இடம் பெயர்ந்தால் என்ன? உங்கள் உடலின் மீது உங்களுக்கு முழுமையான ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனத்தை ஆளத் தெரிந்துவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்றால், பிறப்பு, மரணம் எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ள முடியும்.
ஆரூடம் என்பது வானிலை அறிக்கை போன்றது. எல்லா சமயங்களிலும் கணிப்பு சரியாக இருப்பதில்லை. மழை பெய்யும் என்று அது சொல்லட்டும். ஆனால் நான் நனைவேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நனைவதா வேண்டாமா என்பது என் கையில்தானே இருக்கிறது?