Monday, November 28, 2016

PUNJAB JAIL BREAK

பஞ்சாப்-பாடியாலாவிலிருந்து ஆறு தீவீரவாதிகள் தப்பித்துள்ளனர். சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல மிக மிகத் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, கைதிகளை எடுத்துச் சென்றுள்ளனர்
.
தாக்குதல் நடத்தியவர்களின் திட்டம், அவர்களது மோடஸ் ஆபரண்டி அவ்வளவு துல்லியம்.
இவ்வளவு கடுமையான தீவீரவாதிகள் அடைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறையில், எவ்வளவு மெத்தனமாக, அதிகாரிகளும், காவலர்களும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது. இம்மாதிரியான சிறைகள் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்திருக்க வேண்டும்? எப்படி விதிமுறைகளில் இவ்வளவு தொய்வாக இருந்திருக்கிறார்கள்? சிறைக் காவலர்கள் கேஷூவலாக இருந்திருக்க வேண்டும் அல்லது கூட்டுச் சதியாக இருந்திருக்க வேண்டும்.
எங்கே ஓட்டை, எங்கே கருப்பு ஆடுகள், ஏன் சுணக்கமாகச் செயல்பட்டார்கள் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும்; ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்.
எல்லை மானிலமான பஞ்சாபில் கூட, இப்படி ஒரு Drama நடத்த முடியும் என்பது உள்துறை அமைச்சகத்திற்கு விடப்பட்ட ஒரு சவால்.
பஞ்சாப் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விலகி இயல்பாக இருந்து கொண்டிருக்கும் ஒரு மானிலம். இத்தகைய தீவீரவாதிகள் தப்பித்திருப்பது, அம்மானிலம் மீண்டும் தீவீரவாத்த்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்ளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மானிலத்தில் தேர்தல் நடக்க வெகுகாலம் இல்லாத சூழலில், இவர்கள் தப்பித்து இருப்பது, ஜனநாயக சக்திகளுக்கு கவலை தரும் அம்சம்.
இந்த தப்பித்தலுக்குப் பின்னால், பாகிஸ்தான் இருக்கிறது என திருவாய் மலர்ந்திருக்கிறார் துணை முதல்வர் சுக்பிர்சிங் பாதல். பாகிஸ்தான் கை இருக்கிறதோ இல்லையோ, கைதிகள் இந்தியச் சிறையில்தானே இருந்திருக்கிறார்கள்? அந்தச் சிறையிலிருந்துதானே தப்பித்திருக்கிறார்கள்? எதிரிகள்(பாக்) என்றால் அப்படித்தான் இயங்குவார்கள்.
ஏற்கனவே PoK ல் ஒரு போர்முனை ஏற்படுத்தியிருக்கிறது பாக். இன்னொரு முனையாக பஞ்சாபையும் தேர்ந்தெடுப்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். காஷ்மீரைத் தவிர்த்து, பஞ்சாபையும் பதட்டமான மானைலமாக மாற்ற பாகிஸ்தான் முயலும்தான். மானில அரசும், மத்திய அரசும்தான் நெருப்பாக இருக்க வேண்டும். தப்பித்த தீவீரவாதிகள் வெளியேற நேபாளம் ஒரு நல்ல வழி. அதை சீல் வைத்திருப்பார்கள் என நம்புவோம்.
நடந்தவற்றை பாடமாகக் கொண்டு, இனியாவது விதிமுறைகளையும், கண்காணிப்பையும் சுணக்கமின்றை மேற்கொள்ள வேண்டும்.
தப்பித்த ஹர்மீந்தர் மின்டூ என்ற தீவீர வாதியை தில்லியருகே கைது செய்திருப்பதாக சமீப தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகளை, விரைவாக விசாரணைக்குட்படுத்தி, தண்டனை தாருங்கள். போட்டுத் தள்ளுங்கள். நிரூபிக்கவில்லையனில் விடுதலை செய்யுங்கள். எத்தனை நாட்கள் அன்டர் டிரையலில் வைத்திருப்பது?

Friday, November 25, 2016

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு



1. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்பார்த்தீர்களா?

....இது போன்ற ஏதாவது ஒரு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்தேன். மோடி தொடுத்திருக்கும் துல்லிய தாக்குதல் இது. இது போன்ற துணிச்சலான முடிவை வேறு எந்தப் பிரதமரும் எடுத்திருக்க முடியாது....

2. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?

அறிவிப்பு வந்த கணம் முதற்கொண்டு பணத்தை மாற்றவும், வங்கியிலிருந்து எடுக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டன. ஆனாலும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுளது உண்மையே. 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இத்தகைய சிரமங்கள் தவிர்க்க இயலாது. ஆனால் இது தாற்காலிகமானதே!

3. போதிய முன்னேற்பாடுகள் செய்திருந்தால், சிரமங்களை தவிர்த்திருக்கலாம்தானே?

முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, இது போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கவே முடியாது. முன் கூட்டியே 500 நோட்டுக்களை அச்சடித்திருந்தாலோ, ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்திருந்தாலோ, விஷயம் வெளியே கசிந்திருக்கும். எந்த ஊழல் வாதிகளை நோக்கி குறிவைக்கப்பட்டதோ அவர்களுக்கே செய்தி போயிருக்கும். அதன்பிறகு திட்டத்தைச் செயல்படுத்தினால் பலன் கிடைத்திருக்காது.

4. 16 நாட்களாகியும், நிலைமி சீராகவில்லை..இது மோடி அரசின் நிர்வாகத்தோல்வி என எதிர்க்கட்ச்கள் சொல்கின்றனவே?

நிலைமை சீராகிக் கொண்டே வருகிறது. நக்ஸைலட்கள் நிறைந்த பகுதிகள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கெல்லாம், பணம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுளது. எனவே நிர்வாகத்தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் சிரமங்களைக் குறைக்க, அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. பணத்தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும். அதுவரை ஏதாவது ஒருவழியில் சிரமம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

5. இத்திட்டம்பற்றி, தொழிலதிபர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என கேஜ்ரிவால், மம்தா குற்றம் சாட்டுகிறார்களே?

இது வெறும் அரசியல் குற்றச் சாட்டு. எல்லாவற்றையும் சந்தேகிக்கும் ஊடகங்கள்கூட, திட்டத்தின் ரகசியம் பற்றி பாராட்டியுள்ளனவே? ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்னாளில், ஒருவருக்கு தெரிந்தால் கூட, நாட்டிற்கே தெரிந்துவிடும்.

6. இதன் மூலம் கருப்புப்பணம் ஒழியாது என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்களே?

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டிக்களில், 14 லட்சம் கோடி 500,1000 நோட்டுக்களே. இதில் 4 லட்சம் கோடி கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாலு லட்சம் கோடி அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். பினாமி பெயரில் இருந்தால்கூட அரசால் கண்டுபிடிக்க இயலும். வங்கியில் வந்துவிட்டால், அது வெள்ளைதானே? மக்கள் தங்கள் பணத்தை டிபாஸிட் செய்வதால், பண இருப்பு அதிகரிக்கும். இதனால் சிறு, நடுத்தர தொழில்கலீல் வங்கிகள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். கடன் தாராளமாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் கூடும். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது தவறானது. ரியல் எஸ்டேட்டிலும், தங்கத்திலும் கருப்புப் பணம் முடங்குவது குறையும். லஞ்சம்-ஊழல் குறையும். ஆனால் அடுத்த அடுத்த ஆறு மாதத்தில் பொருளாதாரத்தில் சிறு வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.

7. அரசின் முடிவை திரும்பப் பெறவேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடுகின்றனரே? பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதே?

கருப்புப் பணத்தை ஒழிக்க மோடி எடுத்துள்ள நடவடிக்கையால், அரசியல் வாதிகளும், லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகளும் நிலை குலைந்துள்ளனர். இதனால், இத்திட்டத்தை வாபஸ் வாபஸ் பெறவேண்டும் என அரசியல் வாதிகள் போராடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இத்திட்டம் நாட்டிற்கு நல்லது. சிரமங்கள் யாவும் தாற்காலிகமானவையே.

8. இந்த நடவடிக்கையை, தேசபக்தியோடும், தேசப் பாதுகாப்போடும் ஏன் பாஜக தொடர்புபடுத்துகிறது?

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அச்சடித்த கள்ளப்பணம், நம் நாட்டில் பயங்கரவாத்த்தை வளர்க்கிறது என்பதற்கு எல்லா ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை அதன் தாக்கம் இருக்கிறது. தீவீரவாதிகள் மூலமாகக் கொண்டுவரப்பட்ட கள்ளப்பணம் ஐந்து முதல் ஆறு ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்கு, பயங்கரவாதிகள் 2.5 கோடிதான் செலவு செய்துள்ளனர். ஆனால் 164 பேர் செத்தனர். 300 பேர் காயமுற்றனர். இம்மாதிரியான பயங்கரவாதிகளின் செயல்களினால் நாட்டிற்கு 6.60 லட்சம் கோடி இழப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு புழக்கத்தில் விட்டுள்ள நமது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத்தாள்களாகிவிட்டன. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்திற்காகவே, அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

9. அரசின் நடவைக்கை தவறான முடிவு. நிலைமை சீராக ஏழு மாதங்காள் ஆகும் என சிதம்பரம் சொல்கிறாரே?

படிப்படியாக நிலைமை சீராகும் என்பதே உண்மை. அவர் கூறும் ஏழு மாதங்களுக்குப் பின்னர், பொருளாதாரம் வேகமாக வளரும் என்பதையும் சேர்த்து அவர் கூற வேண்டும்.

10. சாதாரண மக்களின் பணத்தை, பெருமுதலாளிகளுக்கு கொடுக்கத்தான் இத்திட்டம் என்று சொல்கிறார்களே?

இது போன்ற அப்பட்டமான பொய்களை, அரசியல் வாதிகள் மட்டுமே கூறமுடியும்.

11. இந்த நடவடிக்கை மூலம், ராகுல் காந்தி பிரதமராவதற்கு மோடி வழிவகை செய்துவிட்டார் என பேசத் தொடங்கியுள்ளனரே?

இது அசட்டுத்தனமான பேச்சு. மக்கள், அரசின் நடவைக்கையை ஆதரிக்கிறார்கள். மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில், எதிர்த்திருந்தால், இம்மாதிரி மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருக்க மாட்டார்கள்.


12. ரொக்கம் இல்லாத இந்தியாதான் பிரதமர் மோடியின் நோக்கமா?

ரொக்காம் குறைவாகவும், வங்கிப் பரிவர்த்த்னை அதிகமாகவும் இருக்கும் நாடு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும். ஒரே காலகட்டத்தில், இந்த முயற்சியை செய்வது ரொக்கம் இல்ல்லாத நாட்டை உருவாக்க அல்ல. கருப்புப் பணத்தை – கள்ளப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை.

------------------------------------------------------------------------------------

மேற்கண்ட பேட்டி, புகழ்பெற்ற ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்களால் அளிக்கப்பட்டு,
தி இந்து (தமிழ்) இதழில் 25/11/16 அன்று, பக்கம் 16ல் வெளிவந்துள்ளது.(Brief)

இத்திட்டத்தை, ஊழல் பேர்வழிகளும், கருப்புப் பண முதலைகளும், பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தை நேரடியாகவோ-மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களது தீய நோக்கம் பாதிக்கப் படுகிறது.

ஆனால் இந்தியாவின் நலம் விரும்பிகளும், நல்ல மனிதர்களும், கருப்புப் பண-கள்ள நோட்டுகளை எதிர்ப்பவர்களும், Left Parties ம், மேற் சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பது துரதிர்ஷடம்.

தயவு செய்து, அரசின் இத்திட்டதை ‘உள் நோக்கத்தோடு’ எதிர்ப்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது நிலவும் சிரமம் தாற்காலிகமானதுதான்.
சாதாரண, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள் அவர்கள். கருப்புப்பண, ஊழல், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர், சாதாரண சிரமங்களை தங்களுக்கு அரண் போலப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். நீலிக்கண்ணீர்

வடிக்கும் இந்த உத்தம(!) மனிதர்கள் எல்லாம், மக்கள் வேறு பல துயரத்தில் இருந்த போது எங்கே சென்றிருந்தார்கள்? மும்பையிலும், மற்ற இடங்களிலும், மக்கள் கொத்து கொத்தாக சாகும் போது மௌனம் காத்தவர்கள் அல்லது ஒப்புக்கு கண்டித்தவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்வோம். பொறுமை காப்போம்.




Wednesday, November 23, 2016

லைஃப் சர்டிபிகேட்

இது நவம்பர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தாங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அரசாங்கத்திற்கு நிரூபிக்க வேண்டிய மாதம். இதுவரை இருந்த நடைமுறை, பென்ஷன்தாரர்கள், தாங்கள் ‘உயிரோடுதான் இருக்கிறோம்’ என்ற ஒரு சுய டிக்ளரேஷன் கொடுத்தால் போதுமானது.  அப்படிக்கொடுக்க வில்லை யெனில், பென்ஷன் நிறுத்தப்படும்.

இயல்பிலேயே காத்துக் கிடப்பதற்கும், முடிவில்லா வரிசையில் நிற்பதற்கும் தயங்கும் சோம்பல் பேர்வழி நான்.  இந்த ஒரு காரணத்தாலேயே, ‘அல்லோபதி டாக்டர்கள் பக்கம்’ செல்வதைத் தவிர்ப்பேன். ஆனால் பென்ஷன் விஷயத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு என்ன ஆப்ஷன் இருக்கு? எனவே, நான் பென்ஷன் வாங்கும் தபால் நிலையத்திற்கு டிக்ளரேஷன் கொடுக்கச்  சென்ற பொழுது, அங்கே கண்ட இமாலய மக்கள் வரிசையைக் கண்டு, மிரண்டு திரும்பிவிட்டேன். கூட்டம் லைஃப் சர்டிபிகேட் கொடுக்கும் கூட்டம் மட்டுமல்ல; தபால் நிலையத்தில் 500/1000 நோட்டுக்களை டிபாசிட் செய்யும் கூட்டமும் கூட.

கூட்டம் சற்றே குறையட்டும், பிறகு செல்லலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். குளத்தின்மேல் சினம் கொண்டு கால்கழுவாமற் போனால், குளத்திற்கு என்ன நட்டம்?  எனவே  நேற்று, எனக்கு  பென்ஷன் வழங்கும் தபால் நிலையத்திற்கு, டிக்ளரேஷன் கொடுக்கச்  சென்றேன்.

சம்பந்தப்பட்ட தபால் நிலைய அலுவலரை அணுகியபோது, ‘இனி நீங்கள் இம்மாதிரியான சர்டிபிகேட்டெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை’ என்றார். ‘ஆஹா.. என்னே என் பாக்கியம். மனிதர்களை அரசாங்கம் நம்ப ஆரம்பித்துவிட்டதே’ என குதூகலிக்க ஆரம்பிக்கமுன், அவர் வேறொரு தகவலைச் சொன்னார். அதற்குப் பதிலாக,  உங்களது ‘ஆதார் எண்ணையும்’ ,  ‘கைவிரல் ரேகையையும்’ பதிவு செய்யணும் என்றார். அதுதான் புதிய ஆணையாம் .

‘ஹாங்.. ஒவ்வொருவருடமுமா?’

‘ஆமாம் ஒவ்வொரு வருடமும்.’

‘அட கடவுளே! சரி அதற்கு யாரைப் பார்க்கணும்?’

பென்ஷன் ஆபீஸில் செய்யணும். ஆனால் உங்களது கைரேகையை பதிவு செய்யும் கருவி இங்கேயே இருக்கு. உங்களது ஆதார் கார்டின் நகலை எடுத்துக் கொண்டு, அதில் உங்களது பிபிஓ எண், சேவிங்க்ஸ் அக்கவுண்ட் நெம்பர், காண்டாக்ட் தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதி சமர்ப்பியுங்கள்.

நல்ல வேளையாக, யதேச்சையாக ஆதார் அட்டையை கையோடு எடுத்துச் சென்றதால்,  அதை நகலெடுத்து, அவர்கள் கேட்ட ஜாதகக் குறிப்புகளைக்  நிரப்பி எடுத்துக் கொண்டு சென்றேன். எனக்கு முன்னே, சில வயதானவர்கள் ‘கைவிரல்களை’ கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். என் முறை வந்ததும்,  ஜாதகக்  குறிப்புகளைக் கொடுத்துவிட்டு, காத்திருந்தேன். பின் அந்த அலுவலர் ‘பயோமெட்ரிக் அட்டென்டன்ஸில்’ பயன்படுத்தும் ஃப்ங்கர் பிரிண்ட் ஸ்கேனரை, டிராயரிலிருந்து எடுத்தார்.

‘போன வருஷம், எந்த விரல் ரேகையை வைத்தீர்கள்?’

இது என்ன இம்சை!

 ‘தெரியலை மேடம். மறந்திடுச்சே..’

ஒரு பார்வை பார்த்தார். பிறகு, வலதுகை கட்டைவிரலில் ஆரம்பித்து, ஒவ்வொருவிரலாக, ஸ்கேனரில் வைத்து பொறுத்திப் பார்த்தார். 

காய்கறி நறுக்கியே, கைவிரல் ரேகைகள் எல்லாம் கருத்துப் போயிருந்த்து.  காய்களை நறுக்குவதற்குப் பதிலாக, விரல்களை நறுக்கி, நானாகப் போட்டுக் கொண்ட ‘ரேகைகள்’ ஏராளம். அதானால் அந்த மிஷின் குழப்பிப் போய்விட்டதோ என கிலி பிடித்துக் கொண்டது. அதிலும், இன்று ‘வாழைப்பூ’ நறுக்கியிருந்தேன். இதனால், விரல்கள் எல்லாம் மேலும் கருப்பாகியிருந்தன. கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. கையை இவ்வளவு கருப்பாகவா வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?

வலதுகையின் எந்த விரலும் மேட்ச் ஆகாததால், அதை விட்டுவிட்டு, இடதுகை விரல்களை மேட்ச் செய்ய ஆரம்பித்தார் அலுவலர். ஒருவேளை இந்தக்கையின் ரேகையும் ஒத்துப் போகவில்லையெனில், மாற்றாக என்ன செய்வது எனக் கவலை வந்துவிட்டது. மீண்டும் ஆதார் நிலையத்திற்கே போகச்  சொல்வார்களோ என்ற பீதி தலைசுற்ற வைத்தது.  ஏனெனில் ஆதார் அட்டை வாங்குவதற்குள் உயிர் போய்விடும்.

சினிமா க்ளைமேக்ஸ் போல பதட்டம். 

இடதுகை ஆட்காட்டி விரலை வைக்கும் பொழுது, திடீரென கர்ஸர் வேறுஒரு விதமாக சுழன்று, ‘ஆதார் டாடாபேஸில்’ ரேகையை அடையாளம் கண்டுகொண்டது  சாஃப்ட்வேர்.  
விரல் ரேகை மறைந்து, ஆதார் டேட்டா பேஸில் பதிந்திருந்த, அடியேனின் திருவுருவம் திரையில் தோன்றியது. அந்த உருவம் ‘பேய்’ போல பயமுறுத்த, அந்தப் படம் நீங்கள் தானா என அந்த அலுவலர் கேட்டுவிடுவாரோ என அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்லவேளை, அப்படி ஏதும் நிகழவில்லை.  ஆதார் புகைப்படங்களைப் பார்த்துப்பார்த்து பழகிவிட்டார் போல.

விஷயம் அத்தோடு முடியவில்லை. ‘உங்களது மொபைலுக்கு ஒரு ‘OTP’ வந்திருக்கும் பாருங்க.. அதைச் சொல்லுங்க..’

இது அடுத்தகட்ட சோதனை போலும். சாதாரணமாக வெளியே செல்லும்போது ஸ்மார்ட்ஃபோனை எடுத்துச் செல்லமாட்டேன். ஒரு பேஸிக் மாடல் சின்ன ஃபோனைத்தான் எடுத்துச் செல்வேன். தொலைந்தாலும் சின்னதோடு போகும். இன்று என்னவோ ஸ்மார்ட் ஃபோனையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதனால் OTP யை சொல்ல முடிந்தது. இன்றைய தினம் அதிர்ஷ்ட தினம்தான்.

‘சார்...அடுத்த வருஷம் வரும்போது, மறக்காமல் இடதுகை ஆட்காட்டிவிரலையே நீட்டுங்க..’

‘சரிங்க..’

ஒருவழியாக நான் உயிரோடுதான் இருக்கிறேன் என அரசாங்கத்திற்கு நிரூபித்துவிட்டு, பென்ஷனையும் வாங்கிக் கொண்டு ஒருவழியாக வீடு திரும்பினேன். இந்த சமாச்சாரம் முடியஅரை நாள் செலவாயிற்று.

எனது சந்தேகம் இதுதான். ‘ஆதார் அட்டை’ ஆப்ஷனல்தான் என்பதில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது ஏன்? கம்ப்யூட்டர்மயமாகியபின் வேலை சுலபமாவத்ற்குப் பதிலாக, இன்னும்-இன்னும் காம்ப்ளிகேட் ஆவது ஏன்?

ஒரு ‘ஆப்’ வெளியிட்டு, அதன் மூலம், மூத்த குடிமகன்களை அலையவிடாமல், வருடம் ஒருமுறை மொபைல் ஃபோன் மூலம் வீட்டிலிருந்தபடியே கைரேகையை பெற்றுக் கொண்டு உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டால் என்ன?
போஸ்டாபீஸில் பென்ஷன் பெறும்  நபர்களாவது அங்கே வைக்கப்படிருக்கும் ஸ்கேனர் மூலம் பதிவேற்றலாம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் எல்லோரும் ‘பென்ஷன் ஆபீஸுக்கு’ செல்வது சாத்தியமா? அந்த அளவு கட்டமைப்பு இருக்கிறதா? (பென்ஷன் ஆபீஸில் வேலை முடிப்பது என்பது வேதாளம்-விக்ரமாதித்தன் கதைபோல, கொடுமையான அனுபவம்)

வங்கிகளில் பென்ஷன் பெறுவோர் என்ன ஆவார்கள்? அங்கு இந்த ஸ்கேனரைப் பார்த்ததில்லையே?

ஏதோ, உடம்பில் கொஞ்சம் தெம்பிருப்பதால் அவர்கள் இழுத்த இழுப்பிற்குச் செல்லமுடிகிறது. நடக்கமுடியாமல் இருப்போர்,  நோயுற்றிருப்போர், விபரமறியாத மக்கள், விதவைகள்... இவர்களெல்லாமும் கூட இப்படி அலையத்தான் வேண்டுமா? 

மூச்சு வாங்காமல், இருபதடி தூரம்கூட நடக்க முடியாத கிழங்களை இந்த பாடுபடுத்த வேண்டுமா? உலகில் எங்காவது மூத்தகுடிமகன்களை இப்படி இழுத்தடித்து, இம்சைப்படுத்தும் சிஸ்டம் இருக்கிறதா என்ன?

வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ ஸ்கேனர் இல்லையெனில், பென்ஷன் அலுவலகத்திற்குச் சென்று, டிஜிடல் லைஃப்சர்டிபிகேட் பதிவு செய்து, பின் அவர்கள் தரும் (VM-NICSMS) ப்ரணாம் எண்ணை கொண்டுபோய், பென்ஷன் தரும் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். இதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமா இந்தியாவில்?


இறந்துபோன ஆட்களுக்கு பென்ஷன் பணம் போய்ச் சேரவேண்டியதில்லைதான். அதற்கான வழிமுறைகளை எளிதாகச் செய்யாமல், எதற்காக இப்படி படுத்துகிறார்களோ?