Monday, September 26, 2011

BSNL AND VRS


BSNL is in deep crisis.  Its market share is dipping every month. Its  market share in mobile communications came to 14% from 25%.  Wire line connections, which are costlier and difficult to maintain are surrendered in alarming proportion.    This financial year losses may be around 6000 crores.  This company's wage bill alone comes around 50% of their revenue.  

Government of India is determined to put the BSNL in coffin.  They have buried Air India by placing purchase order for new air crafts; now trying to bury BSNL by not placing any purchase order for equipment for its mobile communication expansion project.

BSNL's problem are many.  Its officers and workers are not at all prepared to face the  challenge.  I agree that government / Managements policy are, in no way near to bail out the company. Yet, the staff and the management, with the existing asset and man power, could provide a better service and can catch the Broadband market thro' ADSL.  But, they do not have any aggressive plan to catch the Broadband market, which has got great potential.

Our engineers and staff prefer to talk more and do less. The pity is, most of its engineers, I repeat ENGINEERS are just matriculates. Its Accounts Officers have not passed even  'INTER'.  This company is happy to have matriculation auditors.  

The worst part is, most of the executives are corrupt. They are minting company's money in all possible wrongful ways. If I say bluntly, they are looting the company’s money.  How can they  motivate anybody?

Not to say about the staff,   majority attend the office by 1100, take tea, go to lunch; use the company's phone and internet and go home by 1630.  

In the present scenario, with all reasons, I do not believe, the company can revive ever.With multiple trade unions and associations at all levels, only a blame game is taking place.   

At this juncture, the management is proposing VRS.

Since most of the trade unions are “left” minded, no union, in principle, will accept this Scheme.  Curiously the leadership of all unions fails to notice the mood of the workers.  I am sure, that at lease 50% of workers will accept the scheme, with  the smiling faces.  It will be better if the trade unions accept the fact and bargain for the better compensation for VRS optees.  

I wish better sense prevail.

Saturday, September 24, 2011

கூடங்குளம் - MY VIEWS


 1.      நிலைம:
  
தமிழகத்தின் பீக் அவர் மின்சாரத்தேவை கிட்டத்தட்ட 10000-11000 மெகாவாட். ஊற்பத்தி வெறும் 8000 மெகாவாட். வீடுகளுக்கு இரண்டு மணி  நேரமும், தொழிற்சாலைகளுக்கு 40% மின் வெட்டும் அமுலில் உள்ளன.  தொழிற்சாலைகளை முடக்கி வைத்துவிட்டு நாம் எப்படி தொழில் வளர்ச்சி காணப் போகிறோம் என்பதை  அரசியல் வாதிகள் தான் விளக்க வேண்டும்.
சென்ற ஆட்சியில் திரு கருணானிதி அவர்களும், இந்த ஆட்சியாளர்களும் இந்த வருட இறுதியில், கூடங்குளம் அணு உற்பத்தி நிலையம், 1000 மெகா வாட் உற்பத்தியினைத் துவங்கும் என்றும், பின் மின் பற்றாக்குறை நிலை ஓரளவு சீராகும் என கூறி வந்தனர்.

        2.     போராட்டம்:

இந்த நிலையில், இந்த கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது, ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,  அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.  21.09.2011 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.


       3.      நிஜம்தானா?

அனால் இந்த தீர்மானத்தின், “அரசியல் கலக்காத  நேர்மை குறித்து சந்தேகம் வருகிறது. ஏனெனில், கூடங்குளம் அணுமின்நிலையத் திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த வர்கள் திரு கருணாநிதி அவர்களும், செல்வி ஜெயல்லிதா அவர்களும்.  ஒருவேளை உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப் படாவிட்டால், இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.

அல்லது மக்களை ஒருமுறை போராட்ட்த்தை கைவிடச் செய்துவிட்டு, பின்னால் பல்வேறு அரசியல், அதிகார யுக்திகளைக் கையாண்டு, மக்களை சமாளித்துவிடலாம் என்ற எண்ணமோ தெரியவில்லை. போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இனி எங்களது போராட்டம் மத்திய அரசை எதிர்த்துத்தான், மாநில அரசை எதிர்த்து அல்ல என அறிக்கை வெளியிட்டதலிருந்தே, இனி நட்த்துவதாக்க் கூறப்படும் போராட்ட்த்தின் திசைவழி எப்படி இருக்கும் எனத்தெரிகிறது.  ஒரு வேளை அப்பகுதி மக்கள் அனைவரையும் வேறு ஒரு பகுதிக்கு மாற்றி ‘குடியமர்த்தி விடுவார்களோ என்னவோ?

  
4.        4.            யாரிடம் கேடபது?

சரி... இந்த அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையிலேயே, அணு மின் நிலையங்கள் மூடப்பட வேண்டியது தானா? என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டும். இந்த கேள்விக்கான விடையினை அரசியல்வாதிகளிடம் பெறக் கூடாது.  அவர்கள் ‘எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதில் நிபுனத்துவம் பெற்றவர்கள். ‘எப்படிபேச வேண்டும் என்பது அவர்கள் ‘நாற்காலியில் இருக்கிறார்களா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து அமையும்.


தற்போது, இந்தியா - குறிப்பாக தமிழ் நாடு, கடுமையான மின்பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.  கடந்த பல ஆண்டுகளாக புது மின் திட்டன்கள் ஏதும் தீட்டப்படாத்து முக்கியமான காரணம்.  எங்கே மின் நிலையம் கட்ட திட்டமிட்டாலும், உடனே மக்களைத் தூண்டிவிட்டு “கட்டாதே... கட்டாதே.. மின் நிலையத்தினை கட்டாதே...  என கோஷமிட வைத்து, திட்டத்தினையே நிறுத்தி விடுவதில் வல்லவர்கள் ‘சிலஅரசியல் கட்சியினர்.  உண்மையில் நாட்டின் மேலும், மக்களின் மீதும் அக்கறை இருக்குமானால், விவசாயிகளுக்கு, அவர்களுக்கு திருப்தியான, போதுமான நஷ்ட்ட ஈடு வாங்கிக் கொடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்து, மின் நிலையம் அமைய வழிகாண்பதை விட்டு,  இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை அரசியல் ‘பிழைப்பு நடத்த கிடைத்த வாய்ப்பாகவே நமது அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

          5.      வேறு வழி ஏதும் இருக்கிறதா?

புணல் மின் நிலையங்கள், முழுவதுமாக அமைக்கப் பட்டுவிட்டன.  இனி இத்தகைய திட்டங்களுக்கு நதிகளும் இல்லை! தண்ணீரும் இல்லை.  ஜீவ நதிகளும் மிக்க குறைவு.  இதைவிட்டால், அடுத்து இருப்பது அணல் மின் நிலையங்கள்.  இந்திய நிலக்கரி தரம் குறைந்தவை.  ஹீட் எனர்ஜி குறைந்தவை. இறக்குமதியான கரிகள் தரமானதாய் இருக்கின்றன.  அது சரி... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நிலக்கரி கிடைத்துக் கொண்டே இருக்கும்? அதிக பட்சமாக ஐம்பது வருடம் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.  அதற்குப் பின்?

காற்றாலைகள் மின் உற்பத்தி, ஒரு சீராக இருக்காது!  மேலும் எல்லா காலத்திலும் கிடைத்துக் கொண்டே இருக்காது. சூரிய சக்தி, மிகுந்த செலவு பிடிக்க்க் கூடியது.  ஏராளமான இடம் தேவைப் படுவது.

நமக்கு இருக்கும் ஒரே தேர்வு, ‘அணு மின் சக்தி தான்.  குறைவான செலவில், குறைவான இடத்தில், கணிசமாக உற்பத்தி செய்யக் கூடியது.  

       6.      மூடத்தான் வேண்டுமா?

விஷயம் என்ன வென்றால், அணுமின் நிலையங்கள் முற்றிலும் பாதுக்கப்பானவைஎன எவரும் உறுதி கூறிட முடியாது.  அதுவும் ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து, அணுகதிர்வீச்சினால், அப்பகுதி மக்கள் சில பாதிப்புகளை அடைந்த பின்னரும், பிரான்சில் சிறிய அளவில் ஒரு அணு மின் நிலையத்தில், ஏற்பட்ட விபத்துக்குப் பின்னரும் மக்கள் கவலைபட ஆரம்பித்து விட்டனர்.


ஆனால், மின்சாரமின்றி உலக இயக்கமே இல்லை என்ற நிலையில், அணுமின்சக்திக்கு மாற்றாக உலக விஞ்ஞானிகள் ஏதேனும் கண்டுபிடிக்கும் வரை, அணு உலைகளை மூடுவது உசிதமாகத் தெரியவில்லை.  உண்மை என்னவெனில், அணல் மின் நிலையங்கள் வெளியிடும் புகையும், சாம்பலும் மனித குலத்திற்கு தீராத கேடுகளை செய்து கொண்டுள்ளது.

புவிக்கோளத்தின் துருவங்களில் உள்ள ஐஸ் பாளங்கள் காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன!  இதற்கு இம்மாதிரியான தொழிற் சாலைகள் காரணமில்லையா?  புவி வெப்பமடைவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்தியர்களாகிய நமக்கு விழிப்புணர்வு குறைவுதானே!

இருக்கட்டும்! நிலக்கரி,கச்சா எண்ணெய் கொண்டு மின்சாரம் தயாரித்தால், அதன் நச்சுக்கள் புற்று நோயினை உண்டாக்காதா என்ன?  அணல் மின்சாரம் மெல்ல சாகடிக்க, ‘அணு உடனடியாக!. வித்தியாசம் அவ்வளவே!

ஏற்கனவே, தமிழகத்தில் 2008 முதல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்ற்கு 40 - 55 சதம்  மின் தடை. பெருமாலான உற்பத்தித் தொழில்கள் 2 ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன! கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல தொழிற்சாலைகளை மூடி விட்டால், அதன் பின் விளைவுகள் பயங்கரமானது என்பது, நிஜமான அரசியல், பொருளாதாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.  


7 என்ன தான் முடிவு?

உண்மையில் விஞ்ஞானிகள், மற்றும் அதிகாரிகளின் கூற்றின்படி பார்த்தால், கூடங்குளம் அணுமின் திட்டம் மனித சக்திக்கு உட்பட்டு, பத்திரமானதாகவே கட்டப் பட்டுள்ளது என அறிய வருகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் விஞ்ஞானிகள மின்சாரத்திற்கும், எரிபொருளுக்கும் (பெட்ரோல் / டீசல்) மாற்று ஏற்பாடு கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுவரை நமது அணு உலைகளை பத்திரமாக இயக்கத்தான் வேண்டும் – நாட்டின், நாட்டு மக்களின், தொழில் துறையின் நலன் கருதி!


8.  வேறு ஆபத்துகளே இல்லையா?

மக்களை தூண்டிவிட்டு, அணு உலைகளை பற்றி இவ்வளவு கவலைப்படும், அரசியல் வாதிகள்,  இந்த பூமிக் கோளை, ஆயிரம் முறை திரும்ப திரும்ப அழிக்கும் அளவுக்கு உலக நாடுகள் சேர்த்து வைத்துள்ள ‘அணு ஆயுதங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? (இந்தியா உட்பட)

இத்தகைய ஆயுதங்கள் ஏதேனும் ஒரு ‘தீவீர வாதி யிடம் கிடைத்து விட்டால் என்னவெல்ல்லாம் நடக்கும் என விவாதிப்பார்கள?  

நாளும் பொழுதும் இந்த தீவீர வாத்த்தால் உயிரழ்ந்து கொண்டி ருக்கும் நூற்றுக் கணக்கான ‘அப்பாவி பொது மக்களைப் பற்றி ஏதேனும் கவலை உண்டா?


(நேற்று ஒரு டி.வி சேனலில் பார்த்தேன்.  ஒரு கிராமத்துப் பெண் கோபாவேசமாக மைக்கின் முன் பேசுகிறார்.  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடந்த ஒரு வெடி விபத்தில், பல பேர் கை-கால் இழந்து, பரிதாப மாக கிடக்கிறார்களாம்! அதேபோல கூடங்குளத்தி லும் நடந்துவிடுமாம்!  இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை மக்களிடம் எப்படி கட்டவிழ்த்து விட முடிகிறது? உண்மையில் அணு உலைகளைவிட ‘அணுக் கழிவுகள் தான் அபாயமானவை)


எனவே அரசியல் பிழைப்பு உத்திகளை கொஞ்சம்  தள்ளி வைத்து,  மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும் வரை அணு உலைகளை அனுமதித்து, தக்க சமயத்தில் அனைத்து அணு உலைகளையும் மூடுவது தான் சரி. 
  
உணர்ச்சிப் பிழம்பாக மாறாமல், சம்ப்ந்தப் பட்டோர் யோசிப்பார்களா?


Thursday, September 15, 2011

தமிழக “அரசு கேபிள் டிவி” யும் - DTH –ம்


நேற்று தமிழக அரசு DTH சேவைக்கான வரியினை 30% உயர்த்தியுள்ளது.  இந்த வரி உயர்வு DTH மார்க்கெட்டினை, குறிப்பாக சன் டைரக்ட், மற்றும் சன். டி.வி யினை அழிக்கும் நோக்கத்தோடு  அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கும் நோக்கத் தோடு செய்யப்பட்டுள்ளதா என சந்தேகமாக உள்ளது.
சன் டி.வி, தனது வருமானத்தில் 60% ஐ, சன் டைரக்ட் அமைப்பு மூலம் பெறுகிறது. (CNBC-TV18’s Ekta reports) நிதியாண்டு 2011-ல், சன்.டிவி யின் சந்தா வருமானம் 47% சதவிகிதம் உயர்ந்து, அதாவது 502 கோடி ரூபாய்களை தொட்டுள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், DTH தான். அதாவது DTH மூலம் கிடைக்கும் நடப்பு வருமானம் 288 கோடி உயர்ந்துள்ளது. கிட்ட்த்தட்ட 40% DTH வருமானம், தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. அதாவது 120 கோடி வருமானம், தமிழ் நாட்டிலேயே!
எனவே இந்த 30% வரி உயர்வு, அனைத்து DTH ஆபரேட்டர் களையும், முக்கியமான சன் டைரக்டையும் (அதன் மூலமாக சன் டி.வி யையும்) நிச்சயம் பாதிக்கும்.

தமிழ் நாட்டு பயனீட்டாளர்கள், DTH –னை விட்டுவிட்டு, பழையபடி, கேபிள் டி.வி க்கு மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த வரி உயர்வினால் பாதிக்கப்படும் இன்னோரு நிறுவனம் டிஷ்.டி.வி. இது தமிழகத்தில் 4% மார்க்கட் பங்கினைக் கொண்டுள்ளது.  தமிழக அரசு கொணர்ந்துள்ள ‘அரசு கேபிள் அமைப்பு மக்களுக்கு சகாய விலையில் தொலைக்காட்சி சானல்களை வழங்குவதற்காகவா அல்லது DTH சேவை தருபவர்களை, குறிப்பாக “சன் குழுமத்தை நசுக்குவதற்காகவா என்பது அனைவரும் யூகிக்கக் கூடியது தானே?
 இந்த வரி உயர்வு, அரசு வருமானத்தை பெருக்குவதற்காக செய்யப் பட்ட காரியமாக இது தெரியவில்லை. மாறாக, தமிழ் நாட்டு தொலைக்காட்சி பார்வையாளர்களில், கனிசமான வர்களை, சன்.டி.வி கொண்டுள்ளதால், இது அரசியல் நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் வேறேங்கும் DTH சேவைக்கு  இந்த அளவுக்கு வரி விதிக்கப் படவில்லை.
 பார்ப்போம்! DTH சேவை தருபவர்கள் தனது லாபத்தினை குறைத்துக் கொண்டு, பழையபடியே கட்டணம் வசூலிக்கப் போகிறார்களா அல்லது இரண்டு மாதத்திற்கு முன் தான் "சன் டைரக்ட்" தனது மாதச் சந்தாவினை ௨௦ ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில்,  போடப்பட்டிருக்கும் வரிக் கேற்றாற்போல சந்தா கட்டணத்தை மீண்டும் உயர்த்தி, வாடிக்கையாளர்களை இழக்கப் போகிறார்கள் எனபதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

ஆயினும், தமிழக அரசு, தனது அரசியல் விளையாட்டில், தரம் குறைந்த கேபிள் ஒளி பரப்பினை விரும்பாமலும், நீக்கமற அனைத்து சேனல்களில் அடியில் கேபிள் டி.வி காரர்கள் வருமானத்திற்காக "ஸ்குரோல்" செய்யும் விளம்பர வாசகங் களை சகிக்காமலும் "DTH " க்கு மாறிய பொதுமக்களை கவணத்திற் கொண்ட்தாகத் தெரியவில்லை!.

Friday, September 9, 2011

இறக்கும் நிலையில் இந்திய தந்தி


இன்று அலுவலகப் பணி நிமித்தமாக தொலைவில் உள்ள ஒரு தந்தி அலுவலகத்திற்கு சென்று வர நேர்ந்தது. உள்ளே சென்றால் பொதுமக்கள் யவருமில்லை.  கவுண்டரின் (Counter) உள்ளே, ஒரே ஒருவர் இருந்தார்.  அவரும் கூட தந்தி சம்பந்தமான வேலை ஏதும் செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவருக்கு இடப்பட்ட வேறு ஏதோ ஒரு பணியினைச் செய்து கொண்டிருந்தார். 

டெலகிராஃபிஸ்ட் என அழைக்கபட்டுக் கொண்டிருந்த அந்த அலுவலக பணியாளர், ‘மோர்ஸ் கோட்' அடிப்பதில் பயிற்சி பெற்றவர். எதற்காக பணியில் சேர்க்கப்பட்டாரோ, எதில் பயிற்சி பெற்றாரோ அந்த களத்திலிருந்து வேருடன் பிடுங்கப் பட்டு, சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பணியினை மேற் கொண்டிருந்தார்.


நினைவுகளை கொஞ்சம் ‘ரிவைண்ட் செய்து பார்த்தேன். அது, தொலைதொடர்புத்துறையின் ‘கற்காலம்.  செய்தி தொடர்புகளுக்கு ‘தபால்–தந்தி இலாக்கா மட்டுமே பொறுப்பேற்றிருந்த நேரம். தற்போதைய  “தொலைதொடர்பு இலாக்கா கூட ‘தபால்-தந்தி இலாக்காவில்  அடக்கம். பின்னர் தான் "தபால் தந்தி" யிலிருந்து ‘தொலை தொடர்பு தனியாக பிரிந்தது. அக்காலத்தில் சாதாரனர்களுக்கான கம்யூனிகேஷஷேன் ‘தபால் தான். அவசரமென்றால் தந்தி.

‘சார்... போஸ்ட்.. என்ற சப்தம், அக்காலத்தில் பலருக்கும்  தேனாக இனித்த  குரல். சொந்த-பந்தங்களிடமிருந்தோ, அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளுக்காகவோ, காத்திருந்து, கடிதங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.  காலை பத்து மணிக்கு, அனேகமாக எல்லா வீடுகளிலும் கேட்கும் செற்றொடர். “போஸ்ட் மேன் வந்துவிட்டு போய்விட்டாரா?” 

‘சார்... போஸ்ட்..என்ற பிரயோகத்தை பயன்படுத்தாத எழுத்தாளர்களே இல்லை என்று துணிந்து சொல்லிவிடலாம். அவ்வளவு பிரபலமான, தவிர்க்க இயலாத, ஒரு நைந்து போன வார்த்தை இது. 

தபால் அலுவலகங்களில், பிரதான இடத்தை தந்தி அலுவலகம் பெற்றிருக்கும். தபால் அலுவலகம், மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டு விட்டாலும், தந்தி அலுவலகம் திறந்தே இருக்கும். தந்தி அனுப்புவதற்காக எப்போதும் கூட்டம் காத்திருக்கும். போஸ்ட் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் ‘லேட் ஃபீஸ் பெற்றுக் கொண்டு பணியாற்றும் அலுவலகர் பலர் இருந்தனர். 

உடணடியாக செய்தி போய்ச் சேரவேண்டும் எனில், அக்காலத்தில் தந்திதான் வழி. தந்தி மணியார்டகள் கூட உண்டு.  கிராமப் புரங்களுக்கு தந்திகளை கொண்டு சேர்ப்பதற்காக, ‘மெஸஞ்சர்கள் எல்லாம் உண்டு. (இந்தியா விடுதலை ஆவதற்கு முன்னால் இவர்களுக்கு ‘ரன்னர்கள் என்று பெயர். இந்த ரன்னர்களை  சட்டப்படியாகவே எவரும் வழியில் தடுத்து நிறுத்தக் கூடாது.  சுடுவதற்கு கூட அதிகாரம் பெற்றவர்)

அக்காலத்திய தந்தி அலுவலகங்கள் நினவுக்கு வந்தன.  எந்த நேரமும் ‘ஒரு ஃபாக்டரி போல இயங்கிக் கொண்டிருக்கும், இந்த சென்ட்ரல் டெலெகிராஃப் ஆபீஸ்கள். டெலெகிராஃபிஸ்ட்கள் மோர்ஸ் கருவிகளுக்கு முன் அமர்ந்து, அபார வேகத்தோடு, துல்லியமாக ‘கட..கட..கட்டுக் கட..என செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.  பெரிய சைஸ் டைப்ரைட்டர்களைப்போல இருக்கும் “டெலி பிரிண்டர்களும், டெலக்ஸ் களும் ஓயாமல் செய்திகளை வாங்கிக் கொண்டும், அனுப்பிக் கொண்டும் இருக்கும்.  உள்ளே போனாலே பிரமிப்பாக இருக்கும். வேலை செய்தால் இந்த மாதிரியான அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என எவருக்கும் தோன்றும்.

தந்தி அலுவலகத்தின், இன்னொரு பக்கம் ‘பொதுத் தொலைபேசி கள் இருக்கும்.  பெரிய அலுவலகங்களில் நான்கு ஐந்து பூத்கள் கூட இருக்கும்.  பிரசவ அரையின் முன் காத்திருக்கும் "கணவர்கள்" போல தனது ‘கால்கள் (டிரங்கால் கள்) வரும் வரை தவிப்போடு காத்திருப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள், பாங்க் அலுவலகங்கள், வானிலை ரிபோர்ட்கள் என பலரிடமிருந்தும் தகவல்கள் பறந்து கொண்டிருக்கும்.  24 மணி நேரமும் பிஸியாக இருக்கும்.

“தகவல் தொழில்நுட்ப புரட்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்ட்து.  தபால் போய், ட்ரங்கால்கள் வந்து, அதுவும் போய், எஸ்.டி.டி வந்து, அதுவும் போய் செல்ஃபோன்கள் வந்து,  ‘செல்போனும் ஒரு கட்டைவிரலும் இருந்தால் ‘உலகமே உங்கள் கையில். செல்ஃபொன் இருந்தால், தந்தி அலுவலுகத்திற்கு மட்டுமல்ல, ‘பேங்க்குக் கூட போகத்தேவையில்லை. அனைத்தும் உங்கள் கட்டைவிரலில்.

பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாகவே இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சி, தந்தி அலுவலகத்தில் பணி புரிந்த ஆட்களுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?  ‘P&T யில் உத்தரவாதமான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், DOT –க்கு வந்து, பின் BSNL  ஆக மாறி, மத்திய அரசாங்கத்தின்  “தன் வீட்டுக் குழந்தையை தானே கழுத்தை நெரித்துக் கொல்லும் விந்தை கொள்கைகளின் காரணமாக, இந்த நிறுவனமும் (BSNL) நொடித்துப் போய், அபாயகரமான  நட்டங்களை சந்தித்துக் கொண்டு, அடுத்த வருடம் ‘சப்பளம் வருமா என கவலையுடன் இருக்கும் இந்த BSNL அலுவலகர்கள் நிலை பரிதாபமானது அல்லவா?.

‘டெலகிராஃபிஸ்ட்களின் விரல்கள் தாண்டவ மாடிய ‘மோர்ஸ் மிஷின்களும்’,  டெலி பிரிண்டர்களும், எஸ்.டி.டி மானிட்டர்களும் இப்போது எப்படி இருக்கின்றன என அறிய விழைந்தேன். அவை விருந்து முடிந்த பின்னர் அகற்றப்படாத மதுக் கோப்பைகள் போல கவனிக்கப்படாமல், சீண்டப்படாமல், இறைந்து  கிடந்தன.  

சார் எல்லாம் ‘ஸ்கிராப்பில்  (காயலான் கடை) போடப்பட்டுவிட்டது என்றார் அலுவலர்.  வேண்டுமானால் ஒன்று இருக்கிறது பாருங்கள் என்றார். மோர்ஸ் மெஷின். அதன் அருகே சென்று மெஷினில் அடித்தேன்..  கட கட..கட்.............. (நான் இறந்துவிட்டேன் என).  


இக்கால இளைஞர்கள் ‘டிரங்காலுக்காக காத்திருதேன், ‘தந்தி அனுப்பினேன் என்ற வாசங்களைக் கூட நம்ப மறுப்பார்கள்.


சார்.. தந்தி வருமானம் ஏதாவது வருகிறதா என வினவினேன்.

மிகவும் விரக்தியான  முகத்துடன், “இல்லை சார்.  தந்தி அனுப்புபவர்கள் எவருமிலர்.  சட்ட ரீதியாக (ரிகார்ட் purpose-க்காக) தந்தி அனுப்ப எப்போதாவது அத்தி பூத்தாற்போல சிலர் வருவார்கள் என்றார்.


‘அப்போது தந்தி அனுப்ப என்ன செய்வீர்கள்? மோர்ஸ் தான் காணாமற் போய் விட்டதே? என்றேன்.  Internet மூலமாக அனுப்போவோம் சார்.  என்றார்.


இந்த தடாலடி மாற்றங்கள், ஒரு வகையில், வாழ்க்கைத் தத்துவத்தை சொல்வது போல கூட இருந்த்து.


எனினும்,  150 வருடங்களுக்கு மேலாக,  இந்திய மக்களுக்கு சேவை செய்து ஓய்ந்து, அழுக்குடன் குப்பையில் கிடக்கும் மிஷின்கள் சற்று வேதனையைத் தந்தன.

கால ஓட்டத்தில், விஞ்ஞான மாற்றத்தின் விளைவாக, பல்வேறு தொழில்கள் காணாமற் போய்விட்டன. சுவற்றில் சித்திரம் மற்றும் விளம்பரம் வரைவோர், சைக்கிள் வாடகைக் கடை,  கை ரிக்ஷா,  அம்மி-ஆட்டுக்கல் செய்வோர், சுண்ணாம்பு செய்வோர் என பலரும் காணாமற் போய்விட்டனர். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?  வினவிப் பார்த்தேன். வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அவர்களை வேறு தொழிலுக்கு விரட்டி விட்டன.  தன்னை மாற்றிக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவித்துக் கொண்டுள்ளனர். மாற முடியாதவர்கள்? எதோ ஒரு ஹோடேலிலோ அல்லது கோவில் வாசலிலோ இருக்கின்றனர்.  சிலர் கூலிக்கு வேலை செய்து கொண்டுள்ளனர்.




It would take years
and countless tears
to wash away all the hate
that we have slowly create
that was been stored in our hearts
we have been scattered in to parts
like worthless outdated money
and no matter what anybody
says there is no shame
in the way that we feel
we are all the same
we just learn to deal
never miss a chance to heal! 

what has been said and done
neglected and worn down(beyond repair) 
i try to escape and run(no one seemed to care) 
not allowed to utter a sound (im speachless) 
only loneliness to be found(feel so helpless) 
keep it all inside
the worst thing we could do
keep it in morse code so
i have died 
and can not cry
the pain we deny
i really should let it all go
wishing to the misty heavens
it would always show
and through pouring rain clouds
on to purple flower petals
so we both can be found
everthing can finely settle