Wednesday, September 7, 2011

இன்னும் ஒரு குண்டு வெடித்தது!!

புது தில்லி, உயர்நீதிமன்ற வாசலில் ப்ரீப்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் பலியாயினர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த குண்டு வெடிப்பு வழக்கை டெல்லி போலீசாரிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான National Investigation Agency வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

இது தில்லி உயர் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவமாம். ஏற்கனவே கடந்த மே மாதம், 25ம் தேதி, டெல்லி உயர் நீதி மன்ற வளாகத்தில், சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்ததுள்ளதாம். ஞாபகம் இருக்கிறதா?

தற்போது நடந்த குண்டு வெடிப்பில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம், நிவாரணமாக மாநில அரசு அளித்துள்ளதாம்!! அப்புறம் என்ன? அரசின் கடமை முடிந்துவிட்டது தானே?

ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் போது நமது அரசியல் வாதிகள், ரெடிமேடாக, எழுதி வைத்துக் கொண்டிருக்கும் ஆறுதல் உரைகளை நாமும் வரி விடாமல் படித்துக் கொண்டு, T.V சீரியல் பார்த்துக் கொண்டு, சொரணையற்று கேட்டுக் கொண்டிருப்போம்.

இம்மாதிரியான சமயங்களில் எல்லாம், நமது கையாலகாத, கேடுகெட்ட  அரசியல் வாதிகள் என்னவெல்லாம் சொல்லுவதை வழக்கமாக கொண் டிருக்கிறார்கள்?

1. நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது
2. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.
3. உயிர் இழந்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியையும், காய முற்ற 
    வர்கள் பூரண  குணம் அடைய வேண்டும் என விழைகிறேன். 
4.  இது ஒரு கோழைத்தனமான செயல்.
5.  தீவீர வாதிகளின் செயல்களுக்கு அடி பணிய மாட்டோம்.
6.  இது திட்டமிட்ட சதி.
7.  இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும் என முன்பே எச்சரித்திருந்தோம்.
8.  குற்றவாளிகள் நீதிக்கு முன்னால் நிறுத்தப் படுவார்கள்.
9.  இதில் வெளி நாட்டு சதி இருக்கக் கூடும்.
10. எதிர்க்கட்சியினர் இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதைத் தவிர வேறு உறுப்படியாக எதையாவது நமது 'செயல்படும்' அரசாங்கங்கள் சொல்லியிருக்கின்றனவா? நமது நாட்டிற்கு பிரதமர் என்று ஒருவர் இருக்கிறாராம்! எனக்கு மறந்து விட்டது!  

நமது தொலைக் காட்சி நிறுவனங்களும் மற்றுமொறு குண்டு வெடிப்பு நிகழும் வரை, இந்த Clippings -ஐ போட்டு கதை பண்ணிக் கொண்டி ருக்கலாம்.

உண்மையில் நாம் தீவீர வாதம் பற்றி நாம் ஏதாவது முழுமையான ஆய்வு மேற்கொண்டிருக்கிறோமா? அமெரிக்காவில் 9/11 நடந்தது.  எப்படி விழித்துக் கொண்டு விட்டனர்! உள் நாட்டு பாதுகாப்புக்கு அவர்கள் எடுக்கும் நடைமுறைகளை நாம் எப்போதாவது கவணித்திருக்கிறோமா?  

நாமும் எதற்காக RAW -CBI - ராணுவம், Intelligence Agencies போன்றவற்றை வைத்துக் கொண்டி ருக்கிறோம்? வெண்ணை வெட்டுவதற்காகவா?

பேசாமல் மேற்சொன்ன 10 வாசகங்களுக்கு பதிலாக கீழ்க் கண்டவற்றைச் நமது அரசியல் வாதிகள் சொல்லட்டும். ஏனெனில் இவர்களது வசனங்கள் எங்களுக்கு சலித்து விட்டன. 

1. எங்களை நம்பி அரசாங்கத்தை ஒப்படைத்தீர்கள் அல்லவா? உங்கள் உயிருக்கெல்லாம் இவ்வளவு உத்தரவாதம் தான் தரமுடியும். வேண்டுமானால் குண்டு வெடிக்கும் போதெல்லாம் எங்களது "ஆழ்ந்த அதிர்ச்சியினைத்" தெரிவித்துக் கொள்கிறோம்.

2. தீவீர வாதத்தினை எதிர்க்கிறோம் என்று சும்மா டீக்கடை பெஞ்சு போல ஏதாவது 'பினாத்திக்' கொண்டிருப்போம்! அதையெல்லாம் நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் இருபது வருடங்களுக்கு 'கசாபையும்', 'அப்சலையும்' வி.ஐ.பி அந்தஸ்த்துடன், "சம்பந்தி உபசாரம்" செய்து கொண்டிருப்போம். வேண்டுமானால் 'தீவீர வாத' எதிர்ப்பு தினம் என்று ஒன்று கொண்டாடிவிடலாம்.  வேறேன்ன எங்களால் செய்ய முடியும்?  CBI /RAW/Intelligence Agencies  - போன்றவை எல்லாம், எங்களை வேண்டாதவர்களை உள்ளே பிடித்துப் போடுவதற்காகத்தான் வைத்திருக்கிறோம்.  இவர்கள் தீவீர வாதிகளிடமிருந்து பாதுகாப்பு தருவார்கள் என நீங்கள் முட்டாள் தனமான நம்பிக் கொண்டிருந்தால் நாங்களா பொறுப்பு?


3.  இந்த மாதிரி ஏதாவது நடந்தால் தான் (எதிர்க்கட்சியோ / ஆளுங்கட்சியோ ) பார்லிமெண்டில் ரகளை பண்ணி பாராளுமன்றத்தை முடக்கிவைக்கலாம்? 

4. அதுதான ஐந்து லட்சமோ பத்து லட்சமோ நிவாரணம் கொடுத்து விட்டோமே? பேசாமல் வாங்கிக் கொண்டு சாவதை விட்டு விட்டு கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்.

5. குற்றவாளிகள நீதியின் முன் நிறுத்துவோம் என பகல் கணவெல்லாம் காணாதீர்கள். அதற்கெல்லாம் எங்களுக்கு வக்கில்லை.  தப்பித்தவறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து விட்டாலும், ஒரு இருபது வருடம் தூங்கிவிட்டு பின்னர்தான் என்ன செய்யலாம் என யோசிப்போம்.  அதுவும் எதிர்க் கட்சியினர் என்ன சொல்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு!

6.  கடைசியாக:  அட போங்கப்பா!!  குண்டு வெடித்தால் பேசாமல், சாவதை விட்டு விட்டு, எங்களிடம் ஏன் வருகிறீர்கள்.  "சுவிஸ் பேங்கில் கல்லா" கட்டுவதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை!

-end-

No comments:

Post a Comment