Sunday, December 25, 2011

தலைப்பைப்பார்த்து... (Few things left unsaid.” Book review:)


தலைப்பைப்பார்த்து... 
:Few things left unsaid……..”  Book review:
(231 pages; Rs. 100/- by Srishti  Publishers, New Delhi)
ஆசிரியர் “சுதீப் நகர்கர்”.



நெட்டில் சர்ஃப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு புத்தகம் கண்ணில் பட்டது! Few Things left Unsaid.

 “சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்கள்..இந்த தலைப்பே “இலக்கியமாகஇருந்ததால், படித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி உந்த, ஆர்டர் செய்தேன்.

இஞ்சினியரிங் காலேஜில் சேரும் ஒரு மாணவன், முதலாம் ஆண்டே காதலில்(!)  விழுகிறான். இது அமரக்காதலாம்! ஆறே மாதத்தில் இந்த உண்மைக் காதல் பிடிங்கிக் கொள்கிறது. அதற்கு  காரணம் நாயகனே! இதற்கான விளக்கங்கள் சொதப்பலாக சொல்லப் படுகிறது! ஒரு லாஜிக்கும் இல்லை!

உடனே நாயகன் ‘பீர் அடிக்கிறான் ‘தம்அடிக்கிறான். ஒருவருடம் ‘அரியர் வைக்கி றான். நாயகியோ வேறு ஒருவனை நாடிச் செல்கிறாள். இந்த இரண்டாம் காதலன்,  நாயகியைப் ‘பயன்படுத்திக் கொண்டு விட்டு விலகுகிறான்.

மீண்டும் அந்த பெண், பழைய காதலனிடமே வருகிறாள். இருவரும் சேருகிறார்கள். கதை இத்தோடு நின்றாலும் பரவாயில்லை! மீண்டும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பிரிகிறார்கள்.

ஒரு ‘டைம்பாஸ்நாவலுக்குக் கூட தேறாத கரு! மஹா போர். புத்தகமெங்கிலும் திரும்பத் திரும்ப, ஒரே மாதிரியாக வரும் வர்ணனை களும், நிகழ்வுகளும் 'கொட்டாவி' விட வைக் கின்றன.

எல்லாம் சரி.... சண்டையெல்லாம் முடிந்து ஒன்று சேர்ந்து விட்டு, மீண்டும் எதற்காக, நாயகன் இரண்டாம் முறையும் சண்டை போட்டுக் கொள்கிறான்? அந்த பெண் கூறும் ‘பணம் கதையில் எங்கிருந்து முளைத்தது? அது என்ன ரூ. 18,000/- ? புரிந்தவர்கள் சொல்லுங்கள்!

பைசாவுக்கு பெறாத கதைக் கரு! அமெச்சூர் தனமான, மோசமான, சலிப்பூட்டும் நடை! ஒருவேளை ‘விடலை களுக்குப் பிடிக்கலாம்!. ‘சேதன் பகத்தைப் பார்த்து ‘சூடு போட்டுக் கொண்டாரா ‘சுதீப்?


இது நேஷனல் பெஸ்ட் புக் செல்லராம்! கஷ்டம்!



No comments:

Post a Comment