Thursday, December 8, 2011

அலுவலகத்தில் பெண்கள்:


எதற்காக இக்கட்டுரை?:

நேற்று எனது நன்பர் ஒருவர், அலுவலகத்தில் பெண்களுக்கு ஏதும் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டுமா என வினவியிருந்தார். அதற்குப் பதிலாக பெண்கள், ஆண்களுக்கு மரியாதை அளிக்கவேண்டும் எனவும் கோரியிருந்தார். அதற்கு நான் பதிலளிக்கும் போது, பெண்களுக்கு, அலுவலகங்களில்,சில நியாயமான சலுகைகள் அளித்தாக வேண்டும் எனவும், அது ஆண்களின் கடமை எனவும்,நேர்மையாக அவ்விதம் நடந்து கொண்டுகொண்டால் (எதையும் அவர்களிடம் எதிர்பாராது), மரியாதை தானாகக் கிடைக்கும் எனவும் பதிலிருத்து இருந்தேன். இந்த மிகச் சுருக்கமான பதில் எனக்கே திருப்தி அளிக்காத்தால், சற்று விரிவாக:






இவர்கள் யார் ?:

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், வேறெங்கிருந்தோ வந்து விடவில்லை. இந்த சமுதாயத்திலிருந்துதான் வந்திருக்கின்றனர். எனவே இந்த சமுதாயத்தில் அவர்கள் எந்தெந்தவிதமான,உபாதைகளை அனுபவிக்கின்றனரோ, அவையனைத்தையும் அலுவலகத்திலும் பெறக்கூடும்! காலம் மாறிக் கொண்டு வருகிறது என்றாலும், மகளிரை ‘செக்ஸ் சிம்பலாக, மறைமுகமா வேனும் பார்ப்பது முற்றிலும் நீங்கவில்லை. எனவே அவர்களுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. அவரவர் மனசாட்சியே சொல்லும்.  தனியாக அலுவலகத்தில் வேலைசெய்ய வேண்டியிருப்பது, சில “வக்கிரங்களின்சேம்பருக்கு செல்ல நேருவது, இரட்டை பொருளுடன் உரையாடுவோரினை தவிர்ப்பது, போன்றவற்றில் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுவது அவசியமாகிறது.


இடமாற்றம் (Transfer):

இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் மகளிரே. ஒரு இடத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, திருமனம் ஆனதும், கணவன் இருக்கும் இடம் நாடி டிரான்ஸ்ஃப்ரில் செல்வதினால், அவர்களது பதவி உயர்வு, சீனியாரிட்டி உட்பட பலதும் பாதிக்கப்படுகிறது. நமது ரூல்ஸில் கூட Wife joining Husband”  என்றுதான் சொல்லப் படுகிறதே தவிர, ‘Husband joining wife” பேசப்படுவதில்லை. இதன் காரணமாகவே வேலையைவிட்டுவிடும் பெண்கள் அதிகம்.


உடல் உழைப்பு:

பெண்களின் உடலமைப்பே, மிகக் கடினமான வேலைகளை செய்வதற்காக ஏற்பட்டதல்ல. பளு தூக்குதல், பணி நிமித்தம் ஏணிகளில் ஏறுதல், மின் உபகரணங்களை கையாளுதல் போன்றவற்றில் சில சலுகைகளை கொடுப்பதில் தவறில்லை. அதிலும் ஐம்பது வயதுக்கப்பிறகு (மெனோபாஸ் பீரியடுக்குப் பின்) பெண்களின் உடல் பல விதங்களிலும் பலவீனப்படுகிறது. எனவே சிலவேலைகளை அவர்களுக்கு கொடுப்பதில் கண்டிப்பாக சலுகை தேவைதான்.

லேட் அவர்ஸில்:

சமூகம், பெண்களுக்கு அதிகம் ஓய்வு அளிப்பததே இல்லை. ஆண்கள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த்தும், டி.வி முன்னரோ, புத்தகம் முன்னரோ அமர்ந்து விடுவான். இல்லாவிடில் நண்பர்கள் கூட்டம் இருக்கவே இருக்கிறது. இவன் எவ்வாறு “களைப்படைந்துவருகிறானோ அதுபோலத்தானே பெண்களும்? ஆனால் அவர்களை நாம் விடுவதில்லை. இரவு உணவு சமைப்பது, குழந்தைகளுக்கு பாடம், சமயலறை ஒழிப்பு என அவர்களுக்கு ‘இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிவிடுகிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, அடுத்த நாள் உணவிற்கு சில ஏற்பாடுகள் செய்துவிட்டு, பின் அவனுக்கு ‘கம்பெனியும் கொடுத்துவிட்டு, பின் தூங்கி, அவனுக்கு முன் எழவேண்டும்.

எனவே பெண்களுக்கு, அலுவலகத்தில்,  ஒவர் டைம் இல்லாமல் பார்த்துக் கொள்வது, பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பிவிடுவது பொன்ற சாதாரண சலுகைகள் அவசியமே!


விடுமுறை:

ஆண்கள் லீவு எடுத்தால், குடும்பவிஷேசம் அல்லது அவனுக்கு உடல் நலம் குன்றுதல் போன்றவை மட்டும்தான். பெண்களுக்கு அப்படியில்லை! குடும்பத்தில் எவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், நாம் வைத்திருக்கும் ஏகப்பட்ட பண்டிகைகளை கொண்டாடுவதற்காகவும், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும், சமூக obligation போன்றவற்றிற்கும் விடுமுறை எடுக்க வேண்டி யுள்ளது.  எனவே ஒரு குறிப்பிட்ட நாளில் ஆணும்-பெண்ணும் விடுமுறை கோரினால், பெண்களுக்கு விடுமுறை கொடுப்பதில் முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை.

உடற்கூறு:

ஆண்கள் பிள்ளை பெறுவதில்லை. எனவே அது சம்பந்தமான உபத்திரவங்கள் அவனுகுத் தெரியாது. அது மாத்திரமல்ல; அவர்களுக்கென்றே சில மாதாந்திர உபத்திரவங்கள் உண்டு. இது தவிர மெட்டர்னிட்டி லீவு முடிந்து, உடனே அலுவல கத்திற்கு வரும் பெண்களின் சில பிரச்சினைகள் சிக்கலானது. அவற்றை யெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவ்வப்போது, சற்று, ‘ரெஸ்ட் ரூமிற்கு அவர்கள் சென்றுவருவது அவசியமே!

குழந்தை வளர்ப்பு:

இதை விலாவாரியாக சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். யாவருக்கும் தெரியும். குழந்தை சற்று பெரிதாக வளரும்வரை அவர்கள் படும் பாடு, ஒவ்வொரு நிலையிலும் சொல்லிமாளாது.  இதுபற்றி, பெரும்பாலான ஆண்கள் அலட்டிக் கொள்வதில்லை. இந்த மாதிரியான “டென்ஷன், அவர்களது  பணியில் ரிஃப்ளெக்ட் ஆகாது என எப்படி எதிர்பார்க்க முடியும்?


குடும்பம்-சமூகம்



இது தவிர, அவர்கள் ‘ஈவ் டீஸ் செய்யப்படுவதின் மூலமும்,  குடும்பத்திற்கு 


போதுமான  நேரம் ஒதுக்க முடியாமலும், அவதிப்படுகிறார்கள். அதிலும் 

அனுசரித்துப் போகாத மாமியார்-மாமனார் அமைந்துவிட்டால் நிலைமை இன்னும் 

மோசம். வீட்டுவேலை என்பதை அவர்கள் தலையில் கட்டிவிட்டு ஆண்கள் 

நிம்மதியாக இருக்கின்றனரே?


முடிவாக:


பெண்கள் வேலையே செய்யவேண்டியதில்லை என சொல்லவில்லை! அவர்களும் 

வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டியவர்களே! ஆனால் சிறு-சிறு 

சலுகைகளை அவர்களுக்கு கொடுப்பதினால் ஒன்றும் ஆகிவடாது. அது ஆண்களின் 

சமூக கடமைகூட. இதனால், அவர்கள் உங்களிடம் ‘குழைய வேண்டும் என 

எதிர்பார்க்காதீர்கள். இது எல்லாவற்றையும் விட மோசமானது.


(நான் சென்னது பொதுவாக; விதிவிலக்குகள் எதிலும், எங்கேயும், எப்போதும் 

உண்டு)

5 comments:

  1. A correct observation without any bias...
    mv

    ReplyDelete
  2. நல்ல அலசல்.

    //இதனால், அவர்கள் உங்களிடம் ‘குழைய’ வேண்டும் என

    எதிர்பார்க்காதீர்கள். இது எல்லாவற்றையும் விட மோசமானது.//

    மிகச் சிறப்பாக முடித்துள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  3. அப்பா!

    உன் கட்டுரையினை இன்றுதான் படித்தேன். அருமையாக எழுதியிருக்கிறாய்.
    நாங்கள் (பெண்கள்) சொல்லத் தயங்ககும் விஷயத்தைக்கூட கண்ணியமாக, தெளிவாக,
    நேர்மையாக எழுதியிருக்கிறாய். உன்னிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

    அன்புடன்,
    பிருந்தா கண்ணன், ஆக்ரா

    ReplyDelete
  4. sir super sir, i really love this post. happy to be ur follower

    ReplyDelete