Wednesday, December 14, 2011

தியாகச் சுடர்கள்






                 ரம்யா- - - - - - -- - - -- - - - - - வினிதா 


கொல்கத்தாவின் AMRI-மருத்துவமணை. அங்கே தோழியர்கள் R.K. வினிதா (23)  மற்றும் ரம்யா ராஜப்பன்(24) இருவரும் நர்ஸாக பணியாற்று கின்றனர். 09/11/2011 வெள்ளிக் கிழமை அன்று விடியற்காலை மூன்று மணி!  மருத்துவ மணை தீப்பிடித்துக் கொண்டது.


நிர்வாகிகள் யாவரும் தீயனைப்பு நிலையத்திற்குக்கூட சொல்லாமல் பதுங்கிக் கொண்டனர்.  எங்கும் தீ.  புகை மண்டலம்.

அதுவும் சாதாரண புகை அல்ல! மருத்துவ மணையெங்கும் நிறைந்திருக்கும்,பிளாஸ்ட்டிக் பொருட்களும் மருந்துகளும் கிளப்பிய, தாங்கொனா மூச்சு முட்டும் புகை. உதவிக்கு எவரும் இல்லை.


இந்த கண்மணிகள் இருவரும் பாய்ந்து, பாய்ந்து வார்டுகளுக்குச் சென்று, அங்கே படுத்துக் கிடக்கும் நோயாளிகளைத் தூக்கிக் கொண்டும், கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டும், கீழிறங்குகின்றனர்.   இப்படி ஒருவர்-இருவரை அல்ல, எட்டு பேரை காப்பாற்றி யிருக்கின்றனர். ஒன்பதாவது நோயாளியை காப்பாற்றச் செல்லும்போது, அந்தோ! 
தீயினுள் சிக்கி மாண்டனர். 


இரு நர்ஸ்களும், எட்டு மாதங்களுக்கு முன் தான் ஹைதராபாத்தில் பயிற்சி முடித்து, கொல்கத்தாவில் பணிக்குச் சேந்துள்ளனர். ஒரு விபத்து நேர்ந்துவிட்டால், சாதாரணமாக என்ன தோன்றும்? தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தானே!  இந்த தியாகச் சுடர்கள் ஆபத்தை துனிந்தே எதிர்கொண்டுள்ளனர். இவர்களது பணி அர்ப்பணிப்பை என்ன வென்று சொல்வது? இவர்கள் மற்ற யாவருக்கும் முன்னால் ஓடி வந்திருந்தால், ஏன என்று யவரேனும் கேட்டிருக்க முடியுமா? தானாக ஓடி, ஓடி உயிர்களைக் காப்பாற்றும் மனோதிடமும்,தியாக உணர்வும் எங் கிருந்து பெற்றனர்?


கார்கில் போரின் போது, உயரத்திலிருந்து கொண்டு சுடும், பாகிஸ்தானி யர்களின் குண்டுகளுக்கு இறையாவோம் எனறு தெரிந்தே முன்னேறிச் சென்று பலியான இராணுவ வீர்ர்களுக்கு இணையானவர்கள் அல்லவா இவர்கள்! இன்னும் சொல்லப் போனால்,இந்த கண்மனிகள் இருவரும், அவர்களுக்கும் மேலானவர்கள். ஏனெனில், முன்னேறிப்போ என கமாண்டர் ஆணையிடும் போது, அதை சட்ட ரீதியாக, வீரர்கள் மீற முடியாது! ஆனால் உன் உயிரைக் கொடுத்தாவது, நோயாளிகளைக் காப்பாற்று என, எவர் இவர்களை ஆணையிட்டனர்? இவர்கள்து தியாகத்திற்கு நிகர் ஏது?


கேரள அரசு, வினிதாவின் இறுதிச் சடங்குகளை Kothanellore-ரிலும், ரம்யாவின் சடங்குகளை உழவனூரிலும் முழு “அரசு மரியாதையுடன் நடத்தியது. மறைந்த தோழியர்களுக்காக, மேற்சொன்ன இரு ஊர் களிலும், வியாபாரிகள், கடைகளச் மூடி மரியாதை செலுத்தியுள்ளனர்.


தோழியர்களே!  உங்களைப் போன்ற சிலர் இன்னும் இருப்பதால் தான், இந்தியாவில் தர்மம் சிறிதாவது நிலைத்துள்ளது!  உங்களுக்கு நாங்கள் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம். வேறென்ன சொல்ல முடியும்? 

No comments:

Post a Comment