Thursday, December 15, 2011

தேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)


கடந்த பத்தாண்டுகளில் குறும்பட தயாரிப்புகள், தமிழகத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.  முதல் முயற்சியாக, Films Disional Corporation of India, புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் “தேசிய ஆவணப்பட, குறும்படத் திருவிழாபாண்டிச்சேரியில் 16,17 மற்றும் 18-12-2011 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.

நாற்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள்/ஆவணப்படங்கள் திரையிடப் பட உள்ளன.  இதன் துவக்க விழா 15/12/2011 அன்று மாலை ஏழு மணிக்கு, புதுவை பெத்திசெமினார் ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவில், மண்டல தணிக்கை அதிகாரி திரு.பக்கிரிசாமி, பிரபல எடிட்டர் திரு.லெனின், திரு வசந்தபாலன் (அங்காடித்தெரு இயக்குனர்), மற்றும் “த.மு.எ.க.ச”- வைச் சார்ந்த திரு, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"விழா மேடையில் நிகழ்த்தப்பட்ட முக்கிய விருந்தினர்களின் உரைச் சுருக்கம்"

1.      திரை அரங்குகளை வணிக சினிமாக்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இன் நாட்களில், முற்போக்கு சிந்தனை கொண்ட திரைப் படங்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனில், குறும்படங்கள் மட்டுமே சிறந்த வழி! மக்கள், இம்மாதிரியான படங்களை பார்க்க வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பம்தான், இம்மாதிரியான விழாக்கள்.

2.      இம்மாதிரியான படங்கள், மெல்லிய உணர்வுகளைப் பேசும்! மானுடம் பேசும்! மக்களின் பிரச்சினைகளைப் பேசும்! மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் அழுக்குகளை  நீக்கும். மக்களை தரமுயர்த்தும்.

3.      குறும்படங்கள், வணிகத் திரைப்படங்கள் போல அல்ல; இம் மாதிரியான படங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது பற்றி விவாதிக்கப் பட வேண்டும். விவாதம் செய்வது, வெறும் விவாதத்திற்காக அல்ல; மாறாக படங்களைப் புரிந்து கொள்ள!

4.      மாணவர்களுக்கும், புதிய இளம் கலைஞர்களுக்கும், இம்மாதிரியான விழாக்கள், “குறும்படங்கள் பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். சம காலத்திய சினிமாக்களின் “ட்ரெண்ட் பற்றி அறிந்து கொள்ள முடியும்! இவ்விழாக்களில், துறை சார்த்த சிறந்த அறிஞர்கள் பங்கேற்பதால், புதிய இயக்குனர்களும், இளைஞர்களும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பதற்கான, ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

5.      ஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும்.  2 மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்காக, மூன்று மணி நேர சினிமா எடுக்கப்படும். கதையின் போக்கை மாற்றாமல், சுவாரஸ்யமாக, சினிமாவினை Present  செய்வது எடிட்டர் கையில் தான் உள்ளது.

6.      குறும்படங்களுக்கும் / ஆவணப்படங்களுக்கும் சென்ஸார் இல்லை!

7.      எதிர்காலத்தில், இந்திய குறும்படங்கள் மட்டுமின்றி சர்வ தேசிய குறும்படங்களையும், இது போன்ற விழாக்களில்  திரையிடலாம். இதற்கு த.மு.எ.ச முயற்சி எடுக்கும்.

8.      சினிமாவின் வீச்சும், செல்வாக்கும் மிக அதிகம்.  மொத்த தமிழ்ச்சினிமாவுக்கான மொத்த "Turnover", 250 கோடிக்குள்தான் இருக்கும். அதாவது, எந்த ஒரு பெரிய தொழிற் சாலையின் Turnover-ஐ விட குறைவாகவே !  ஆனால், மக்களிடையே திரைப்படங்களுக்கான செல்வாக்கு அபரிதமானது. அது ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் மிக அதிகம். எனவேதான் தரமான திரைப்படங்கள் மக்களுக்கு அவசியம் போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறோம்.  அது கலாச்சார ரீதியாகவும், பண்பு ரீதியாக்வும் மக்களை தரமுயர்த்தும். 

9.      உதாரணமாக 1967 வரை கறுப்பர்களும்-வெள்ளையர்களும் திருமணம் செய்து கொண்டால் செல்லாது என்ற அமெரிக்காவின் சட்டத்தினை (17 மாகானங்களில்)  மாற்றி யமைத்த பெருமை ஒரு குறும்படத்தினையே சாரும்.!

10.  மக்களின் மனங்களை மேப்படுத்துவதில் திரைப்படங்களுக்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை. தத்துவங்கள் கூட செய்ய இயலாதவற்றை, திரைப்படங்கள் செய்யும். திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள், எளிதாக மக்களைச் சென்றடையும். ஏனெனில் திரைப்படம் என்பது, எழுத்து, நடிப்பு, இசை, நடனம் என,  கலைகளின் எல்லா அம்சத்தினையும் உள்ளடக்கியது.

விழாவின் இறுதியில் WIND “  என்ற குறும்படத்தினைக் காட்டினார்கள். இத்திரைப்படத்தினைப் பற்றிய கருத்துக்கள் அடுத்த பகுதியில் தொடரும்!


============================================================================
(பாண்டிச்சேரி, கடலூர் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தின பயன் படுத்திக் கொள்வது  நல்லது)
============================================================================


3 comments:

  1. விபரங்கள் ப்ளீஸ்.இடம்?நேரம்?கலந்துகொள்ள அனுமதி பெற வேண்டுமா?யாரை அணுகுவது என்று சொன்னீர்களானால் மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. 16/12/2011 - 1000 hours to 2000 hours
    17/12/2011 - 0900 hours to 2000 hours
    18/12/2011 - 0900 hours to 2000 hours
    Venue: Pondicherry University , Jawahrlal Nehru Hall
    Entreance Fee: For all films Rs. 500/- (with Food)
    Single: Free
    The VIPs I MENTIONED ARE AVAILABLE FOR DISCUSSION.

    ReplyDelete