Monday, May 25, 2015

வன விலங்கு சரணாலயம் - காணக்கிடைக்காத காட்சிகள்

பலமுறை முதுமலைக் காடுகளுக்கிடையே, சாலையில் சென்றிருந்தாலும் ஒரு முறைகூட யானையையோ, அட குறைந்தபட்சம் ஒரு காட்டு பூனையையோ பார்க்கும் வாய்ப்பு கூட  கிட்டியதில்லை.  

ஒரு தடவை எங்கள் டிரைவர், 'சார்... நேத்து இந்தப்பக்கம் யானையொன்று போயிருக்கனும் சார்.. இங்க பாருங்க யானை போட்ட சாணியை"  என்று விட்டையை காண்பித்தார். வெறுத்துப் போனோம். 

ஆனால் வயநாட்டில் யானைக் கூட்டத்தையே பார்த்தோம். யானை மட்டுமா? 
எண்ணற்ற மான்கள்  கூட்டம்,  காட்டெருமை, மயில், அரிதான பெரிய பறக்கும் அணில் எல்லாவற்ரையும்  அதன் இயற்கைச் சுழலில் திகட்ட-திகட்ட கண்டேன்.   படங்கள் கீழே...

இடது பக்க கிளையில் இருந்து வலது பக்க கிளையில் இருக்கும் பலாப்பழத்தை சாப்ப்பிடும் பறக்கும் அணிலைப் பாருங்கள்.. யப்பா.. எவ்வளவு பெரிசு... 

சாப்பாடு அச்சு.. புறப்பட்டாச்சு... 

மான்கள் கூட்டம்.




பல இடங்களில் பார்த்திருந்தாலும்,  காட்டில் பார்க்கும் வாய்ப்பு .....மயில்

மனித நடமாட்டத்தைப் பார்த்ததும் சட்டென ஓடிவிடுகிறது..

மிகவும் அரிய  வாய்ப்பு... ஒற்றை யானை...
மேலே செடிகளின் நடுவே பாருங்கள். அஹா...


யானை பின்னாடி.. போட்டோ எடுத்தவர் சரியாக எடுக்கவில்லை... பின்னால் பாருங்கள் யானை தெரியும்.
மிக அறிய வாய்ப்பு... யானைக்கூட்டம் 


எங்களப் பார்த்ததும் பிளிறி ஓடுகிறது...

காட்டெருமைகள்...

காலில் வெள்ளை சாக்சுடன் காட்டு எருமைகள் 




No comments:

Post a Comment