Wednesday, May 27, 2015

மடிகரா - பாகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஹாரங்கி அணை.

கூர்க் பகுதியில், தலைக்காவேரிக்கு முன்னால், பாக மண்டலா என்ற ஊரில் ஒரு அழகான கோயில் இருக்கிறது. இறைவன்: பாகண்டேஸ்வரர் (சிவன்) .  இறைவி: பாகண்டேஸ்வரி. இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். கோயில் பிரகாரங்களும், மூலவர் சன்னதிகளும் கேரள ஸ்டைலில் இருக்கிறது. பார்ப்பதற்கு புராதன கோயில் போலத் தெரிகிறது. 

ஸ்தல புராண புத்தகம் விற்பனைக்கு இல்லாதபடியால், தெரியாத்தனமாய், குருக்களிடம் கோயிலின் வரலாறு கேட்கப்போய், அரைமணி நேரம் கன்னடத்தில் பிளந்து தள்ளினார். என்னுடைய Broken கன்னடத்தினால் அவரது Chaste கன்னடத்தை விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஒன்றும் புரியாமல், மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எதோ ஒரு அசுரனை அழிப்பதற்காக, சிவபெருமான் எழுந்தருளிய இடம் என்பது போல தோராயமாகப் புரிந்தது.


கோயிலுக்கு முன்னால் திரிவேணி சங்கமம் (மூன்று ஆறுகள் ஒன்று கூடும் இடம்) என போர்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.  நேரில் ஏதோ மூன்று வாய்க்கால்கள் ஒன்றாக சேர்வது போல இருக்கிறது. படங்களைப் பாருங்கள்.

மூலவர் சன்னிதி

கோயிலின் உட்புறம் (அம்மணி யாரோ..)

முகப்பு




மூன்று ஆறுகள் (?) சங்கமம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாரங்கி அணை

மடிகராவிலிருந்து கொஞ்சம் (20 கி.மீ) தொலைவில் உள்ளது ஹாரங்கி அணை. கபினி நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது. உள்ளே எவரையும் அனுமதிக்க வில்லை.. ஏன் எனக் கேட்டால், சிவில் வொர்க்  நடக்கிறது என ஒருவரும், தீவீரவாதிகளின் அச்சுறுத்தல் என இன்னொருவரும் பதில் சொன்னார்கள். காலையிலிருந்து சுற்றிக்கொண்டே இருப்பதால், தலைமுடி(?)  கலைந்து, சட்டை கசங்கிப்போய் ஒரு மாதிரியாக திரிந்ததால், எங்கே  தீவிரவாதி என பிடித்து வைத்துக் கொள்வார்களோ என அச்சம் வந்துவிட்டது.   

அணையின் தோட்டம் வெளியிலிருந்து பார்க்க பெரியதாகவும், அழகாகவும்  இருந்தது. அணையின் வெளிப்புறத் தோற்றம் கீழே!





No comments:

Post a Comment