Thursday, December 24, 2015

விட்டலாபுரம்


சில கோயில்களுக்கு போகவேண்டும் என பலகாலம் திட்டமிடுவோம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டம் கைகூடாது. ஆனால் சடாரென அக்கோயிலுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டிவிடும்.

இன்று அப்படி தரிசனம் செய்த ஒரு கோயில் ‘விட்டலாபுரம்’. புதுவையிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில் புதுப்பட்டினம் அருகே இருக்கும் ஊர் விட்டலாபுரம். இங்கே காட்சியளிப்பவர் பாண்டுரங்கன். விட்டலேஸ்வரர் என்னும் ‘பிரேமிக விட்டல்’. இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஒருவருடமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் சாத்தியப்படவில்லை.

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. விஜய நகர பேரரசால் தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாண்டுரங்கன் கோயில் இது என்கிறார்கள். வெகுகாலமாக சிதலாமகிக் கிடந்த கோயில். பரணூர் ஸ்ரீ கிருஷ்ணப் ப்ரேமி அவர்களின் முன்முயற்சியில், இக்கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வு இலாக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது இக்கோயில். கர்ப்பக்கிரஹத்தில், பாண்டுரங்கன், ருக்மணி-சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். சம்ப்ரதாயமான பூஜைகள் இல்லை; மாறாக நாமசங்கீர்த்தனங்களே ப்ரதானம்.  பாண்டுரங்கன் எப்பொழுதும் போல அலங்காரத்தில் அற்புதமாயிருக்கிறார்.  கோயிலுக்கு எதிரே ஆஞ்சனேயரும், த்வஜ்ஸ்தம்பத்தின் அருகே கருடாழ்வாரும், விட்டல் சன்னதியின் அருகே சந்தானலக்ஷ்மி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 

அருகே, ஸ்ரீனிவாசப்பெருமாள், வரதாரஜப்பெருமாள், ராமானுஜர் & விஸ்வக்சேனர் ஆகியோருக்கும் தனித்தனியே சன்னிதிகள் இருக்கின்றன. உற்சவ மூர்த்திகளான, விட்டல், ருக்மணி, சத்யபாமா அழகோ அழகு.  சுற்றிலும் பூந்தோட்டங்கள்;  நேர்த்தியாக பராமரிக்கிறார்கள். கோயில் குருக்கள், விட்டல் ஸ்வாமி சிவாதாரமாகவும் இருப்பதால், வைகுண்ட ஏகாதசி போல, மஹாசிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்றார்.  கோயிலின் சுத்தமும், அழகும் அமைதியைத்தரவல்லவை.


மாலை நேரத்தில், சிலரே குழுமும் பக்தர்களின்  இனிமையான ‘நாமாவளிகளின்’ பின்ன்னியில் யாருக்குத்தான் சட்டென தியானம் கைகூடாது?  தரிசிக்க வேண்டிய தலம்.


அஞ்சநேயர் 

முகப்பு 


சந்தான லட்சுமி தாயார் சந்நிதி 





புணருத்தாரணம் செய்யப்படுவதற்கு முன்னால் 

விட்டல் 


No comments:

Post a Comment