Thursday, January 13, 2011

BSNL என்ன ஆகும்?

ஆரூடமோ அல்லது ஜோஸியமோ சொல்வதாக உத்தேசமெதுவுமில்லை. BSNL வீழ்ச்சி நாடறிந்த ஒன்று.  இதற்கு TRAI மற்றும் அரசியலை குறை சொல்வது உண்மையாகவும் கொஞ்சம் சௌகரியமாககூட இருக்கிறது.  அதையும் மீறி அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதா? வீழ்ச்சிக்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லையா?  - தனியார்களின் போட்டியில் கானாமல் போகப்போகிறார்களா?  "வண்ண - கண்ணாடி" யேதும் அனியாமல் பார்தால் செய்யக்கூடியவற்றை கூட செய்யவில்லை என்பது புரியலாம். 


ஒரு வருடம் முன்பே அரசு 3ஜி-க்கு அனுமதி அளித்து விட்டது - வேறு போட்டியே இல்லாமலிருந்த அந்த சந்தர்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்  கொண்டார்களா?


எதிர்காலம் பிராட் பேண்ட்-ல் இருக்கிறது எனத்தெரிந்தும் என்ன திட்டமிட்டோம்? உதாரணத்திற்கு நெய்வேலியிலும் - அண்ணாமலை நகரிலும் - புதுப்பாளயத்திலும்
நம்மால் கேட்டவுடன் இணைப்பு தந்தோமா? மோடமும் -மற்ற கருவிகளும் முன்னதாகவே வாங்க ஏன் திட்டமிடவில்லை? அப்படி திட்டமிட்டு கேட்டவர்களுக்கு மேலிடத்தில் கருவிகள் கொடுத்தார்களா?  எது POTANTIAL AREA  என்பது கண்டறியப்பட முடியாத இரகசியமா? இந்த இலட்சணத்தில் பிராட் பேண்ட் வேணுமா வென நிமிஷத்துக்கு ஒரு SMS. 


புது கருவிகள் வாங்க "டெண்டர்" போட்டதில் எத்தனை குளறுபடிகள்?


ஏகச் சக்ரவர்த்தியாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது என்பதினை நிஜமாகவே புரிந்து கொண்டார்களா? 


பழுது வந்தால் நீக்குவதற்கு எத்தனை மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்? பழுது நீக்க தேவையான இன்ன பிற SPARES கைவசம் உண்டா?  குறைந்த பட்சம் புது கனைக்ஷன் கேட்டவர்களுக்கு INSTRUMENT உண்டா?


அவர்களுக்கு சற்றும் பழக்கமில்லாத - அனுபவமில்லாத - ஒரு கழுதத்றுக்கும் போட்டியினை (Cut throat competition) சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது உணர்கிறார்களா?  துரதிர்ஷ்டம் என்னவென்றால் BSNL மேனேஜர்களும் தொழிலாளர்களும் போட்டிக்கு தயாராக இல்லை என்பது மட்டுமில்லை. படு மட்டமாடன "சிவப்பு நடா" முறைக்குத்தான் இவர்கள் பழக்கப்பட்டவர்கள் என்பது உண்மயா?   எந்த பிரச்சினைக்கும் "கைகாட்டி"  வேலைதான் நடக்கிறதா?


எத்தனை "விதுரர்கள்" வயிற்றுக்கு BSNL"-  மனதிற்கு "தனியார்" என  வைத்திருக்கிறார்கள்?  RETIRE -ஆன மறுதினம் தனியாரிடதில் வேலைக்கு சேர்ந்த உய ரதிகாரிகள்" எத்தனை பேர்? இவர்கள் பணியிலிருக்கும்பொது என்னவெல்லாம் தனியா ருக்கு சாதகமாக "தில்லுமுல்லு" செய்திருப்பார்கள்? 


எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபமென "எல்லா வகையிலும் "  "திருடுபவர்கள்" எத்தனை நபர்கள்? 


மேலேயிருந்து கீழ்வரை எத்தனை பேர் பத்து மணிக்கு பணிக்கு வருகின்றனர்?  கூடுமான வரையாவது கஸ்ட்டமர்களுக்கு உதவி செய்வோம் என்கிறர்களா அல்லது அங்கேபோ- இங்கெபோ என விரட்டுகிறர்களா?  ITI -போல ஆக தயாரகிவிட்டார்களா? 


ஒருவருக்கொருவர் அடித்துகொள்வதை கொஞ்சகாலம் விட்டுவிட்டு ஊழலுக்கும் - ஊதாரித் தனத்திற்கும் -  - வேலை செய்யாதவர்களுக்கும் எதிராக போரா டுவார்களா? 


சேவை மேம்பட்டுக்காக நம்மால் முடியக்கூடிய திட்டங்களை தயாரித்து அதனை நடைமுறைப்  படுத்துவர்களா?


இல்லை சம்பளமே தரமுடியாத நிலை வந்தால்தான் புரிந்து கொள்வார்களா?....


BSNL என்ன ஆகும்?

1 comment:

  1. I am of the same views. This has to be viewed by every member of the BSNL organisation. You have expressed very nicely. I appreciate the efforts taken by you. My best wishes for your good beginning.

    Warm Regards,
    P K Periyasamy,
    Cuddalore -1

    ReplyDelete