Sunday, July 3, 2011

Neyveli Book Fair 2011


                                   புத்தக விற்பனை - நெய்வேலி!

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அனுபவிக்க முடிந்த,  புத்தகக் கண்காட்சி/விற்பனை வசதிகளை தற்போது கடலூர் போன்ற சிறு ஊர்களில் இருப்பவர்களும் அனுபவிக்க முடிகிறது.  கடந்த 13 ஆண்டுகளாக ஜூலை மாதங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில், புத்தக கண்காட்சி(?) மற்றும் விற்பனை, நெய்வேலி நகரத்தில் மிகச் சிறப்பாக நடந்துகொண்டு வருகிறது.

இன்று (03/07/2011) நெய்வேலி புத்தக விற்பனை அரங்குக்குச் சென்று வந்தேன்.  முன்னனி பதிப்பகத்தார் அனைவரும் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். நிறைய புத்தகங்கள் உள்ளன. மிகுந்த மகிழ்ச்சியளித்த அம்சம் என்னவெனில், நெய்வேலி மக்கள் மட்டுமன்றி அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். நிறைய கூட்டம்.  

பிற ஊடகங்களின் தாக்கத்தினையும் மீறி, இவ்வளவு கூட்டம் புத்தகம் வாங்குவதற்கென்று வருகிறது என்பதே நிறைவளிக்கிறது.

சும்மா, ஒரு 'ஸ்டாலில்' பேச்சு கொடுத்துப் பார்த்தேன், எந்த மாதிரியான புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன வென்று.  சமையல் குறிப்புகள் முதல் இடமாம், ஆன்மீக புத்தகங்கள் அதற்கு அடுத்த படியாய் விற்பனை ஆகிறதாம்.  "அரண்மனை நாவிதன்" கதை மாதிரிச் சொன்னாரா அல்லது ஏதேனும் விற்பனை குறிப்புகள் அடிப்படையில் சொன்னாரா தெரியவில்லை. எதுவானால் என்ன? மக்கள் புத்தகம் வாசித்தால் சரி.  சமையல் குறிப்பினை படித்து முடித்தபின் நல்ல புத்தக்ங்களை தேடி நிச்சயம் வருவார்கள்.

ஸ்டால்களில் வாங்கிய புத்தகங்களை எந்த கவரிலும் போட்டுத் தர மாட்டார்களாம். சும்மா கையில் அள்ளிக் கொண்டு போ என்கிறார்கள். என்போல இருபது-முப்பது புத்தகங்கள் வாங்கியவர்களின் நிலை, சிரமமாக இருந்தது.  வாங்கிய புத்தகங்களை, வேறு ஸ்டால்களுக்குள் எடுத்துச் செல்வதிலும் சிரமம். வெளியில் வைத்துவிட்டு செல்வதிலும் சிரமம்.

பிளாஸ்டிக் கவர்கள் வேண்டாம். அட்லீஸ்ட் துணிப் பைகளையாவது, விற்பனைக்கு வைக்கலாம் (அரங்கினுள்).  முன்யோசனையுள்ள ஆட்கள் வீட்டிலிருந்தே கட்டைப்பை எடுத்து வந்ததைப் பார்த்தேன். அடுத்த வருடம் நானாவது வீட்டிலிருந்து ஒரு பெரிய பை எடுத்துச் செல்லவேண்டும் (அ) அவர்களாவது துணிப்பையினை விற்பனை செய்ய வேண்டும்.  பார்ப்போம்.

இன்னோரு விஷயம்.  "கிரடிட்/டெபிட் கார்டுகள்" அக்ஸப்ட் செய்வதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்யவேண்டும். எல்லா ஸ்டால்களிலும் சில்லறையாக கேட்கிறார்கள். எல்லோருக்கும் சில்லறையாக கொடுக்க 'உண்டியலை'த்தான் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். சட்டென்று ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்துவிட்டோம். 'கேஷ்" பற்றிய கவலையின்றி வாங்கலாம் இல்லையா?

 "ஸ்வைப்" லைன் ஒன்றினை, புத்தகத்திருவிழா நடக்கும் 15 நாட்களுக்கு, BSNL  ஸ்பான்ஸர் செய்யமாட்டார்களா என்ன?

2 comments:

  1. dear sir
    namasthe
    can you post the list of publishers participating?
    thanks
    radhakrishnan

    ReplyDelete
  2. Dear Sir,

    1. Almost all leading publishers are participating in this book fair, including KIZHAKKU, UYIRMAI,ANANDHAVIKADAN,KUMUDHAM, THIRUMAGAL, KARPAGAM, NCBH, NATINAL BOOK TRUST, GITA PUBLICATIONS, ISHA, VIVEKANANDHA, SURA, MEENATCHI, KARPAGAM etc.

    2. More than 140 book stalls are available.

    3. This book fair is open from 01/07/2011 to 15/07/2011.

    ReplyDelete