Sunday, July 17, 2011

KUMBAKONAM - GOVINDHAPURAM

கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்த புரத்தில், காவிரிக்கரையோரத்தில், 150 அடி உயரமுள்ள கோபுரத்துடன் கூடிய ஒரு கோவில், பகவான் ஸ்ரீ பாண்டுரங்கனுக்காக,பண்டரிப்புரத்தில் உள்ளது போன்ற கட்டமைப்பில், ஸ்ரீ விட்டல் மஹராஜ் அவர்ளின் முன் முயற்சியால் கட்டப்பட்டுள்ளது. மிக மிக ரம்மியமான் சூழ் நிலையில், நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கோயில்.  இக்கோவிலை இன்று (17/07/2011), தரிசித்தேன் . சில பிரத்தி யேகமான அம்சங்கள். 


1. விமானம் 132 அடி உயரமுள்ளது. பார்ப்பதற்கு அழகான சிறந்த 
    வடிவ மைப்பு.


2. இதன் கலசம் மட்டும் 18 அடி உயரம்.


3. சிறந்த சித்திரங்களுடன்(fibre glass painting) கூடிய "Doom".  பெரிய அழகான 
    மஹா   மண்டபம்.     தூண்கள் அற்றது. தென்னிந்திய பாரம்பர்யத்துடன் 
    கட்டப்பட்டது.  சுமார் 2000 பேர்    அமரலாம். 


5.  அழகான மர வேலைப்பாடுகள்.


6. மூர்த்திகள் ,  100 கோடி விட்டல் நாமாக்கள் அடங்கிய இடத்திற்கு
    மேலாக பிரதிஷ்ட்டை   செய்யப்பட்டுள்ளது. 


7. இப்போதைக்கு சன்னிதானத்தில் உள்ள மூர்த்திகளை தொட்டு 
    நமஸ்கரிப்பதற்கு   அனுமதிக்கிறார்கள்.



நீங்கள் இக்கோயிலை தரிசித்து பாண்டுரங்கனின் அருள் பெற வேண்டுகிறேன்.


ஸ்லைட் ஷோ பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment