Tuesday, April 14, 2015

புத்தாண்டு தினத்தில் சில கோயில் தரிசனகள்


            இன்றய தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14/04/2015), சில கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆதிவினாயகர் கோவில். ஆலயம் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் திலதர்பணபுரி. தில என்றால் எள்; தர்பணம் என்றால் பித்ருக்களுக்காக செய்யும் வழிபாடு

       ஸ்ரீராமர் தனது தந்தையார் தசரத சக்ரவர்த்திக்காக பல இடங்களில் தர்பணம் செய்தார். ஆனால் பிண்டம் வைக்கும் பொழுதெல்லாம் பிண்டங்கள் ‘புழுக்களாக’ மாறினவாம். வேதனையடைந்த ஸ்ரீராமர் சிவபெருமானை வேண்ட, இந்த தலத்திற்கு வந்து தர்பணம் செய்யுமாறு அருள் செய்தாராம். அதன்படி இங்கு வந்து ராமபிரான் பிண்டங்கள் செய்ய, நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாக உருப்பெற்றனவாம். இதனால் தசரதன் முக்தி பெற்றாராம். ஸ்ரீராமன் வழிபட்ட அந்த நான்கு சிவலிங்கங்களும் இங்கே இருக்கின்றன. இதனால் இந்த இடத்தில் ஈசன் முக்தீஸ்வரர் என அழைக்கப் படுகிறார்.

அம்மன் சொர்ணவல்லி. முக்தீஸ்வரரும்-சொர்ணவல்லி அம்மனும் பேரழகுடன் விளங்குகின்றனர். அற்புதமான அலங்காரம்.  இந்த இடம் பித்ரு காரியங்களுக்கு உகந்த இடமாக, காசி – ராமேஸ்வரத் திற்கு நிகராக சொல்லப்படும் தலம்.

      மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஆதியில் வினாயகர் மனிதத் தலையோடு இருந்தார். பின்புதான் சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு, பின்னர் யானைத் தலையினைப் பெற்றார். 

      அவ்விதம் தலையைக் கொய்வதற்கு முன்னால், மனித முகத்தோடு இருக்கும் வினாயகர் இங்கே இருக்கிறார். எனவே இங்கு இருக்கும் வினாயகர் நரமுக வினாயகர் \அன அழைக்கப் படுகிறார். அதாவது மனைதத் தலையோடு! காண்பதற்கு அற்புதமாக இருக்கிறது.

       ஸ்ரீராமரே நீத்தார் காரியங்களைச் செய்த இடம் என்பதால், தேவைப் படுவோருக்கு நீத்தார் சடங்குகள் இங்கே செய்விக்கின்றனர் (சிரார்த்தம்-தர்பணம்-வருஷாப்திகம் போன்றவை). வேத பாடசாலையும் இருகின்றது.

       அழகும் அமைதியும் நிறைந்த கோயில். சென்று வாருங்களேன்.

  வழி: மாயுரம்-திருவாரூர் சாலையில், கூத்தனூருக்கு அருகே உள்ளது.

 நரமுக விநாயகர் 

ஈசன் முக்தீஸ்வரர் 


சொர்ணவல்லி


திருநாரையூர் - சனி பகவான் 

ஸ்ரீராமரின் தந்தை தசரத சக்ரவர்த்தி, வணங்கிய மூர்த்தி, திருநறையூரில் உள்ள ஈசன் இராமனாத சுவாமி.  

மேலும், இங்குதான் தசரதன், ரோஹினி சகடபேத சனீஸ்வர ஸ்ஞ்சார காலத்திலும், இப்பூவுலகைக் காப்பாற்ற சனிபகவானை வேண்டினாராம். 

சனிபகவானும் அவ்விதமே வாக்களித்தாராம். இத்தலத்தில், சனி பகவான் தனது வலது புறத்தில் மனைவி மந்தாதேவியுடனும் இடதுபுறம் மற்றொரு மனைவி ஜேஷ்டா தேவியுடனும் காட்சி தருகிறார்.

அவரது பாதத்தின் கீழே, மந்தாதேவியின் மகன் மாந்தி மற்றும் ஜேஷ்டா தேவியின் மகன் குளிகன் ஆகியோரும் தங்களது பெர்றோரை வணங்கியவண்ணம் காட்சி தருகின்றனர்.

போரில் வென்று திரும்பிய ஸ்ரீராமரும் இங்கு வந்து இராமனாத சுவாமியை வணங்கியிருக்கிறாராம்.

திரு நாறையூர் கோயில் முகப்பு (ராஜ கோபுரம் இல்லை)

சும்மா சொல்லல... நான் போயிட்டுதான் வந்தேன்... 


சனி பகவான் மனைவியருடனும் - பிள்ளைகளுடனும்


கூத்தனூர் சரஸவதி ஆலயம்

மஹா சரஸ்வதிக்கென்றே ஒரு ஆலயம். ஒருபள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர். ஆலயத்தின் வாசலில் நோட்டுக்களும்-பேனாக்களும் விற்கின்றனர்- அம்மன் காலடியில் வைத்து ஆசி பெற்றுச் செல்கின்றனர். சரஸ்வதின் அழகை சொல்லவும் வேணுமா?

கோயில் முகப்பு

மஹா சரஸ்வதி (இப்படம் நெட்டில் சுட்டது)

பிரசித்தி பெற்ற திரு நள்ளாறு சனிபகவான்

இக்கோயில் பற்றி எல்லோருக்கும் தெரியும் தானே?

திரு நள்ளார் கோபுரம்

இக்கோயிலுக்கு 20 வருடங்கள் முன்பு சென்றது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் கடைகள்..கடைகள்... க்யூ..க்யூ



திருநள்ளார் -  நள தீர்த்தம்.
மிக நன்றாக பராமரிக்கிறார்கள்.




1 comment:

  1. Myself, my Wife Smt Mallika along with my Friend Sri Rb, his life partner Smt Kv had been there at Thirumanikuzhi temple in a new Tamil year in early morning. We went in new Swift car. That car is not with me now. By seeing your article my memory recall that day. Fine days. __BT ARASU

    ReplyDelete