Tuesday, January 26, 2016

திருவாசி – குணசீலம் – உத்தமர்கோயில்.

இதற்குமுன்  கண்ட இரு பதிவுகளில் தரிசித்த, திருவெள்ளாறை, திருப்பைஞ்ஞீலி கோயில்களுக்குப் பின், மிகவும் தற்செயலாக, அப்போதுதான், கேள்விப்பட்ட ஒரு சிவஸ்தலம், திருவாசி. இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர். திருப்பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பட்ட இடம், தற்போது சுருங்கி திருவாசி என அழைக்கப்படுகிறது. இறைவி: பாலாம்பிகை. பதிகம்: திருஞானசம்பந்தர் (1), சுந்தரர் (1)

ராஜா, கொல்லிமழவனின் மகளுக்கு தீராத வலிப்பு நோய் நோயிருந்தது.  கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். திருஞானசம்பந்தர், திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு வந்தார். மன்னன்  சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க..” எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லை. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு உள்ள சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்க, அவர் கொடா மலிருக்க, கோபத்தினால், சிவனை இகழவதுபோலப் பாடி, முடிவில், தான் இகழவில்லை-பொறுத்தருளவேண்டும் என்ற பொருளில் பதிகம் பாட, இறுதியில் சிவன் பொன் தர, அந்தப் பொன்னை இரு வணிகர்களிடம் காட்டி, தரம் சோதிக்க, வணிகர் வடிவில் வந்த சிவா-விஷ்ணு, தரமான தங்கம்தான் என மாற்றுரைக்க, தங்கத்தை மாற்றுரைத்துக் காட்டியதால் "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தற்சமயம் கோயில் திருப்பணி நடந்து வருகிறது.

---------------------------------------------------------------------------------
குணசீலம்: 


இறைவன்:பிரசன்ன வெங்கிடாசலபதி-நின்றகோலம்.
இறைவி:   ஸ்ரீதேவி,பூதேவி
தாந்தீய மகரிஷி.-குணசீலமகரிஷி தவத்திற்கிணங்கி ஸ்ரீவெங்கடேச பெருமாளாக காட்சி.




---------------------------------------------------------------------------------
உத்தமர் கோயில்:

திருச்சிக்கு ட்ரெயினில் செல்லும் வழியில் ‘பிச்சாண்டார் 
கோயில்’ என்னும் ஸ்டேஷன் வரும். அங்கு இவ்வளவு 
பிரசித்தமான கோயில் இருக்கும் எனத் தோன்றவில்லை. 

சிவன், விஷ்னு,ப்ரம்மா என மூவரும் காட்சிதரும் அழகான 
கோயில்.

சுவாமி : பிச்சாண்டார், பிச்சாடனர், பிச்சாண்டவர். சிவன்) -  
               மற்றும் சௌந்தர்ய பார்வதி,
              
               புருஷோத்தமன் (விஷ்னு).  
               பூர்ணவல்லித் தாயார்
               
               பிரம்மா, சரஸ்வதி.
       
        இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
             
தீர்த்தம் :  கதம்பதீர்த்தம். (அய்யன் வாயக்கால், ஒரு கிணறு, 

பிரகலாத தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்) 

விருட்சம் :  கதலி மரம்  (வாழை) என்று சொல்கிறார்கள்

புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் 
கோயில் எனப் புகழ்  பெற்றது. முப்பெரும் தேவியர் 
உடனுறை மும்மூர்த்திகள் அருளும் ஒரே  திருத்தலம். 
சப்தகுரு பகவான்கள் அருளும் ஒரே குருபரிகார ஸ்தலம். 
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த 
 திருக்கோவில்.

பிக்ஷாடன மூர்த்தியாக சிவன் காட்சி அளிப்பதால் 
பிக்ஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.   
திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர்
சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி 
தந்தருளிய  பெருமான் இவர்.  மும்மூர்த்திகளும் முப்பெரும் 
தேவியருடன் அருகருகே தனித்தனி சந்நிதிகளில் அமைந்து 
அருளும் ஸ்தலம்  இந்தியாவில் இது ஒன்றே. 

மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவத் 
திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை  உடையது.

சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிச்சாடனர் 
திருகோலம் அவதரித்த தலம். சப்தகுருக்கள்என்று 
 அழைக்கப்படும், பிரம்மகுரு, விஷ்ணுகுரு, சிவகுரு, சக்திகுரு, 
சுப்ரமயணிகுரு, தேவகுரு, பிரஹஸ்பதி, அசுரகுரு 
சுக்ராச்சார்யார் ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு 
விளங்கும் தலம்.  தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் 
விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் 
ஸ்தலம்.  பிரம்மாவின் இடப்புறம் தனிசன்னதியில் 
ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கும் இடம்.  அனுமனின் 
வால் தலைவரை இருப்பதையும், அதில் மணியினைக் 
கட்டியிருப்பதையும் காட்டினார் குருக்கள்.






பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி 
எறிந்ததால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாலட்சுமியைக் 
கொண்டு பிச்சையிட்டதாகவும், அதனால் அச்சாபம் 
நீங்கியதாகவும் கூறுவது உண்டு.

(படங்களில் சில 'நெட்'   உதவி.)

1 comment:

  1. அமர்க்களம். நல்ல பதிவு. வாழ்க

    திருநாவுக்கரசு

    ReplyDelete