Monday, August 24, 2015

வெங்காயம்..

இந்தியாவில் 'வெங்காய அரசியல்' அரசுகளை வீழ்த்தும் வல்லமை வாய்ந்தது என்பது தெரிந்தது தானே? இந்த வருடம், விளைச்சல் எவ்வளவு இருக்கும், தேவைக்கு போதுமா, டிமான்ட் எவ்வளவு என்பது போன்ற தகவல்களைக்கூட முன்கூட்டியே திரட்ட இயலாத, திராணியற்றவர்களா நாம்?  மந்திரிமார்கள் எல்லாம் பின் என்னதான் செய்கிறார்கள்? செக்ரடரி நீட்டும் ஃபைல்களில்  கையெழுத்து போடுவதோடு சரியா?

கண்ட குப்பைகளையெல்லாம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் தெரிகிறது, வெங்காயப் பற்றாக்குறை வருமென யூகித்து, முன்னாலேயே டெண்டர் விடத் தெரியவில்லையா?  உள்ளுர் கொள்ளைக்காரர்கள் எல்லாம் பதுக்கிவைத்து லாபம் ஈட்ட வழி வகுக்கிறார்களா?

காங்கிரஸ் இருந்தபோது, வெங்காய மாலை போட்டுக் கொண்டு, தில்லியில் நர்த்தனமாடிய பா.ஜ.க,  இப்போது என்ன செய்கிறது?    ஏன் முன் கூட்டியே திட்டமிடவில்லை? வெங்காய தட்டுப்பாட்டை எதிர்பார்த்தார்களா இல்லையா?

வடக்கே வெங்காயம் இல்லையென்றால், சமையலே இல்லை என்பதும், சாதாரண மக்களின் இந்த  குறைந்த பட்ச தேவையைக் கூட நிறைவேற்ற முடியவில்லையெனில், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற 'வோட்டு அரசியல்' கூடவா மறந்து போயிற்று?

அரசு இயந்திரத்தை முடுக்கத் தெரியாமல், என்ன Governance நடக்கிறதோ புரியவில்லை?

1 comment:

  1. வெங்காயம் தான் முந்தைய பா.ஜ.க அரசை கவிழ்த்தது!

    ReplyDelete