Monday, August 24, 2015

உத்தமமான காரியங்கள் சில

 அ. சிலவற்றை மறந்துவிடுதல்


  •       நன்றியற்றவர்கள் செய்யும் செயல்கள்.
  •      சீர் செய்ய முடியாத துக்கங்கள்.
  •       வேறு மாதிரியாக செய்திருந்தால் இன்னமும்  
         
    நன்றாக  இருந்திருக்குமே  என்ற சிந்தனைகள். 
  •      என்றோ ஏறுக்குமாறாக செய்துவிட்ட Embarrassing  ஆன செயல்கள்.
  •        பிறருக்கு செய்த உதவிகள்.    

   ஆ. சிலவற்றை மன்னித்துவிடுதல்:

            1.       செய்யத் தவறிய கடமைகளுக்காக வருந்துதல்..
            2.       திரும்பப் பெறமுடியாத அழகிய தருணங்களைப்  பற்றிய நினவு 
      3.       உறவுளின் தூஷனைகளை..
            4.       நட்புக்களின் பாரா முகத்தை..
            5.       பெரியோர்களின் தவறுகளை..
            6.       திரும்ப வாழமுடியாத காலங்களை எண்ணுவதை..

   இ. சிலவற்றை தவிர்த்துவிடுதல்

           1.       கூடா நட்பை...
           2.       தரமற்றவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை...
           3.       சபலப்பட்டுவிடுவோம் என உணர்ந்தால், அம்மாதிரியான 
               சந்தர்ப்பங்களை..
           4.       தகுதிக்கும் திறமைக்கும் அப்பாற்பட்டவற்றை பந்தாவிற்காக ஏற்றுக் 
               கொள்வதை..
           5.       வாக்குவாதம் வரும் என்று தெரிந்தால், அவற்றை..
           6.       உணர்ச்சிமயகாக இருக்கும் போது, முடிவெடுப்பதை..

   ஈ. சிலவற்றை விரும்பி நாடிச் செல்லுதல்..

          1.       உத்தமமானவர்களின் சேர்க்கை. சத் சங்கம்.
          2.       நல்ல புத்தகங்கள்.
          3.       ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை..
          4.       மனதுக்குப் பிடித்த அமைதி தரும் இசை..
          5.       மலைகள், கடல்கள், ஆறுகள்..அருவிகள்.. வழிபாட்டுத் தலங்கள்.

 உ. சிலவற்றை கண்டும் காணாமற் போய்விடுதல்.

1. குழந்தைகளின் சிறு சிறு பொய்கள்.
2. வேலையாட்களின் / கீழ்-உடன் பணைபுரிவரின் சிறு தவறுகள்.
3. வாழ்க்கைத் துணையின் பலவீனங்களை..
4. உயரதிகாரிகளின் அற்ப அபத்தங்களை...
5, சமூக வலைத்தளங்களில் யாராவது, சானி வாரி அடித்தால்..  
  ஹி..ஹி..

  ஊ.  சிலவற்றை தவிர்க்கக் கூடாது..

             1.       தன் நலமே பாராது, ஆபத்துக் காலங்களில் எல்லோருக்கும் உதவி...
            2.       உறவுகளின் / நட்புக்களின் சுப /அசுப காரியங்களில் பங்கேற்பது..
            3.       தன்னையும்,தன் வீட்டையுமாவது சுத்தமாக வைத்திருத்தல்...
            4.       யோகாசனங்கள், தியானம்...
            5.       பசியோடிருப்போருக்கு உணவிடுவதை..

  எ.  சிக்கலில் மாட்டிகொள்ளும்  சூழல்கள்.

           1.       பொறாமை, கர்வம், அகங்காரம் கொள்ளுதல்..
           2.       திட்டமிடாமல் துவங்கும் எந்த செயலும்..
           3.       மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்துகொள்ளௌம் சூழல்கள்..
          4.       யோசிக்காமல் பேசிவிடும் வார்த்தை..
          5.       பழி வாங்க நினைத்தல்..


2 comments:

  1. அனைத்தும் பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய வாக்கியங்கள்! அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  2. பிரமாதம்; நான் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டேன். நன்றி!

    ReplyDelete