Wednesday, February 4, 2015

முதுமையின் ரகசியம்...


எனதன்பு முதிய நண்பனே! முதுமை கண்டு அஞ்சவேண்டியதில்லை;
பிறப்பதும், வயதாவதும்,நோய்வாய்படுவதும், மரணிப்பதும் இயல்பான ஒன்றே!இவை ஏதும் உனக்கு மட்டுமே நடக்கும் பிரத்தேயேக நிகழ்வல்ல!
 சற்றே கண்களைத் திறந்து பார்...ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டிக் கிடக்கின்றன..சப்தமின்றி மலரும் பூக்களை ரசி!சலிப்பின்றி ஆர்பரிக்க்ம் கடலை ரசி!மௌன பிரம்மாண்டமான மலைகளை ரசி!தத்தித் தவழும் ஓடைகளையும்,
சீறும் ஆறுகளையும் பார்..மரகதக் காடுகளையும், அதன் மடியில் விளையாடும் விலங்குகளையும் பார்..ரசிக்க வேண்டியவை உலகில் கொட்டி கிடக்கின்றன.. நடந்தவை குறித்து வருந்தாதே!அதனால் பலனேதும் இல்லை..ஆயுளின் பாதிக் கிணறு தாண்டும் வரை எதற்கும் அஞ்சாதே!தாண்டியபின் நடந்தவை குறித்து வருந்தவும் செய்யாதே! நேற்றும் – நாளையும் உன்னுடையதல்ல! 
கடந்தவையாவும் உன் விருப்பம் போல அமையாமல் இருந்திருக்கக் கூடும்!

நடக்கவிருப்பதற்கும் எவரும் உத்தரவாதம் இல்லை! எனினும். இக்கணம் உண்ணுடையதுதானே!
ருசித்து வாழ்.. கோலூன்றுவதற்கு முன்னரே, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிடு,

கேட்க வேண்டியவற்றை கேட்டுவிடு..உன்னால் முடியும் பொழுதே..... வாழ்வை சுவைத்துக்கொள்-நேர்வழியில்!

தளர்ந்தபின் வருந்தியும் - விரும்பியும் பலனில்லை நன்பா!

 இதுவே சந்தர்ப்பம்.. உன பள்ளித் தோழனைப் பார்..கல்லூரி நட்பைத் தேடிப்பார்..உன்னிடம்-உன்னோடு வேலை செய்தவர்களை நாடிப்பார்..அவை உண்டு களித்து கலைவதற்கு அல்ல..நினைவுகளை அசைபோடு..மலரச் செய்.. இதோ... உன் கண் முண்ணே காலம் கரைந்து கொண்டிருக்கிறது..முடிவு எப்போதும் வரலாம்..இக்கணம் விட்டால் எக்கணமும் இல்லாமல் போகலாம்..அதற்குள் அவர்களைப் பார்த்துவிடு.. ஆடி ஓடி சேர்த்து வைத்த பணம் யாவும்உண்ணுடையது என எண்ணாதே.. போகும் பொழுது உன் அரஞாண் கயிற்றைக் கூடஅறுத்துத் தான் புதைக்கப் போகிறார்கள்.உணர்ந்து கொள்..கொண்டு போவது யாதொன்றுமில்லை.. தேவைப் படும் பொழுது உனக்காக செலவழிக்கத் தயங்காதே..இலவு காத்த கிளியாகாதே.. முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்..இக்கணம் மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
அதுவே வாழ்வின் பொருள்..! நல்லனவற்றை அடிக்கடி உண்.. அது நல்லது..விருப்பமானவற்றை விலக்கி விடாதே.. குறைவாக உண்.. நோய் வரட்டும்.. நம்பிக்கையோடு எதிர்கொள்..நோய் வராதவர் யார்?
தாய் கொண்டுவந்ததை நோய் கொண்டு செல்வது புதியதல்லவே?நீ மட்டும் விலக்கா என்ன?வாழ்வே அதுதானே? உடலுக்குமட்டுமே மருத்துவர்.. ஆன்மாவுக்கு இறைவனே! உன் சந்தோஷத்திற்கு நீ மட்டுமே பொறுப்பாளி!இது இருந்தால் மகிழ்வேன்.. அது கிடைத்தால் மகிழ்வேன்.என மகிழ்ச்சிகு  நிபந்தனைகள் விதிக்காதே..அப்படி ஒன்று உலகில்  நடக்கவே நடக்காது! கவலைப் பட்டால், வலி தீரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் சந்தோஷம் வரும் எனில் தாராளமாக கவலைப் படு..கவலைப் பட்டால் வாழ்வு நீடிக்கும் எனில் தாராளமாக கவலைப் படு..உனக்கே புரியும்,  எது சரியென.. வார்சுகளுக்காக  கலங்காதே..செய்ய வேண்டியது என்ன வென்று அவர்களுக்குத் தெரியும்..அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும்.. உனக்கான கடமைகளை விரைந்து முடி...சிக்கல்களைத் தீர்த்துக் கொள்.. விடாப்பிடியாக சினம் கொண்டிருப்பவர்களையும்,உன்னை அவமானப் படுத்திப் பார்ப்பதில் மகிழ்வோரும் இருப்பர்அவர்களைப் புறம் தள்ளு.. அனைவரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்..அன்பு ஒன்றே அனைத்தையும் வெல்லும்... நான்கு மந்திரங்களை மறக்காதே.. 1.       உடல் நலத்தைப் பேண்.. மன நலமும் கூடத்தான்.. அதுவே      
       அடிப்படை!

2.       உன்காலம் வரை உன் பணத்தை உன்னிடமே வைத்துக் கொள்..

3.       வாழ்க்கைத்துணையை நேசி..ஒவ்வொரு கணமும்    ஆனால் புரிந்துகொள்.. இருவரில்      ஒருவர் முந்தியே ஆகவேண்டும்.. மனதளவில் தயாராகு..  

4.       நட்புக்களை ஒரு பொழுதும் இழக்காதே.. ஆறு ஒரு பொழுதும் பின்னோக்கிப் போகாது... மீண்டும் வாழ இயலாது.. ஒவ்வொரு கணத்திலும் புன்னகை செய்.. நகைக் கற்றுக் கொள்.. அன்பும் மகிழ்ச்சி பெருகட்டும்...

1 comment:

  1. //நான்கு மந்திரங்களை மறக்காதே.//

    மறக்க மாட்டேன். மறக்கவே மாட்டேன். நன்றி, மிக்க நன்றி.

    ReplyDelete