Thursday, May 24, 2012

சம்மர் கேம்ப்


கோடை விடுமுறையில், பள்ளிக் குழந்தைகளை, பல்வேறு ‘கோர்ஸ் களில் சேர்த்துவிடுவது தற்போதைய நடைமுறை. வீட்டில், தங்களை தொல்லை செய்யாமலிருக்கவும், பிள்ளைகள் ‘டைம் பாஸ் செய்வதற்காகவும், ‘அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இம்மாதிரியான கோர்ஸ்களில் சேர்ந்துவிட்டபடியாலும்,  நாமும் இவ்வாறே செய்வது அவசியமாகிறது!

இம்மாதிரியான சம்மர் கோர்ஸ்களில்  சில, சுவாரஸ்யமான அனுபவங்களைத் தருவதுண்டு.

வடக்கே, ராணுவத்தில் பணியாற்றும், எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தைகளும், ராணுவத்தினர் ஆரம்பித்து வைத்த, ஒரு சம்மர் கோர்ஸில் சேர்ந்தனர்.

அக் குழந்தைகளுக்கு, இயற்கை சூழ்நிலையில், மிருகங்களைப் பற்றியும் ராணுவத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பதற்காக இந்த கேம்ப் நடத்தினர்.

குழந்தைகள் யாவரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, நடத்துபவர், (அவரும் ராணுவ அதிகாரிதான்) குழந்தைகளை, அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ‘ஈஸியாக்குவதற்காக, கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவற்றிற்கு குழந்தைகளின் கபடமற்ற பதில்களும்:

1.      உங்களுக்கு எதைக் கண்டால் பயம்?

இருட்டைக் கண்டால்.

2.      எந்தப் பாடம் உங்களுக்கு பிடிக்காது?

கணக்கு!

‘ஏன்?

‘கணக்கு டீச்சர், பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார்.
(டீச்சர்கள் இதைக் கணக்கில் கொள்க!)

3.      சினிமா நடிகர் யாரைப் பிடிக்கும்?

‘நன்றாக ஃபைட் செய்யும் யாரையும்.

4.      நடிகை?

‘ஃபைட் செய்யாத எல்லா நடிகையையும்.

5.      ஸ்கூலில் பிடித்த பீரியட் எது?

எல்லா ஃப்ர்ஸ்ட் பீரியடும், கடைசி பீரியடும்.

‘ஏன்?

‘ஃப்ர்ஸ்ட் பீடியட் ஜாலியாக இருக்கும்! கடைசி பீரியடுக்குப் பின் வீட்டிற்கு போகலாம்.

6.      வீட்டில் எதற்கு திட்டினால் பிடிக்காது?

‘ஹோம் வொர்க் செஞ்சதுக்குப்பின்னும் ‘படி-படின்னு சொன்னால்

7.      பெற்றோர் மேல் எப்ப கோபம் வரும்?

‘கேட்டதை வாங்கித் தரவில்லையென்றால்!

8.      படித்து முடித்ததும் என்ன வேலை பார்க்க ஆசை?

‘பைலட் அல்லது ‘ஆர்மி ஆஃபீஸர்

ஏன், டீச்சர் ஆக ஆசையில்லையா?

‘இல்லை! ஏன்னா, பசங்க சொன்ன பேச்சை கேட்க மாட்டாங்க!

9.      பிடிச்ச சாப்பாடு எது?

‘பீட்ஸா

10.   நம்ம நாட்டிற்கு ஃப்ரண்ட் யார்? எனிமி யார்?

‘எனிமி, பாகிஸ்தானும்-சீனாவும்

‘ஃப்ரண்ட் யாருமில்லை!
 (இதை மன்மோகன் சிங் கவனத்தில் கொள்ள வேண்டும்)


11.  படிச்சு முடிச்சதுக்கப்புறம் வெளி நாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த நாட்டிற்கு போவீர்கள்?

‘அமெரிக்கா

12.  யாரைக் கண்டால் பிடிக்காது / பயம்?

அம்மாவைக் கண்டால் பயம்.
ஏன்? அப்பாவைக் கண்டால் பயமில்லையா?
அப்பாவைக் கண்டால் பயம் இல்லை! ஆனால் அப்பாவிற்கே, அம்மாவைக் கண்டால் பயம்தான்

எல்லாச் சிறார்களின் மனோபாவமும் இப்படித்தான் என, கொள்ளலாமா?

1 comment:

  1. வர வர பசங்க ரொம்பதான் பயமில்லாம பதில் சொல்றதுகள்!
    அப்பாவுக்கு அம்ஆவை கண்டால் பயம் , என்னை கவர்ந்தது.;-)


    என் புதிய பதிவை பார்த்து உங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.(முடிந்தால்)

    http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

    நன்றி.

    ReplyDelete