Sunday, August 21, 2011

அந்தந்த வயதுக்கு.....

அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் எந்த கணமும் நிகழும். 
எதிர்காலம், நமக்காக, தனக்குள் வைத்திருக்கும் செய்திகள் பலவும் ரகசியமானவை. 18/08/2011 அன்று மாலை,  பணி நிமித்தமாக அருகில் உள்ள விருத்தாஜலம் என்ற ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டி ருந்தேன். கைபேசியில் பழக்க மில்லாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு. 

"நான் 'குமார் பேசறேன்!"

" எந்த குமார்? எங்கிருந்து?" 

" நான் தான் திருச்சி குமார்"

நினைவுக்கு வந்துவிட்டது.  எனது சகோதரர் மகன். 

"என்னப்பா நல்லாயிருக்கியா? என்ன விசேஷம்?"

"சித்தப்பா.. கடலூர் மகாத்மா மெடிக்கல் காலேஜ் மருத்துவ மணையில் "Skull Open Surgery"  செய்யலாமா?

இந்த திடீர் விணாவிற்கு நான் தயாராக இல்லை. கொடுத்த தகவல்களும் போதுமானதாக இல்லை.  குமார் மிகுந்த பதட்டத்தில் இருந்தார்.  அவரிட மிருந்து பெற்ற தகவல்களைத் தொகுத்துப் பார்த்த உடண், பதட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது.

விஷயம் இது: மதியம் குமாரின் தந்தை (எனது சகோதரன்) தனது வீட்டு மாடிக்கு சென்றிருக்கிறார்.  இறங்கி வரும்பொழுது, மாடியிலிருந்து இரண்டாவது படியிலிருந்து கீழே எட்டிப் பார்த்திருக்கிறார். என்ன நிகழ்ந் தது எனத் தெரியவில்லை!  கிட்டத்தட்ட ஏழு/எட்டு அடி உயரத்திலிருந்து தலைகுப்புற தரையில் விழுந்துவிட்டார். விழுந்த இடம் தண்ணீரைத் தேக்கி வைக்க பயன்படும் 'சம்ப்'. 

ஏதோ சப்தம் கேட்கிறதே என சந்தேகமாய் வீட்டில் உள்ளவர் வந்து பார்க்கும் பொழுது, தலை சம்ப் ஸ்லாபில் மோதி இரத்தம் ஊற்றாய் தலையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அவரை, முன்பு சொன்ன மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டுபிடித்தது என்னவெனில், விழுந்த வேகத்தில், தலையில் மூளையைச் சுற்றி வலது பக்கத்தில் மிகுந்த அளவில் இரத்தம் உறைந்து கிடக்கிறது. இதனால் மூளை 14 mm இடது பக்கமாக நகர்த்தப்பட்டுவிட்டது.  உடனடியாக தலையில் ஆபரேஷன் செய்து உறைந்த இரத்தக் கட்டிகளை அகற்றியாக வேண்டும். இல்லை யெனில் உயிருக்கு ஆபத்து நேரும்.

இந்த நிலையில்தான் மேற்கண்ட கேள்வி எழுப்பப் பட்டது! "கடலூர் மகாத்மா மெடிக்கல் காலேஜ் மருத்துவ மனையில் "Skull open surgeroy"  செய்யலாமா? இல்லை சென்னைக்கு அழைத்துச் செல்லலாமா?"

என்ன சொல்ல? 

இந்த சூழ்நிலையில் எவருக்கும் குழப்பம் வருவது இயல்புதானே?  செய்தி தந்த அதிர்ச்சி ஒருபுறம்.  சில நிமிடங்களில் முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் ஒருபுறம்.

"பதட்டப் படாதே... விசாரி... நம்பிக்கையான, விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரி... " எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஒரு expert உதவினார்.  "ஒரு சர்ஜனின் பெயரைச் சொல்லி, அவர் நம்பிக் கையாகச் சொன்னால், அவரே அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் இந்த மருத்துவ மனையிலேயே செய்து கொள்ளலாம்" என பதில் வந்தது.  அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது போலும்!  வாரம் ஒரு முறை சென்னையிலிருந்து வரும் அந்த சர்ஜன் தான், இவரை கவனித்திருக் கிறார். எனவே உடனே அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தோம்.

இரவு 9 மணிக்கு தெரிவித்தார்கள். இரத்தம் இரண்டு யூனிட்கள் வேண்டும். "A1-negative". அரிதான இரத்த குரூப்.  ஆஸ்பத்திரியில் ஸ்டாக் இல்லை என்றனர். (ஒரு யூனிட் தான் இருக்கிறதாம்) இந்த நேரத்தில் எங்கேபோய்த் தேட?  நானே A1-negative என்பதால் ஒரு யூனிட் கொடுத்து விட்டேன். மற்றுமொரு யூனிட்டுக்கு ஆளாளுக்கு தேடினார்கள். கிடைக்கவில்லை.  காலை Replacement தருவதாக வாக்குறுதி தந்துவிட்டோம்.

அறுவை சிகிச்சை காலை 4 மணிவரை நடந்தது. ஆப்பரேஷன் சக்ஸஸ்.   பிற பாதிப்புகள் எதேனும் உள்ளனவா என்பது பிறகுதான் தெரியும்.

இந்த விஷயத்தை உங்களிடம் எதற்காகச் சொல்கிறேன்?

வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த வயதுக்கு உண்டான காரியங்களைத் தான் செய்ய வேண்டும். செய்ய அனுமதிக்க வேண்டும். அடிபட்டவரின் வயது 70. இந்த வயதில் மாடியிலிருந்து எட்டிப் பார்க்காவிட்டால் என்ன?  கீழ்க்கண்ட குறிப்புகளைப் படியுங்கள்:


1.  Falls are the leading cause of TBI.(Traumatic Brain Injury)

     People ages 75 and older have the highest rates of TBI-related 
     hospitalizations and death. 

2. How to make the surroundings safer: 

    a. Nearly half of all falls happen at home. 
        Here are some things you can do to make your home or surroundings safer:

    b. Remove things from stairs and floors that might cause you to trip, like papers, books, 
        clothes, and shoes. 

   c.  Remove small throw rugs or use double-sided tape to keep the rugs from slipping.

   d. Keep items you use often nearby. You should not need to use a step stool to reach them. 

   e. Have grab bars put in your bathroom. Place them next to the toilet and in the tub or shower.

   f. Place non-stick mats in the bathtub and on shower floors. 

   g. Improve your lighting. We need brighter lighting as we age. 
       Change your lampshades or use frosted light bulbs to help reduce glare.

   h. Be sure there are handrails and lights on all staircases.

   i. Wear shoes /Sandals that give you good support. They should have thin, non-slip soles. You 
      should  avoid  wearing slippers and socks.


3.  Have your vision checked (This is most important)

     The eye doctor should be sure you have the correct  eyeglasses and that you have 
     no conditions limiting your vision, like glaucoma or cataracts. Poor vision can increase the 
     chance of  falling


4.  மிக முக்கியமாக, மனதில் உறுதி இருந்தாலும், உடலில் வலு இல்லா விடில், ரிஸ்கான  எந்த காரியத்தையும் செய்யக் கூடாது. 

 உதாரணம்: 

 இரவில் வாகனங்களை ஓட்டுதல்,   
  வழுக்கும் இடங்களில் நடத்தல்,
 வயதுக்கு மீறிய பளுவினை தூக்குதல், 
  ஸ்டூல்-ஏணி   இவற்றின் மேல் ஏறுதல்.

விழுந்து அடிபட்டுக் கொண்டால், பாதிப்பும் வலியும் உங்களுக்குத்தான்.  இவற்றை   எவரும் உங்களுக்காக வாங்கிக் கொள்ள முடியாது. 

உங்களுக்கும்-உங்கள் பிள்ளகளுக்கும் மிகுந்த சிரமத்தினையும்-மனவேதனையையும்   ஏற்படுத்தாமலிருக்க மேற்சொன்ன வழிகளை கடைப்பிடியுங்கள்.

No comments:

Post a Comment