Sunday, August 14, 2011

Independence day Wishes to All

சுதந்திர இந்தியாவில்தான் பிறந்தேன்.  எனவே 1947-க்கு முந்தைய சரித்திரம் எல்லாம் புத்தக அறிவு தான். சுதந்திரம் என்றால் என்ன என்பதெல்லாம் புரிந்தது, 20 வயதுக்கு அப்புறம் தான்.  பள்ளி நாட்களில், கொடியேற்றத்தின் போது கிடைக்கும் 'பப்பர்மிண்ட் மிட்டாயை" த்தவிர' வேறேதிலும் நாட்டமில்லை.  


சுதந்திரம் அடைந்தற்காக நாம் "கொண்டாடும் தலைவர்களும்", "முகம் தெரியாத தியாகிகளும்" செய்த நம்பற்கரிய தியா கங்களையும் புத்த கங்கள் வாயிலாகத் தான் தெர்ந்து கொண்டேன்.


வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன், நமது நெல்லிக் காய் மூட்டை சமஸ்த்தானங் களால், கூறு பட்டு கிடந்த நமது நாட்டை, அடிமை செய்வது, சுலபமாக இருந்தது.


இவர்களை விரட்டியடிக்க நமது மூதாதையர் செய்த தியாகங்கள் கொஞ்சமா நஞ்சமா?


சிப்பாய் கலங்களில் போராடி, குண்டடி பட்டு உயிர் நீத்த, நமது தியாகச் சிப்பாய்களால் வந்த சுதந்திரம் இது. 


அஞ்சா நெஞ்சர்கள் பகத்சிங், சந்திரபோஸ் போன்ற தியாகிகளால் கிடைத்த வாழ்வு இது. 


மனைவியை ஆங்கிலேயன்,துகிலிரிக்கும் போது கூட கணவன் எங்கே பதுங்கியுள்ளான் என கூற மறுத்த பெண்களால் வந்த சுதந்திரம் இது! 


ஆங்கிலேயனிடம் அடிபட்டு செத்தாலும் சாவேனே தவிர, இந்தியக் கொடியை கீழே போட மாட்டேன் என முழக்கமிட்டு உயிர் நீத்தவர்களால் வந்த சுதந்திரம் இது! 


சுதந்திரப் போராட்டத்திற்காக பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பை, உத்தியோகத்தை, நில புலன் களை துச்சமாக மதிதது, போராட்டகளில் இணைந்த வீரச் செல்வங்களால் கிடத்த சுதந்திரம் இது!


எந்த நாடு தியாகிகளை மறக்கிறதோ அந்த நாடுகள் எல்லாம் மீண்டும் அடிமைப்பட சபிக்கப்பட்டுள்ளது!


ஆனால், நாம் நமது தியாக புருஷர்களுக்கு நாம் என்ன பதில் வைத்தி ருக்கிறோம்? 


அனைத்து திட்டங்களிலும், நமது கேடுகெட்ட அரசியல் வாதிகள், சுருட்டோ சுருட்டென்று சுருட்டி, சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்றா? (கார்கில் சவப்பெட்டியிலிருந்து, 2ஜி வரையும் எதையும் விட்ட பாடில்லை)


64 வருடங்கள் ஆனபின்னும் ஏழ்மை நீங்கிய பாடில்லை என்றா?


நூறு சதம் கல்வியறிவு எட்டவில்லை என்றா?


ராஜ பரப்பரை போல நமது அரசியல் தலைவர்களின் வாரிகள் நாட்டை ஆளுவதற்கு, "பெருமாள் மாடு" போல, மக்களாகிய நாம்,  தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம் என்றா? 


நேரு குடுப்பத்தை விட்டால், இந்தியாவை ஆள, எவனுமே இல்லையா என்ன?  


இங்கே கருணானிதிக்கு இரண்டு வாரிசுகள். கேரளாவில் கருணாகரனின் வாரிசு ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி!  தில்லியிலும் வடக்கிலும்  கணக்கே இல்லை !


நாட்டின் எல்லா அரசியல் கோளாறுகளுக்கும் , சில வருடங்கள் நீங்க லாக, இந்தியாவை 'ஆட்சி செய்து வந்த நேரு குடும்பம்' தான்,  பொறுப் பேற்க வேண்டும்.  


சரி.."நேரு குடும்ப கட்சிக்கு"  மாற்று ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்து பி.ஜே.பி யிடம் ஆட்சியைக் கொடுத்தால், காங்கிரஸே பரவா யில்லை என ஆக்கிவிட்டார்கள்.  மத்திய அரசு, ம.பி, உ.பி, ராஜஸ்த்தான் என கிடைத்த எல்லா வாய்ப்புக்களயும் சொதப்பினார்கள்.  


இந்த கட்சிக்கு, கடைசியாக் கர்னாடகாவில் 'எடியூரப்பா' என ஒரு கோமாளி கிடைத்தார். நிலத்தில் ஊழல் செய்து, கோவிலில் சத்தியம் பண்ணி, புடவை கட்டி, ஹோமம் செய்து ... , ஒரு வழியாக நடையைக் கட்டினார்.  போதுடா சாமி!


மக்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  சுதந்திர தினம் என்றால், அன்றைக்கு ஒரு நாள் லீவு, அவ்வளவுதான்.  டி.வி யில் மூழ்கி, "சாம்பார் செய்வதற்கு பெரிதும் உபயோகப்படுவது வெங்காயமா? பெருங்காயமா?" என்று "பாப்பையா" பட்டி மன்றத்தில் மூழ்கிக் கிடப்போம்.  தமன்னாவோ, ஸ்ரேயாவோ சினிமா பேட்டி கொடுப்பார்கள்.  வாயை 360 டிகிரியும் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டி ருப்போம். அப்புறம் விடாது சினிமா!  சாயங்காலம் ஆனால் 'சாராயத்தைக் குடித்து விட்டு' ரோட்டில் 'கட்டையாகிக்' கிடக்கலாம்.  


ஒரு பத்து நிமிஷம் செலவு செய்து அலுவலக கொடியேற்ற நிகழ்ச்சிக்கு போக முடியாத நம்மால்,  கற்பனை செய்துகூட பார்க்க முடியாத தியாகங்களை செய்து காட்டிய நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளை நாம் நினைவில் கொள்வது எங்கனம்?


குறைந்த பட்சமாக, பகத்சிங், சிங்காரவேலர், ஜீவா, கொடி காத்த குமரன், நேருஜி, நேதாஜி ஆகியோரது சரித்திரங்களை படித்துப் பார்க்க கோரு கிறேன். மெய் சிலிர்க்கும்.  இப்படி யெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக் கிறார்களா என வியப்போம்.  


மக்களது யோக்யதாம்சம் என்னவோ, அதற்குத்தகுந்தமாதிரித்தான் அவர்களுக்கு 'அரசாங்கம்' வாய்க்கும்!  நமது தகுதிக்கு இப்படிப்பட்ட அரசாங்கங்களே போதுமானதோ என்னவோ?


நாளை, அன்னா ஹசாரே "தியாக விளக்கு" ஏற்றச் சொல்லியிருக்கிறார்.  எத்தனை போர் வருகிறார்கள் என பார்போம். மத்திய அரசு "ஹசாரேயை" யும் அவரது ஆட்களையும் உதைத்து உள்ளே தள்ளி சுதந்திர தினத்தை கொண்டாடப் போகிறார்களா இல்லை அரஸ்ட் செய்து சாயங்காலம் விட்டிவிடப் போகிறார்களா என்று? 


இந்த போராட்டம் வெல்வது 'ஹசாரே' கையில் இல்லை! மக்களாகிய நாம் எப்படி "ரியாக்ட்" என்பதைப் பொறுத்துத் தான் இந்த போராட்டம் வெல்வதும்-வீழ்வதும்!   ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment