Friday, August 26, 2016

மீண்டும் வாழ்ந்தால் ...

இன்றும் வழமை போல, வாட்சப் நிரம்பி வழிந்தது. நேர்மையாகச் சொன்னால், பலவற்றைப்  படிப்பதே இல்லை. ஒரே விஷயம், நூறு பேரிடமிருந்து வந்தால், சலிப்பாகத்தானே  இருகும்?  எனவே, " க்ளியர் ஆல் " சௌகரியமான தேர்வு.

இன்று வந்தஒரு   தகவல், 'பாம்பு' என ஆரம்பிக்ககவே, 'அம்புலிமாமாவி' ன் சுவாரஸ்யத்தில் முழுவதும் படித்தேன். சுருக்கம் கீழே!

பாம்பொன்று,  வளைந்து நெளிந்து  ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு  குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாக, அருகே  போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச
நேரத்திலேயே மற்ற குரங்குகள்  கூட்டமாக  கூடி வந்துன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு  பிடியை விட்டதுமே பாம்பு அதைப்   போட்டுடும். தப்பிக்கவே முடியாது " என்று அதன் காதுபட பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனைபட்டது  , எந்த நேரமும் கொத்திச் சாகடிக்க காத்திருக்கும் நச்சுப் பாம்பு,  மரண பயம் குரங்கை  வதைத்தது.  "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.  அட.. . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நாமும்எ த்தனையோ  கடந்து போன கவலைகளையும், வன்மங்களையும், ஆத்திரத்தையும், ஈகோவையும், அந்தக் குரங்கு போல,   செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
                                                           
சோஷயல் மீடியாக்கள் பிரபலமான பின், தகவல்களும் அறிவுரைகளும் கொட்டேஷன்களும் நம்மைப் பந்தாடுகின்றன.    பகிர்பவர் உட்பட , எல்லோரும் கவல்களைக்  "கேட்டுக்" கொள்கிறோம்...ஆனால் "உணர்ந்து" கொள்கிறோமா என்பது சந்தேகம்தான்.

மேலே சொன்ன குரங்குக்குக்  கதையை 1973லேயே பெங்களூரில், ஒரு பிரசங்கத்தில் கேட்டிருக்கிறேன். ஆனாலும் எத்தனை பாம்புகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன்? இக்கதையை "உணர்ந்து" கொள்ள 43 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது!!

வயதும், காலமும் சிந்தனையோட்டத்தை புரட்டிப் போட்டு விடுகின்றன.  தற்போது திருமூலரையும், ராமணரையும் (தி.மலை) படித்தால், அவர்களின் பாடல்களின் பொருள் வேறு ஒரு டைமன்ஷனில்  விளங்குகிறது.

சில்வர் டங் "சீனிவாஸ சாஸ்திரிகள்" ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

சி.ட. சீனிவாச சாஸ்திரி , மிகப் பெரிய தேசபக்தர், பன் மொழி வித்தகர், பேரறிஞர், நம்பற்கரிய நாவண்மை படைத்தவர்.. இவரது பேச்சாற்றலைக் கண்டு வியந்துதான்  ஆங்கிலேயர்  அவருக்கு   "சில்வர் டங்" பட்டம் கொடுத்தனர்.

இவர் எழுதிய ஓரு புத்தகம் "மீண்டும் வாழ்ந்தால்..".

மீண்டும் வாழ்வது என்றால், ஒபாமாவாகவோ, அம்பானியாகவோ, ஐஸ்வர்யாவாகோ  பிறப்பதன்று.  இதே பெயரில், இதே நாட்டில், இதே குடும்பத்தில், இதே தகுதிகளுடன், இதே  அடையாளத்தில்,  இப்படியே   மீண்டும் வாழ்ந்தால், இதே வாழக்கையை எப்படி திருத்தி வாழ்வோம் என .

அருமையான புத்தகம்.

நமக்கு மீண்டும், இதே வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைத்தால்..? குறைந்தபட்சம் இப்போது கிடைத்திருக்கும் புத்தித் தெளிவோடு...!!

சுவாரஸ்யமான கற்பனை!


If I had my life to live over again,
I’d dare to make more mistakes next time.
I’d relax.
I’d limber up.
I’d be sillier than I’ve been this trip.
I would take fewer things seriously.
I would take more chances,
I would eat more ice cream and less beans.
I would, perhaps, have more actual troubles but fewer imaginary ones.
you see, I’m one of those people who was sensible and sane,
hour after hour,
day after day.

Oh, I’ve had my moments.
If I had to do it over again,
I’d have more of them.
In fact, I’d try to have nothing else- just moments,
one after another, instead of living so many years ahead of each day.
I’ve been one of those persons who never goes anywhere without a thermometer, a hot-water bottle, a raincoat, and a parachute.
If I could do it again, I would travel lighter than I have.

If I had to live my life over,
I would start barefoot earlier in the spring
and stay that way later in the fall.
I would go to more dances,
I would ride more merry-go-rounds,
I would pick more daisies.

– Nadine Stair

2 comments:

  1. /வயதும், காலமும் சிந்தனையோட்டத்தை புரட்டிப் போட்டு விடுகின்றன/உண்மை . நல்ல பதிவு . நன்றி

    ReplyDelete
  2. அருமையான பதிவு. பல வேண்டாதவைகளை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete