Wednesday, August 3, 2016

இருக்கும் இடத்தை விட்டு.....

இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைவானேன்?

ஆன்மிகம், ஆத்மா,  இறை, பிரபஞ்ச சக்தி.... எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அவையாவும் உங்களுக்கு உள்ளே தான் இருக்கு!  பிண்டத்தில் இருப்பதுதான் அண்டத்திலும்.  உங்களுக்குள்ளே தேடுங்கள்.  கிடைக்கும். கண்டுவிட்டால், விண்டெடுப்பதற்கு ஏதுமில்லை எனவும் விளங்கும்.

யாரோ ஒருவர் சரியான வழியைச்  சுட்டிக்காட்டினாலே போதும். கைகாட்டியை சுமந்து கொண்டு திரியவேண்டும்  என்ற அவசியமே இல்லை. "மானச குரு" நிறையபேர் நம்மிடையே உண்டு. அத்தகைய சரித்திரங்களும் நிரம்ப உண்டு. அத்தகையோர்  தற்போது உயிரோடிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

முக்திக்கு எவரும் உத்தரவாதமளிக்க முடியாது. உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று இறையடியில் விடுவது என்பதெல்லாம்  நடவாது. அதற்கு, நாமே, நாம் மட்டுமே பொறுப்பு.

"எல்லாம்" என பொதுமைப் படுத்துதல் தவறென்றாலும், பல பீடங்களுக்குப் பின், பணம், அதிகாரம், அரசியல், பாலியல் தொல்லை இருக்கத்தான்  செய்கின்றன.
எச்சரிக்கை தேவை.

நம்மிடம் இருப்பதைப் போன்ற செரிந்த  தத்துவங்கள் எவரிடமும் இல்லை. சரியான சமயக் கல்வி... குறிப்பாக தமிழின் தேர்ந்த சமய நூல்கள் (திருமூலர்-திருமந்திரம், தேவார திருவாசகங்கள், திவ்ய புராணங்கள், திருவருட்பா போன்றவை) சொல்லாததை யாரும் புதிதாகச்  சொல்லிவிட முடியாது.

No comments:

Post a Comment