Monday, November 9, 2015

பீகார்..

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அக்காலத்தையே மீண்டும் வாழ தண்டிக்கப்படுவார்கள்.

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு தான் நாட்டின் பிரச்சினை. அதைவிட்டு, சகட்டுமேனிக்கு உளறிக் கொட்டினால் இதுதான் நடக்கும்.

புதுப்பது சிக்கல்களை மக்கள் விரும்ப வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றுக் கோஷங்களுக்கு மக்கள் மயங்கும் காலம் மலையேறிவிட்டது.

பதற்றமான சூழலும் - அமைதியின்மையும், யாரையும் கரைசேர்காது. நாடும் முன்னேறாது.

சமுதாயத்தில் யாரையும் insecure ஆக உணரவைப்பது யாருக்கும் நல்லதல்ல. தொடுவதற்கு அஞ்ச வேண்டிய பல sensitive ஆன விஷயங்களை, சர்வ சாதாரணமாக ஒரு யோசனையும் இன்றி கையாண்டதன் பலன் புரிந்திருக்கும்.

புரிந்ததா, NRI கள் ஓட்டு போடமாட்டார்கள்.அடித்தள மக்கள் தான் நிஜம். அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு யாருக்காக அரியணை ஏறி இருக்கிறீகள்? அதானிகளுக்கும் - அம்பானிகளுக்குமா?

வழிகாட்டும் சீனியர்களை அரியணை ஏற்றாவிட்டாலும் ஓரம் கட்டாம லிருந்தாலிருக்கனும்.

அறிவு ஜீவிகள் என்ன செய்கிறார்களோ?

1 comment:

  1. தவறான வழியில் செல்கிறோம் என்பதை தலைக்கனம் உணராது. ரிசர்வ் பாங்க் வரை பிராண்டில் மக்கள் என்ன மடையர்களா?
    அரசு

    ReplyDelete