Friday, September 19, 2014

தீராப் பசி!!



பொம்மைகள் சில போதும் – சிறார்களின் அழுகை நிறுத்த!
சில்லறைக் காசுகள் சில போதும் - யாசகர்களின் கை மடங்க!
கவளங்கள் சில போதும் – பசித்தவனின் பிணியடங்க!
சில துளி நீர் போதும் – பொங்கி வரும் பால் அடங்க!
புத்தகங்கள் சில போதும் – அறிவின் பசியடங்க!
என்ன கொடுத்தால் இதயப் புயல் அடங்கும்? 

எவன் சொன்னது – காலம் எல்லாவற்றையும் ஆறும் என்று?
தீரா அன்புப் பசி கொண்டலையும் 
இதயத்தைக் காணாத ஒருவன்செப்பிய சொல்போலும் அவை! 

தாயின் கைவிரலை கூட்டத்தில் தவறவிட்டகுழந்தையின் 
மனோ நிலை – அவனுக்குப் புரிந்ததில்லை! 

வற்றாத துயரத்தை வாரி வழங்கியது எது?
தனிவழியில் தவிக்கவிட்டுச் சென்ற என் தெய்வமா?
வீசி இறைக்கப்பட்ட அமில வார்த்தைகளா?
புரிந்து கொள்ளாத கல் இதயங்களா? 

இழந்த போது சிந்திய கண்ணீரின் சுமையக் காட்டிலும்
இழந்திருக்கக் கூடாது என வருந்தும் 
கண்ணீரின் சுமை கூடியதெப்படி? 

ஆறுதல்களும் தேறுதல்களும் சலிப்பூட்டுகின்றன!
சொல்வதார்க்கும் எளிதுதானே? 

அன்புக் கடை விரித்தேன் கொள்வாரில்லை!
அன்பைத் தேடிகிறேன் – கொடுப்பாருமில்லை!!

No comments:

Post a Comment