Tuesday, February 28, 2012

மெரினா – திரை விமரிசனம்


'மெரினா கடற்கரையின்' சிறப்பு, அனைத்து தரப்பு மக்களயும் தன்பால் இழுக்கும் அதன் வல்லமையும், கவர்ச்சியும் தான். சமுதாயத்தின் சகலதரப்பு மக்களும் அதனுடன் தொடர்பு கொண்டிருப்பதால், அது கதைகளின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. எனவே மெரினாவோடு உறவுகொண்ட அனைவருமே, ஒரு சுவாரஸ்யமான கதை வைத்திருப் பார்கள். 

ஊரை விட்டு ஓடிவந்த சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், சென்னை அளிக்கும் புகலிடங்களில், முக்கியமானது மெரினா.
‘மெரினா திரைப்படம், அவ்விதம் ஊரை விட்டு ஓடிவந்து, கடற்கரையில் வாழும் அனாதைச் சிறுவர்களைப் பற்றிச் சொல்கிறது! சென்னையைப் பற்றிச் சொல்கிறது! அதன் பன்முக கலாச்சாரத்தைச் சொல்கிறது! கடற்கரையின் மணல்களைப் போல எண்ணிலடங்கா, கதைமாந்தர்களுக்கு, மௌன சாட்சியாக இருக்கும் மெரினா,  தனது மடியில் நிகழ்ந்த மற்றுமொரு சோகத்தை, சுண்டல், தண்ணீர் பாக்கட் விற்கும் ‘பக்கோடா பாண்டியன் வழியாகச் சொல்கிறது! படம் வந்து, நாட்கள் பலவாகி விட்டதால் கதை அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். போஸ்ட்மேனாக வரும் மோகன், பெரியவராக வரும் சுந்தர்ராஜனும் பரவாயில்லை. குறிப்பாக ‘டான்ஸ் ஆடும் அந்த சிறுமி பிரமாதம்.

ஒரே படத்திலேயே, எல்லா விஷயங்களையும் சொல்லிவிட வேண்டும் என்ற, டைரக்டரின் ஆர்வம் (போலீஸ்-சிறுவன் கதை,காதல் ஜோடிக் கதை, மருமகளால் விரட்டப்படும் பெரியவரின் கதை) தேவையற்றது. ஏனெனில், இந்த அருமையான கதையின் முடிச்சு, ‘ஸ்லம் டாம் மில்லேனியரை விட சிறப்பானது. உலகத்தரத்தில் எடுக்கப் பட்டிருந்தால், பல அவார்டுகள் தேடி வந்திருக்கும். இக் கதையின் ‘ட்ரீட்மெண்ட் பன் மடங்கு பட்டை தீட்டப்பட்டிருக்க வேண்டும்.  அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட்து போல உள்ளது. எடுக்க வேண்டிய விதத்தில் எடுக்கப் பட்டிருந்தால், எல்லா அவார்டுகளுக்கும் ஒரு நல்ல ‘போட்டியாளராக இப்படம் இருந்திருக்கும். ஆயினும் எடுத்தவரை பரவாயில்லைதான். பார்க்கலாம்.




இயக்கம்: பாண்டியராஜன்

1 comment:

  1. Thanks for one's marvelous posting! I definitely enjoyed reading it, you
    might be a great author.I will always bookmark your blog
    and may come back later on. I want to encourage yourself to continue your
    great job, have a nice afternoon!

    ReplyDelete