Sunday, August 17, 2014

தர்மம்!

We walk together, we move together, we think together, we resolve together and together we take this country forward.
-Modi

பல்வேறு தத்துவங்களில், வார்த்தைகளில், வடிவங்களில், வெவ்வேறு தலைவர்களால் பலவிதமாகச் சொல்லப்பட்டாலும், நாடு உய்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

அதுதான் தர்மம்! ஒற்றுமை! சகிப்புத்தன்மை!

தர்மம்... இது லேசான, மேம்போக்கான வார்த்தை அல்ல.

அவரவர்கள், தங்களுக்குண்டான தர்மத்தை கடைப்பிடித்தால், எல்லாமே சுபிட்சம் தான்.

பிரச்சினை என்னவென்றால், இங்கு பேசுபவர்கள் மிக அதிகம். சொல்லிய வண்ணம் செய்பவர்கள் அரிது.

பார்ப்போம்.... திரு மோடி அவர்கள், அவர்களது கட்சியின் தர்மம்படி நடக்கிறாரா – “பெரியண்ணன்கள்” நடக்க விடுவார்களா என்று.

மரபணு மாற்ற விதைப் பரிசோதனையை நிறுத்தவே (மரபணு மாற்ற விதைகளை அனுமதிப்பது பி.ஜே.பி யின் அஜன்டாவில் இல்லை) பெரும் போராட்டமாயிற்று.

தர்மம் என்றால்:

பொறுமை, Patience (dhriti),
மன்னிப்பு: forgiveness (kshama),
சுய கட்டுப்பாடு: piety or self control (dama),
நேர்மை: honesty (asteya),
புனிதம்: sanctity (shauch),
இந்திரிய ஒழுக்கம்: control of senses (indraiya-nigrah),
நியாயம்: reason (dhi),
கல்வி: knowledge or learning (vidya),
சத்யம்: truthfulness (satya)
ஆத்திரம் அற்ற நிலை: absence of anger (krodha).

மேலும் தர்மம் என்பது, அஹிம்சை, உண்மை, சத்தியம், உடல்-மற்றும் மன சுத்தம், புத்தியையும்-மனதையும் கட்டுப்படுத்தி நேர்மையான வழியில் செலுத்துதல்.

இவ்விதிகள் தனிமனிதனுக்கானதல்ல. சமூகம், அரசு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment