Monday, November 10, 2025

To a friend, who frustrated!

மீண்டும் எழு!

பிரமிப்பூட்டும் பர்வதங்கள் அச்சமூட்டுமா?அவற்றின் உச்சியை நோக்கி நப!  அவை ஓடப்போவதில்லை;   

வெல்லக்கூடியவையே அவை.

வழியை அறிதல் — அதுவே ஞானம்.


விடியற்காலங்கள் சோர்வூட்டுமா?அமைதியாக படுத்திரு;

அலைகள் அடங்கட்டும் 

குடி மூழ்கிவிடாது!


திட்டங்கள் சிதைந்தனவா?

அஞ்சாதே!

மீண்டும் திட்டமிடு,

மீண்டும் தொடங்கு!

ஒவ்வொரு விழுதும் எழுச்சிக்கான முன்னுரை!


அருவருப்பான நீள் முடிகள் 

மழிக்கப்படலாம்;

ஆனால் —

உன் கிரீடம் தாழ்த்தப்படக் கூடாது!


இன்றைய நாள் வாழ்வின் முடிவல்ல;

ஓய்வு தோல்வி அல்ல;

இடைநிறுத்தம் ஓர் இளைப்பாறல் —

அதற்குப் பின் எழுச்சி!


முட்டி மோதுவது வியூகம் அல்ல;

பின்வாங்கி பாய்வதே விவேகம்!

மெதுவாய் செல்வதுதான் சில போரில் வெற்றி.


சிதைந்த மனம் தடுமாறுவது இயல்பு;

ஆழ்ந்து சிந்தி — சீரமை!

எதுவும் சாத்தியமே,

உயிர் இருக்கும் வரை நம்பிக்கை தழைக்கும்!


உன்னை நீயே நேசி,

உன்னை நீயே மன்னி;

உன்னை மீட்டெடுப்பது —

உனக்கே உரியது!

No comments:

Post a Comment