Wednesday, December 7, 2016

சில சந்தேகங்கள்...

இன்று தொலைக் காட்சியில் அம்மாவின் இறுதி நாளைப்  பார்த்த போது எழுந்த சில சந்தேகங்கள்.

தில்லையம்பதி எப்படி திடீரென பிரசன்னமானார்? அவரை  VVIP களுக்கு introduce செய்ய வேண்டிய தேவை என்ன?

அது எந்த வகையிலான இறுதிச் சடங்கு? பார்த்தும் கேட்டுமிராத வகையில்? இதை முடிவெடுத்தது யார்?

மன்னையினர்  எந்த உரிமையில் இவற்றைச் செய்தனர்? உறவு செய்தால் ஓகே... இல்லையானால் கட்சிப் பிரமுகர் செய்யலாம்? இதெப்படி?

OPS எதற்காக பிரதமரிடம் அழணும்? அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதா?

கட்சி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில்?

பொதுச் செயலர் தேர்வில் மன்னையின்  பிடி எந்த அளவு இருக்கும்?

தமிழக அரசியலை ஒட்டி, அடுத்த தலைமையைத் தேர்தெடுப்பதில் வெளி ஆள்/வெளி கட்சி குறுக்கீடு இல்லாமல் செய்வாரகளா? அதறகான திட்டம் இருக்கா? மன்னையிடமிருந்து  விலகப்போகப் போகிறார்களா இல்லை சரணா?

கோந்து  போட்டு ஒட்டியதுபோல, ஏன் சிலர் அருகிலேயே நின்றிருந்தனர்?

1215 க்கு அறிவிக்கப்பட்டு,  ஒரு மணிக்கு புது கேபினட் பதவியேற்பு எப்படி சாத்தியமாயிற்று?

அந்த 75. நாட்களிலும், யார்தான்  அம்மாவைப் பார்த்தார்கள்? அச்சமயம் கட்சியையும் அரசையும் இயக்கியது யார்?
அவருக்கு என்னதான் உடம்பு? எப்படி சடாரென உடல்நிலை மோசமாகியது?
அப்போலோ, இப்போதாவது  கேஸ் ஷீட்டை  வெளியிடுமா?  இவ்வளவு ரகசியம் காக்கத் திட்டமிட்டது யார்? ஏன்?

மாலையில் அவர் காலமானதாக, பாண்டேக்கு சேதி சொல்லியது  யார்? அதன் பின்னணி-ரகசியம்  என்ன?

அம்மா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறார்களா?

கொசுறாக,
நேரலை முழுவதும் சதா, தொன தொன வென, சம்பந்தா சம்பந்தமில்லாமல் குளறல்  நடையில், அபத்தமான உச்சரிப்புடன் உளறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? முழுவதும் mute லதான்  பார்த்தேன்.

தேவைப்படும்போது சிறு சிறு வாக்கியங்களோடு நிறுத்திக் கொள்ளக்கூடாதா?

எந்த நேர்முக வரணணையாக இருந்தாலும் தமிழ்ச் சேனல்களில்  ஏன் இப்படி?

எப்படியாயினும், இன்று கட்டுப்பாட்டுடன் எந்த வன்முறையும் இன்றி அமைதியாக கழிந்த நாளுக்காக, அதிமுக தொண்டரகளுக்கும் ,  காவல் துறையினருக்கும் மனமார்ந்தபாராட்டுகள்!!

No comments:

Post a Comment