Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Wednesday, February 24, 2016

கர்ணன்

கர்ணன் பட இசை - ராகக் களஞ்சியம்.
         
தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது. இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை. ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக MSV /TKR  இரட்டையர் இசைத்திருப்பார்கள் ! அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
 
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால் குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை  அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன்
மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் . அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் : அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் . முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் – தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின்  தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . – இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்- அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் – மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் – ‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘ அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!
இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11.  கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே- இது ராக மாலிகை; முதலில் வருவது – காபி ராகம் ; பிறகு “மலர்கள் சூடி  “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’  ! இந்த பாடலை இயற்றிய  கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் ! இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .                 இந்த பாடல் அமைந்த ராகங்கள் : மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை : என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா; புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி ! மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன்  செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன்  செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில்  தாரை வார்க்க நீர் இல்லாததால்  தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் ! இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது. இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம். இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன இன்றளவும் ! தி எவர் ஹிட் சாங் !!
(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம். இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம். இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)
15. இந்த பாடலகளைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “
“परिथ्रानाय  साधूनां विनाशाय च धुष्क्र्थां धर्म संस्थापनार्थाय संबवामि युगे युगे”
என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

இத்தகவல் நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது.

Wednesday, September 23, 2015

கூட்டத்தினின்றும் தனியே! (Odd Man out!)

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு மீட்டிங்கில் சிக்கிக்கொள்வதும் ஒரு சுவாரஸ்யம்தான், அறிமுகமில்லாத ஊரில், வழிதவறிப்போவது போல.

சென்றவாரம் பெங்களூர் சென்றிருந்தபொழுது, தொழிலதிபரும், எனது நண்பருமான ஒருவர், BNI (Business Network International)  மீட்டிங்கிற்கு வருகிறீர்களா என்றார். இந்த அமைப்பைப் பற்றி கிஞ்சித்தும்

அறிந்திலேனெனினும், இது தொழில் முனைவோரின் கூட்டமைப்பாக இருக்கக் கூடும் என்பது பெயரிலிருந்து விளங்கியது. நுகர்வோரில்


ஒருவனாகிய என்னை, தொழில் முனைவோரின் அமைப்பிற்கு அழைத்தற்கு காரணம் என்னவாக இருக்கக் கூடும் என விளங்கவில்லை. ஒருவேளை, வாரம் ஒருவரை ‘அறிமுகம்’ செய்தாக வேண்டும் என்ற சிடுக்கில் மாட்டிக்கொண்டுள்ளாரோ என்றால், அப்படியும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அழைத்தவர் பிக் ஷாட். ஒருவேளை, 'வாடிக்கையாளரே கடவுள்' என்ற வாசகத்திற்கு பொருள் கொடுக்க வேண்டி, அழைத்திருப்பாரோ?

எப்பொழுதும் போல, எனது ‘டிரேட்மார்க் குர்த்தாவை’ ,இந்த மீட்டிங்கிற்கும் அனிந்துகொள்ள யத்தனித்தபொழுது, எனது அண்ணன் மகள் ஆட்சேபித்தார். “சித்தப்பா.. Formal உடை உடுத்திக்கொண்டுதான் போகணும், இந்த குர்தா.. கிர்தா வெல்லாம் போட்டுக் கொண்டு போகக் கூடாது..“ என்றார். அடாடா.. ஆரம்பமே சரியில்லையே..!! ‘குர்தா – ஜீன்ஸ்’ Formal இல்லையெனில் வேறு என்ன உடுத்திக் கொள்ளனும்? அவர்கள் என்ன Dress Code வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லையே? இது என்ன தொழிற்சங்க மீட்டிங்கா என்ன, point of order  எழுப்பி, ஆட்சேபிப்பதற்கு?

அந்த காலத்தில், மாப்பிள்ளை அழைப்பிற்கு, மணமகன்  ‘கோட்’ அனிந்தாகனும் என ஒரு ‘டிரஸ் ஒழுங்கு’ இருந்தது. மாப்பிள்ளைவாள், அன்று கோட் அணிந்தபின் இந்த ஜென்மத்தில் இன்னொரு முறை அணியக்கூடாது என்பது மத்யதர வர்க்கத்தின் Code. அந்த உடை, கரப்பான்பூச்சிக்கோ, வண்டுகளுக்கோதான் பயன்படனும்.

ஆனானப்பட்ட உலக மகா கோடீஸ்வர கடவுள், வெங்கடாஜலபதியே, Dress Code வைத்துக் கொண்டு  எல்லோரையும், வேட்டி-புடவையில்தான் வரணும் என சட்டமியற்றும் பொழுது, உள்ளூர் மானுட பணக்காரர்கள் சட்டமியற்றுவதில் தவறொன்றும் இல்லையே? கோயில்களுக்கான ‘உடை ஒழுங்கில்’ கேரளம் பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கு மேலே சட்டையே போடக் கூடாது! செலவில்லாத இறைவன் கொடுத்த உடையே போதுமானது!

என்ன...., அடுத்தவர் உடல் மேலே பட்டால் கொஞ்சம் அருவருப்பு ஏற்படும், அவ்வளவே!

சரி... நமது கவலைக்கு வருவோம். சூட்கேசைக் குடைந்து, ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தார் மகள். உடுத்திக் கொண்டு ‘பிஸினஸ்’ செய்யக் கிளம்பியாயிற்று!

கூட்டம் நடக்கவிருந்தது, ஒரு மூன்று ஸ்டார் அந்துள்ள ஹோட்டல் போலிருந்தது. கான்ஃப்ரன்ஸ் அறைக்குள் நுழையும் முன்பே, வழி மறித்தார் பதிவாளர் ஒருவர். "உங்களது பெயர், தொழில் சொல்ல முடியுமா, பதிவேற்றனும்."

பெயர் சொன்னேன்.

தொழில் ‘கதையடிப்பதுதான்’ என்றேன், ‘அஸ்வத்தாமா என்ற யானை‘ என்பது போல மெலிதாக.. ‘Pardon me Sir…’ என்றார். சீரியஸான இடத்தில் ஜோக்கடித்தால் எப்படி?

‘தொழில் என்று, ஒன்றும் இல்லை’

பின் ஏன் வந்தாய் என்பது போலப் பார்த்தார்’

‘பிஸினஸ் கார்டு தர்ரீங்களா...’

விசிட்டிங் கார்டு பையில் இருந்ததுதான். அதில் அவருக்குப் பயன்படும்படியான தகவல் ஒன்றும் இல்லாததினால், ‘கார்டு இல்லை’ என்றேன். பூச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தார் பதிவாளர். முகத்தில் ஐயம் தொற்றிக் கொண்டது. அவர் தோளில் வாத்ஸல்யமாய் கையை வைத்து, ‘டோன்ட் வொர்ரி ஜென்ட்ல்மேன்.. ஐயாம் ஜஸ்ட் ஆன் அப்ஸர்வர்.. எ ஃப்யூட்சர் பிஸினஸ் மேன், ... காட் இட்? .. ஓகே.. நௌ?’ என அமைதிப் படுத்த, மனிதர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

‘ஐநூறு ரூபாய், ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் ப்ளீஸ்...’

இனி அரங்கிக்குற்குள் போவோம்.

எடுத்த எடுப்பிலேயே, தங்களது ‘மோட்டோ’ என்ன, என்பதை ஐயம் திரிபர தெளிவாக்கி விடுகிறார்கள். ‘வி வான்ட் டு மேக் மோர் மணி...’ இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கனும்.

அங்கு, அன்று, கவனித்தவரை நடுத்தர தொழில் முனைவோர், வாரம் ஒருமுறை கூடி, தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுவதற்கான  அமைப்பு இது. ஐநூறு கோடி, ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஆட்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஐம்பது கோடிக்குள்ளான முதலீட்டுடன் தொழில் துவங்குபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

உதாரணமாக, ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்பவர்கள் (DLF எல்லாம் வரமாட்டார்கள்) என வைத்துக் கொள்வோம். அவருக்கு, இன்டீரியர், எலக்ட்ரிகல், ப்ளம்பரிங்க் சேவைகள் தேவை. அவருக்கு, விளம்பரத்திற்கு, வெப் டிசைனிங் செய்பவரும் தேவை. அக்கவுன்டிங் ஸ்பெஷலிஸ்ட் தேவை.. இன்ஸ்யூரன்ஸ் ஆட்கள் தேவை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒரே கூரையின் கீழ் அறிமுகமாகிக் கொண்டு, ஒருவருக்கொருவர், பொறுப்புடன்,  தொழிலில் உதவி செய்து கொள்கிறார்கள். விதவிதமான ஆட்கள் ஒன்று கூடி ஒருவர் மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தங்களின் தொழிலையும் அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். 'Camaraderie' என்பது இவர்களுக்குள் உண்மையாகவே இருக்கிறது. தொழில் என்றாலே போட்டியும் பொறாமையும்தான் என்பதை மாற்றுகிறார்கள். 

மற்றவர்களால் வழங்கப்படும் வாய்ப்பை இவர்கள் referrals என்கிறார்கள்.

கூடியிருக்கும் அத்துனை பேரும், புது முகங்கள் உட்பட, தங்களை, தங்களது தொழில் பற்றிய அறிமுகத்தை பதினைந்து வினாடிக்குள் முடித்துக் கொள்கிறார்கள். குறிப்பெடுத்துக் கொண்டு, கடைசியில் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ரெஃப்ரல்கள், நடைமுறைப் படுத்தப்பட்டு, பிஸினஸ் நடந்துவிட்டால், அதற்கான நன்றியும் தெரிவிக்கிறார்கள். நடுவில், தொழில் நுணுக்கங்களைப் பற்றிய ஒரு சிறு, சிறப்பு உரையும் உண்டு.

நல்ல நடைமுறைதான். தொழில்முனைவோருக்கான ஒரு நல்ல என்ட்ரி பாயின்ட் இது.

எப்பொழுதும் போல, வலையில் ‘ஏன் BMI – ல் சேரணும்’ என கதறிக் கொண்டு ஒரு கோஷ்டியும், ‘ஏன் சேர வேண்டாம்’ என புலம்பிக் கொண்டு ஒரு கோஷ்டியும் இருக்கிறது.


மிக-மிக பெரிய தொழில் முனைவோருக்கு இந்த அமைப்பு தேவையில்லை. சேர்ந்தால் ஒரு Burden ஆகிவிடும். மற்றவர்களுக்கு ஏற்றதே! 

Saturday, June 7, 2014

Cancer and PH Value

Information drawn from various sources.



Cause Of Cancer & pH

Herman Aihara, in his book entitled "Acid & Alkaline" states that:
If the condition of our extra cellular fluids, especially the blood, becomes acidic, our physical condition will first manifest tiredness, proneness to catching colds, etc. When these fluids become more acidic, our condition then manifests pains and suffering such as headaches, chest pains, stomach aches, etc. According to Keiichi Morishita in his Hidden Truth of Cancer, If the Blood develops a more acidic condition, then our body inevitably deposits these excess acidic substances in some area of the body such so that the blood will not be able to maintain an alkaline condition which causes these areas such as the cells to become acidic and lowers in oxygen.

As this tendency continues, such areas increase in acidity and some cells die; then these dead cells themselves turn into acids. However, some other cells may adapt in that environment. In other words, instead of dying - as normal cells do in an acid environment - some cells survive by becoming abnormal cells. These abnormal cells are called malignant cells. Malignant cells do not correspond with brain function nor with our own DNS memory code. Therefore, malignant cells grow indefinitely and without order. This is cancer.

One of the least understood concepts of nutrition is understanding what acid and alkaline balance is. The cells of the human body depend on a balanced acid-alkaline pH. If any fluids are abnormal, digestive enzymes are rendered inactive, food does not digest properly, and allergic reactions can result. Food bound microorganisms such as yeast, bacteria, parasites; molds, viruses, etc. are liberated in the body, which puts stress on the immune system.
The body is largely made up of water, a medium which is biologically useful in allowing nutrients, oxygen and bio-chemicals to be transported from place to place. This water-based medium can have either acid or alkaline properties that are measured by a graduated scale called pH (for potential hydrogen), wherein 1.0 to 6.9 is considered acidic, 7.0 is neutral and 7.1 to 14.0 is alkaline. The lower the pH number, the greater the acidity, and the higher the pH number, the greater the alkalinity. Optimally, we want the fluids in our bodies to have a neutral or 7.0-7.2 pH level. Under 5.3 you can not assimilate vitamins or minerals, it must be above 6.4 for maximum utilization and weight loss. Urine or saliva pH levels should be tested in A.M. prior to eating, drinking, or exercising.

Why should we be concerned about pH levels? Since most of the body is water-based (50-60%), the pH level has profound effects on all body chemistry, health and disease. All regulatory mechanisms (including breathing, circulation, digestion, hormonal production) serve the purpose of balancing pH, by removing caustic metabolized acid residues from body tissues without damaging living cells. If the pH deviates too far to the acid side or too far to the alkaline side, cells become poisoned by their own toxic waste and die. Just as acid rain can destroy a forest and alkaline wastes can pollute a lake; an imbalanced pH corrodes all body tissue, slowly eating into the 60,000 miles of veins and arteries like corrosives eating into marble. If left unchecked, an imbalanced pH will interrupt all cellular activities and functions, from the beating of your heart to the neural firing of your brain.

You can raise your body’s alkaline level with the Neutralizer and all-natural soap. The Neutralizer cleanses the body internally by washing bacteria and toxins out of the bloodstream while helping to optimize pH levels. The soap cleanses the body externally by unclogging pores, which allow toxins to be excreted through the pores.

Our bodies contain many toxins, chemicals, parasites, fungus, bacteria and yeast that, if not cleansed from our system, tend to develop into major illnesses. Most people use soaps that contain animal fat causing the pores of the skin to clog, therefore trapping chemicals and toxins in the body.


Understanding pH Level and Why Many People Have Cancer and Other Diseases

According to the research of the world famous Dr. Enderlein, total healing of chronic illness ONLY takes place when and if the blood is restored to a normal, slightly alkaline pH. 

pH: what does it mean? pH is the abbreviation for Potential Hydrogen or the measurement of hydrogen-ion concentration of any solution. The higher the pH reading, the more alkaline and oxygen rich the fluid is. The lower the reading, the more acidic and oxygen deprived the fluid is. The pH scale is from 0 to 14 with 7.0 being neutral. Anything above 7.0 is alkaline; anything below 7.0 is acid.
To be considered healthy, human blood must maintain a narrow pH range of 7.365. Any slight variation means symptoms and disease. If blood pH drops below 6.8 or increases above 7.8, cells stop functioning and the patient dies. Blood pH is difficult to test, but home test kits are available to test urine and saliva pH. Optimum urine and saliva pH is 7.0 to 7.4. Test you pH each morning before food, drink or exercise.

If you have health problems, this is a sign that you are acidic. When the body goes into extreme acidosis, the kidneys start producing ammonia, which may cause the pH to test too alkaline. This condition is frequently found in older people and is the cause of the unpleasant odor in old folks homes. Treating for acidosis will help the kidneys to stop producing ammonia.

In 1964, only 1 person in 214 contracted Cancer. Today it is 1 in 3 females and 1 in 2 males. The determining factor between health and disease is pH. It is not uncommon for the average American to test between 4 pH to 5 pH. Oxygen levels in the body are directly related to pH. Increasing pH from 4 pH to 5 pH increases oxygen to the cells by ten fold. From a 4 to a 6 increases oxygen by 100 times and raising pH from 4 pH to 7 pH increases oxygen levels by 1,000 times.

Research shows that unless the body’s pH level is slightly alkaline, the body cannot heal itself. So, no matter what type of modality you use to take care of your health problem, it won’t be effective until the pH level is up. All drugs, medications and toxic chemicals have the effect of lowering the pH of the body. That is why there are side effects to every drug and none of them effect a cure.

When body pH drops below 6.4, enzymes are deactivated, digestion does not work properly; vitamins, minerals and food supplements cannot effectively assimilate. Acid decreases energy production in the cells, the ability to repair damaged cells, the ability to detoxify heavy metals and makes the body more susceptible to fatigue and illness. Your body pH affects everything.

Research has proven that disease cannot survive in an alkaline state, however, viruses, bacteria, yeast, mold, fungus, Candida and Cancer cells thrive in a low oxygen, / low pH environment. An acid pH can result from an acid forming diet, emotional stress, toxic overload, and/or immune reactions or any process that deprives the cells of oxygen and other nutrients. The body will try to compensate for acid by using alkaline minerals, like sodium from the stomach and calcium from the bones. This is the cause of Osteoporosis and a number of other diseases. If there are not enough minerals in the diet to compensate, a build up of acids in the cells will occur, resulting in symptoms like pain, Arthritis, Fibromyalgia, MS, Lupus, etc.

There are two factors that are ALWAYS present with Cancer no matter what else may be present. Those two factors are Acid pH and Lack of Oxygen. Can we manipulate those two factors that always have to be present for Cancer to develop and by doing so will that help reverse the Cancer? If so, we need to learn how to manipulate pH and Oxygen.

Remember that the pH number is an exponent number of 10; therefore, a small difference in pH translates to a BIG difference in the number of oxygen or OH-ions. In other words, blood with a pH value of 7.45 contains 64.9% more oxygen than blood with a pH value of 7.3. Cancer needs an acid / low oxygen environment to survive and flourish. Terminal Cancer patients are about 1000 times more acidic than they should be. This equates to dangerously low amounts of oxygen at the cellular level.

In the absence of oxygen, glucose undergoes fermentation to lactic acid. This causes the pH of the cell to drop even lower. Urine and saliva pH of Terminal Cancer patients almost always runs between 4.0 and 5.5. When the cancer goes into metastases the pH drops even lower. Our bodies simply cannot fight disease if our body pH is not properly balanced. In other words, it’s either alkalize or die. It’s that important!




http://myplace.frontier.com/~felipe2/id18.html

இந்நோய்  சம்பந்தமாக எதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கொடுப்பதற்கு காத்திருக்கிறேன்.

Saturday, January 11, 2014

நாடக மேடை



வாழ்க்கை வெறும் துன்பமயமாக மட்டுமே அல்லது இன்பமயமாகவே மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கையை விடுங்கள்! ஒரு கதைப்புத்தகம் படிப்பதாகவோ அல்லது டி.வி சீரியல் பார்ப்பதாகவோ வைத்துக்கொள்வோம். கதையில் திருப்பங்களோ, முடிச்சுக்களோ, சஸ்பென்ஸோ இல்லாமலிருந்தால் படிப்போமா - பார்ப்போமா? சுவாரஸ்யப்படுமா? சலிப்பூட்டுமல்லவா? ஒரு புத்தகத்திற்கே திருப்பங்கள் தேவைப்படும்பொழுது வாழ்க்கையில் முடிச்சுக்கள் விழும்பொழுது ஏன் கவலை கொள்கிறோம்?

வாழ்க்கை வெளிச்சமயமாகவே (இன்பமாகவே) அல்லது இருள் மயமாகவே இருந்தால் வெளிச்சத்தின் அருமையும் புரியாது. இருளைவிட்டு வெளியில் வரும் வழியும் தெரியாது. உந்துதலும் இருக்காது. எனவே யாவருக்கும் சவால்கள் தேவைப்படுகின்றன. திரையில் வரும் ‘சூப்பர்மேன்’ களுக்கும் ‘கிருஷ்’ களுக்கும் கூட வில்லனகள் தேவைப்படுகிறார்களே! இல்லாவிடில் நாம் அவர்களை ‘ஹீரோக்களாக’ மதிப்போமா? இந்த இலக்கணம் திரைக்கு மட்டுமல்ல, இறைவன் உருவாக்கிய இந்த இந்த உலகம் எனும் பெரும் நாடக மேடைக்கும் பொருந்தும்.

நாம் வாழ்வில் பெரும் துயர்களையோ, மரணங்களையோ, இழப்புக்களையோ, நோய்களையோ எதிர்கொள்ளும் பொழுது,  நம்மில் பெரும்பான்மையோனர் இடிந்து போகிறோம். அத்தகையோர், இத்தகைய இடையூறுகளை பார்க்காதவர்கள் என்று பொருள் இல்லை. இத்தகைய பெருந்துயர் ‘தங்களுக்கு’   நிகழும்பொழது,  ‘பிறருக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும் மனோபாவத்தோடு’ பார்க்க இயலவில்லை.  துயரங்களுக்கான நமது எதிர் வினை, “எனக்கு ஏன் இவ்விதம் நிகழ்கிறது” என்பதகாகத்தான் உள்ளது. சாசுவத உண்மைகளையும், யதார்த்தங்களையும் எற்க மறுக்கிறோம். ஏன்?

ஏனெனில் நாம் வாழ்க்கையை பெரும் தீவீரத்தோடும் அளப்பரிய பற்றுதலோடும் எதிர்கொள்வதுதான். 

நாம் சாசுவதமானவர்கள்-நாம் நாம் அனுபவிக்கும் சுகங்களும் சொத்துக்களும் நிலையானவை – என நமது ஆழ்மனதில் நம்புவதுதான். இவ்வுலக சுகங்களை இழக்க விரும்பாததுதான்.

என்னதான் கருப்பையிலிருந்து வெளிவந்த நிமிடம் தொட்டு, கல்லறையை நோக்கிய பயணம்தான் மேற்கொண்டிருக்கிறோம் என்பதைப் பலமுறை படித்திருந்தாலும், நிஜத்தின் சூட்டினை உண்மையிலேயே உணராததுதான்.

ஏதிர்பார்ப்புகள் நிகழாதபொழுது – ஏமாற்றங்களும் துயரங்களும்தானே மிஞ்சும்?

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவதார புருஷர்கள் கூட ஆண்டவன் அளித்த சிரம முடிச்சுக்களை எதிர்கொண்டவர்கள்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது 49-வது வயதில் ‘புற்று  நோய்’ கொண்டுதான் காலமானார். விவேகானந்தர் மறையும் பொழுது, 36 வயது தான். மகான் ரமண மகரிஷியும் கூட கேன்சருக்கு பலியானவர்கள் தான் . 

இவர்கள் யாவரும் தங்களுக்கு வந்த நோய்களை தங்களது ‘உடலுக்கு’ வந்ததாகக் கருதினார்களே தவிர, ‘அழிவற்ற தங்களுது ஆன்மாவிற்கு’ வந்ததாக எண்ணவில்லை. மாறாக பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு கிடைத்த வாய்ப்பாகத்தான் கருதினார்கள்.

புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இவ்வுலகு உள்ள வரை ‘இன்பமும்-துன்பமும்’, ‘சிரிப்பும் அழுகையும்’, ‘சந்தோஷமும்-துக்கமும்’, ‘வெற்றியும்-தோல்வியும்’, ‘தோற்றமும்-மறைவும்’, ‘ஒளியும்-இருளும்’, ‘வறுமையும்-வளமையும்’ இருந்தே தீரும். இந்த சுவாரஸ்யமான முரண்கள் நித்யமானவை. இயற்கையின் நியதி. மாறா விதி. 

‘தோன்றிய’ கோள்களும்-நக்ஷத்திரங்களும் கூட மறைந்தே தீரும்.

எனவே அனித்தியமான-நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்வில், அதைவிட அற்பமான துயர்களைக் கண்டு அழுது புலம்ப வேண்டியதில்லை.  

அமைதியை அனுபவித்தால் உறிதியாக புயலும் உண்டு; வெளிச்சத்திற்குப் பின் இருள் வந்தே தீரும். கடவுளின் இந்த நியதியை எவரும் மீற முடியாது.

பின் என்ன செய்யலாம்?

நம்மால் செய்யக்கூடியது ஒன்று உண்டு. துன்பம் நம்மை நாடுவதன் நோக்கம் என்ன? நம்மை துன்பத்தில் ஆழ்த்துவதுதானே? துன்பங்கள் வரட்டும்! ஆயினும் நாம் துயரப்படாமல் இருக்கலாம் அல்லவா? அனைத்தையும் இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் தன்மை நம்மை விட்டு விலக வில்லைதானே? ஏற்றுக் கொள்ளும் மனோபாவம்தான் தேவை.

மிகச்சிறந்த மனிதர்கள் எல்லோரும் இன்னமும் நினைக்கப் படுவதன் காரணம், அவர்கள் அவர்கள் பெற்ற துன்பங்களினாலோ, அடைந்த இழப்புக்களினாலோ அல்ல! மாறாக அவற்றை எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பதால் தான்.

எல்லாம் சரிதான். சொல்வதற்கு சுலபம் தான். அனுசரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்கிறீர்களா? வழுயுண்டு. அதுதான் ‘ஆன்மீகப் பாதை’! எந்த மதமாக இருந்தாலும் சரியே! 

 ‘நான் யார் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!

அதற்காக சதா முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வேலை வெட்டி செய்யாமல் சோம்பித்திரிய வேண்டியதில்லை.

வாழ்க்கை  நம்மீது எந்தெந்த சுமைகளையெல்லாம் சுமத்துகிறதோ அவற்றையெலாம் சலிப்பின்றி சுமக்கத்தான் வேண்டும். நமக்கு விதிக்கப் பட்ட கடமைகள் அனைத்தையும் சலிப்பும்,சளைப்புமின்றி செய்துதான் தீர வேண்டும்.  அவ்விதம் செயல்படும்பொழுது நமது ‘மையப்புள்ளி’ பிரழாது-சலனப்படாது-இயல்பு நிலை மாறாது-நான் வெறும் அம்புதான் என்பதை உணர்ந்து, கர்மாக்களை நிறைவேற்ற வேண்டும். சிந்தனை ரீதியாக – உணர்ச்சி ரீதியாகச் சிக்கிவிடாமல்!


“நீங்கி நின்று செயலாற்றுதல்” என்பது இது தான்.


நமது கடமை பிணம் எறிப்பதோ, கல்லுடைப்பதோ, ஜாவா எழுதுவதோ அல்லது போர் புரிவதோ – எதுவாயினும் சரி..விளையாட்டாய், பற்றற்று இறுக்கமின்றி செயதோமனால், இப்பிறவியை கடப்பது மட்டுமல்ல; பிறவியே கூட இல்லாமல் போகலாம்.

வாழ்க்கையில் இறைவன் நமக்கு அளித்த கடைமைகளை சலனமின்றி, அவற்றிகுரிய தர்மங்களொடு நிறைவேற்று.  பலன் கள் எதுவாயினும் அதன்பேரில் நமக்கு உரிமை இல்லை. அவை நம்மை பாதிக்கக் கூடாது. எது நடந்ததோ அவை நன்றாகவே நடந்தது!

 – பகவத் கீதை.


Wednesday, April 20, 2011

Justice delayed is justice denied


நினவிருக்கிறதா? சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இவ்வழ‌க்‌கி‌‌ல் ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு, March 11, 1998 அன்று கடலூர் கோர்ட்டில் இர‌ட்டை ஆ‌யு‌ள் 
த‌ண்டனை வழங்கப்பட்டது.  இவ்வுத்தரவினை ரத்து செய்தது செ‌ன்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம்.  இப்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உயர் நீதிமன்ற தீர்ப்பினை ர‌த்து செ‌ய்துள்ளது.


வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


‌(செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன் நாவரசு. இவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர். விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான் டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார். ஜான் டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர். இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது)

Monday, March 14, 2011

Defeat against South Africa!


நமக்கு யாரையாவது குறை சொல்வது-குற்றம் கண்டுபிடிப்பது விருப்பமான விஷயம். தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்றுப் போனோம்.  நீட்டி முழக்கிக் கொண்டு ஆளாளுக்கு டீமில் அகப்பட்ட ஆட்களை பிடித்துக் கொண்டு வசைமாரி பொழிய ஆரம்பித்து விட்டனர். ஜெயித்தால் 'பக்தி' மயமாவதும் தோற்றால் 'சபிப்பதும்'  நம் 
நாட்டின் குணாதிசயமாக மாறிவிட்டது.  இன்னமும் போட்டிகள் துவக்க நிலையில்தான் உள்ளன. 'காலிறுதிக்கு' தகுதியும் பெற்றுவிட்டோம். குரூப் 'பி'-ல் இந்த நிமிடம் வரை முதலிடத்தில்தான் உள்ளோம்.


இந்த போட்டியில் இது வரை 1405 ரன்களை பெற்று, 44 விக்கட்களையும் வீழ்த்தியுள்ளோம். சச்சின், யுவராஜ், கம்பீர், கோஹ்லி,சேவாக்
அடிதத் சதங்களை கணத்தில் மறந்து, தூற்ற தயாராகிவிட்டோம்.  39.4 ஓவர்கள் வரை தென் ஆப்பரிக்க பவுலர்கள் திணறியதையும்
மறந்துவிட்டோம். சொல்ல வந்த் விஷயம் என்ன வென்றால், போட்டி இன்னும் முடியவில்லை.  இப்போதுதான் ஆரம்பித்துள்ளது.  Steyn, Morkel, Kallis போன்ற பௌலர்களை நாம் "உண்டு-இல்லை" என செய்ய வில்லையா?. எனவே கோளாறு எங்கே நடந்தது என்று பார்ப்பதை சரியாக 
பார்க்கத்தவறினோமானால்,  அதை சரி செய்யவும் தவறுவோம் தானே?


கடைசியில் ஓவர்களில் தோனி சொன்னது போல 'பந்துக்காகவும்', 'டீமுக்காகவும்' இல்லாமல், 'கேலரிக்காக' அடியதில் தான் தவறு.
தேவையான பாடம் கற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.  குறிப்புகள் கவணத்தில் கொள்ளப்பட்டிருக்கும். எனவே 'மாரடித்துக்' கொள்வதை
விட்டுவிட்டு, நம்மை சரி செய்துகொள்ள நிறைய நேரம் /கேம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வோம். நம்மிடம் சற்றேரக்குறைய எல்லாம் சரியாகத்தான் உள்ளது. துணைகண்டத்தின், ஸ்லோவான பிட்சுகளில்-Shaun Tait and Brett Lee போன்றாவர்களே கொழுக்கட்டை தின்னும் போது நமது 'மித வேக' பவுலர்கள் ஏதும் மந்திரவித்தை காட்ட இயலாது.


 வாய்த்திட்ட 'பவுலிங்கின்' குறைகளை 'பேட்டிங்க்' மூலம் சரிகட்ட வேண்டும்.


ஏற்கனவே, 100 கோடிப்பேர்கள் 11 பேர் முதுகில் உட்கார்ந்துகொண்டு 'டென்ஷன்' ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.   இன்னமும் பதட்டத்தை ஏற்றாமல், டீம் மீது நம்பிக்கை வைப்போம்.  (யாரேனும் ஒருவர் தானே ஜெயிக்க முடியும்?)

How safe – Our Nuclear installations?


What happened in Japan is a great worry not only to that country but also to the entire world. She is trying hard to avert Nuclear meltdown in Fakushima plant, similar to Chernobyl, which will be a serious threat to her citizens.  While Chernobyl is an accident, Fakushima is due to nature’s fury.  Already people around this plant are moved to safety.

Japan is not a stranger to earthquakes and has well prepared for such disasters. But this time in addition to damage to properties and loss of human lives,  nuclear radiation threat is added to the fore. 

We Indians need to introspect on our readiness and review our nuclear installations.  Considering the industrial safety records in India, which are not even worth of talking about,   with thick population,  lax regulations, poor enforcement and inadequate emergency responses, a nuclear power plant meltdown can be much more damaging.

“Chennai”, sitting in a “seismically active zone” with Kalpakkam not far away on the east coast, is particularly vulnerable.  We are installing another plant at Koodankulam in south.  How safe are these plants? 

Can the structures of these nuclear plants withstand the nature calamities, which can lead to nuclear meltdown and radiation?

Are our establishments are prepared to face such situation?

People in and around of these plants are to be educated about the nuclear radiations in case of any emergencies

Government need to address all these things.

Saturday, March 12, 2011

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம்


 The devastating earthquake measuring 8.9 on the Richter scale that struck Japan on Friday had its epicentre near the east coast of Honshu. The epicentre was at a depth of 24.4 kilometres.
Only a couple of days earlier, another earthquake of magnitude 7.2 succoured about 130 kilometres east of Sendai, a city with population over one million that experienced strong shocks. The epicentres of both the earthquakes lie on close proximity and experts at the Incorporated Research Institutions of Seismology believe that the March 6 quake was a fore-shock of the great earthquake of March 11. Earthquakes of such scale are not very uncommon in Japan, in fact there are have been five earthquakes of a similar scale since 1900.
What caused the Japan earthquake
The March 11 earthquake was caused due to of thrust faulting. In thrust faulting rocks placed lower in the earth's crust get pushed over the overlying layers. This happened along or near the boundary where the Pacific Plate, an oceanic tectonic plate beneath the Pacific Ocean, moves under Japan. The convergence rate at the Pacific Plate's boundary near Japan is much higher than other zones. Great earthquakes at shallow depth beneath the ocean pose a major tsunami threat, as experienced in Japan soon after the quake.


மேற்கண்ட விவரங்கள் யாவும் செயதித்தாட்களிலும், இன்னபிற ஊடகங்களிலும் 
வெளியானதது தான்.  நமது புவி ஆண்டுக்கு சர்ரசரியாக 500,000 நில நடுக்கங்களை 
எதிர் கொள்கிறது. இவற்றில் 100,000  மட்டுமே "உணரப்படுகின்றன".   100 மட்டுமே 

பாதிப்பை எற்படுத்துகின்றன.   ஜப்பானில் (அனைத்து தீவுகளிலும்) மட்டும் சரா சரியாக 1500-க்கும் மேற்பட்ட நில நடுக்கங்கள் எற்படுகின்றன. உணரப்படும் நடுக் கங்கள் சிலவே.  நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகள் யாவை என கண்டறி யப் பட்டுள்ளனவே தவிர, 
எப்போது, எந்த இடத்தில் ஏற்படும் என துல்லியமாக 
முன் கூட்டியே சொல்வது என்பது இன்னும் விஞ்ஞானத்தின் பிடிக்குள் சிக்க வில்லை. தற்போது ஏற்பட்ட நில நடுக்கம், அதனை ஒட்டிய ஆழிப்பேரலை மிகக்கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் A huge explosion has rocked a Japanese nuclear power plant damaged by Friday's devastating earthquake.  Japanese officials say the container housing the reactor was not damaged and that radiation levels have now fallen.The term "meltdown" raises associations with two nuclear accidents in living memory: Three Mile Island in the US in 1979, and Chernobyl in Ukraine in 1986.  In both, excess heat in the reactor caused fuel to melt - and in the first, wider melting of the core. The question is whether the same thing has happened in Fukushima. 
It appears that the reactor was shut down well before any melting occurred, which should reduce considerably the risk of radioactive materials entering the environment. However, the detection of caesium isotopes outside the power station buildings could imply that the core has been exposed to the air. Although Japan has a long and largely successful nuclear power programme, officials have been less than honest about some incidents  in the past, meaning that official reassurances are unlikely to convince everyone this time round.  Japan's Prime Minister Naoto Kan has declared a state of emergency at the Fukushima number 1 and 2 power plants as engineers try to confirm whether a reactor at one of the stations has gone into meltdown. Tests showed at least three patients evacuated from a hospital near the plant had been exposed to radiation, public broadcaster NHK quotes local government officials as saying.
Television pictures showed a massive blast at one of the buildings of the Fukushima-Daiichi plant, about 250km (160 miles) north-east of Tokyo. A huge cloud of smoke billowed out and large bits of debris were flung far from the building. The Japanese government's chief spokesman, Yukio Edano, said the concrete building housing the plant's number one reactor had collapsed but the metal reactor container inside was not damaged. He said radiation levels around the plant had fallen after the explosion. Officials ordered the evacuation zone around the plant expanded from a 10km radius to 20km (12 miles). The BBC's Nick Ravenscroft said police stopped him 60km from the Fukushima-Daiichi plant. Mr Kan said the amount of radiation released was "tiny".
இதில் வியக்க வைத்த அம்சம், இப்பேரழிவினை ஜப்பானிய மக்கள் எதிர் கொண்ட 
விதம்.   பி.பி.ஸி செய்தி தொகுப்பாளர்  சொல்கிறார்:  அது ஒரு 37 மாடிகள் கொண்ட கட்டிடம்.  நில நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது.  மின்சாரம் 
நிறுத்தப்பட்டு விட்டது.  37-ஆவது மாடியிலிருந்து, மாடிப்படி வழியாகவே, மக்கள், எந்தவிதமான தள்ளுமுள்ளுமின்றி, அமைதியாக சுவற்றைப்பித்துக்கொண்டு 
வேகமாக இறங்கிகொண்டுள்ளனர்:  முடியாதவர்களுக்கு உதவியும் செய்து 
கொண்டு.  இந்த "Coolness" and the "attitiude-ஐ  உலகில் வேறு என்காவது கான 
முடியுமா வென ஆச்சரியப்படுகிறார்.  

கனடா நாட்டைச் சார்ந்த பயணி ஒருவர் ஜப்பானிலிருந்து சொல்கிறார்: மக்களில் சிலர் தெருக்களில் பாதுகாப்பு கருதி குவிந்துள்ளனர்.  ஆனால் எந்தவிதகமான 
பதற்றமுமில்லாமல் தங்களுடைய பணிகளை செயது கொண்டுள்ளனர். அவர்கள் நிகழ்வுகள் நம்ப முடியாததாக இருக்கிறதே தவிர பயமொன்றுமில்லை என்கின்றனர் . சிலர் கண்கலங்கினார்களே தவிர "பித்து பிடித்தது போல" 
 நடந்த்து கொள்ளவுமில்லை; "அலறவோ கூச்சலிடவோ" செய்யவுமில்லை.  உணர்வுகளை தங்களுக்குள் ளாகவே வைத்துக் கொண்டார்களே தவிர, பொது இடத்தில் 'சீன்' கிரியேட் பண்ணவில்லை.  மறக்காமல் தங்களது நண்பர்களுக்கும், 
உறவினர்களுக்கும் தாங்கள் நலகமாக இருப்பதை தெரியப்படுத்தி விட்டனர்.  
பேரிடர் நேரும் போது மக்களும்-அரசாங்கமும் எவிவிதம் நடந்து கொள்ள 
வேண்டும் என்பதை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியாதாக கூறுகிறார் இவர். 
முக்கியமாக, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி "லூட்டிங்க்" நடைபெறவில்லை.......  

கிட்டத்தட்ட இதுபோல, அனுபவங்க்களை,   பல நிருபர்கள் தத்தமது செய்தி 
நிறுவனங்களுக்கு செய்தி அளித்துள்ளனர். இதுபோல எதாவது நம் நாட்டில் நடந்திருந்தால், நாம் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்போம்?
 உலகமே ஜப்பானிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.  
=======================================================================

Sunday, January 30, 2011

எதற்காக "பிலாக்"கில் எழுத வேண்டும்?


இந்த 'தனி வலை' அல்லது "பிலாக்கில்" ஏன் எழுத வேண்டும் என 
யோசித்தால் சிறு வயதில் 'கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில்" 
எழுதிப்பார்த்த 'வெண்பாக்களின்'  அல்லது கட்டுரைகளின் - ஆசைத்தொடர்ச்சி போல் தெரிகிறது.  கிட்டத்தட்ட ஆரம்ப எழித்தாளர்கள் அனைவரும் முயன்று பார்த்த "கையெழுத்து பத்திரிகை" போல.    நானும் எழுதுவேன் என கிணற்றுக்குள்ளிருந்த்து கத்தும் முயற்சியோ என்னவோ?    "சுஜாதா" சொன்னது 
போல 15 நிமிட புகழுக்கு ஆசையா? அல்லது தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளும் ஆசையா?   வடிக்கட்டிப் பார்த்தால் தோன்றியதை 
யோக்யமாக எழுதிவைக்க ஒரு இடம்..என்னைப்பொருத்தவரை அவ்வளவுதான்.


======================================================


கடந்த ஒரு மாதமாக BSNL -ல் "தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான"   பிரச்சாரங்கள் 
ஒரு திருவிழாபோல நடந்து முடிந்தது.  எது வெல்லப் போகிறது என்பது 03/02/2011 
அன்று தெரியும். போட்டியிடும் இரு முக்கியமான சங்கங்களும் ஓரளவு 'இடது' 
சிந்தனை உள்ளவர்கள் தாம்.  "உலகத் தொழிலாளர்களை" ஒன்று படச் 
சொல்லிவிட்டு 'உள்ளூர் தொழிலாளர்களுக்காக' தேர்தல் நடத்துகிறார்கள். 


BSNL- ன் மார்க்கெட் அதல பாதாளத்தை நோக்கி!    நிதி நிலை படு மோசம்.
வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டு லட்சம் பேருக்கு சம்பளம் 
கொடுக்கவேண்டும்!  கருவிகள் வாங்க வேண்டும் ! ஊதாரி செலவுகள் 
செய்யவேண்டும்!  நேர்மைக்கு புறம்பான வழியில் சம்பாதிக்க முயற்சிகள் தனி! 
அரசாங்கமே தன்னுடைய நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் வினோதம்! 
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது - காலத்தை ஓட்டும் -  பொறுப்பற்ற நிர்வாகம்! 
மேல் முதல் கீழ் வரை பணிக்கலாசரம் மறந்த நிலை! 
வேடிக்கை என்னவென்றால்   BSNL  காக்கப்பட வேண்டும் என "அனவரும்"
 "கோட்-சூட்" போட்டுக்கொண்டோ.."ஜோல்னா பை"  போட்டுக்கொண்டோ விடாது 
உபதேசிக்கின்றனர்.


இருவரது பிரச்சாரங்களை கவனித்தால் ....


"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் கான்பது அறிவு" என்ற குறளில்...
"அறிவு"  என்பதினை "அரிது"  எனப்படித்தால் சரி எனத் தோன்றுகிறது. 


ம்ம்ம்ம்ம்..........................................
=========================================================