காலம் காலமாக, நிகழ்தலை முறையினருக்கு, சென்ற தலைமுறையினரைப் பற்றி, ஒரு பொழுதும் நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. சொன்ன பேச்சு கேட்க மாட்டார்கள், அறிவு போதாது, முதிர்ச்சி இருக்காது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான். இதனால்தான், "அறியா பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது" என்று சொலவடையே வந்தது. ஆனாலும், காலம் நகரத்தான் செய்தது.
வருத்தம் தரும் விதமாக, தற்போதைய நிகழ் தலைமுறையின், GenZ பற்றிய கவலை உண்மையாக இருக்கின்றது.
அவர்களை குறித்து பீதி அடைவதில் உண்மை இருக்கிறது.
GenZ, தங்கள் தலையில் மட்டும் அல்ல; நாட்டின் தலையிலும் மண்ணை அள்ளி கொட்டுகிறார்ளோ என்ற அச்சம் நிலவுகிறது.
அவர்களது சிந்தனைகள் அரை வேக்காட்டுத் தனத்திற்கும் கீழே இருக்கின்றது.
இராணுவ முக்கியத்துவம் உள்ள நிலைகளின் உள்ளே நுழைந்து பார்ப்பேன் என்பது அறிவீனம். முட்டாள்தனம், பைத்தியக் காரத்தனம். ஒருவகை கயமைத் தனம்.
எல்லாமே அவர்களுக்கு கேலிகள், கிண்டல்கள் மீம்கள் என்பது பரிதாபம்.
அதனால்தான் GenZ அணுகுமுறை குறித்து , அச்சம் அடைகிறோம்.
பெரும் பாய்ச்சல் என்று அவர்களே சித்தரித்துக் கொண்டாலும், குருட்டுப் பூனை விட்டத்தில் தாவும் கதையாகத்தான் இவர்கள் நடத்தை இருக்கிறது.
இவர்கள், அறிவினை கழற்றி வைத்த தலைமுறையா அல்லது பரிணாம வளர்ச்சி குன்றியவர்களா அல்லது பள்ளி வகுப்பில் கடைசி வரிசையா என்பது தெரியவில்லை.
அவர்களது இம்சைகள் எல்லை கடந்து திரிகின்றன,
இந்த ஜென் இசட் கோஷ்டிகளுக்கு எதை செய்யவேண்டும் எதைச் செய்ய கூடாது என்பது தெரியவில்லை. உலகில் எல்லாமே தவறு; நாங்கள் மட்டும்தான் சரி என்பது போலவும், இவர்கள் நினைத்ததை எல்லாம் செய்வதுதான் சுதந்திரம் என்றும் அதற்குத்தான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும் நம்புகின்றார்கள்,
எவ்விதமான நாட்டுபற்றோ நல்லறிவோ , பொறுப்போ இவர்களிடமில்லை.
இருப்பதெல்லாம் அவசரம், அறைகுறை, பக்குவமின்மை, பொறுப்பின்மை, மேலெழுந்த வாரியான கருத்து. ஆழ்ந்த சிந்தனை என்பது அறவே இல்லை.
அக்கம் பக்க நாடுகளில் இவர்கள்செய்த கலவர அட்டகாசம் நிறைந்த காலித் தனத்தை, புரட்சி என நம்புகிறார்கள்.
இவர்களால் ,ஓரிரு நாடுகளில் ஆட்சியும் மாறின.
அங்கெல்லாம் ஆட்சி அலங்கோலமாய் கிடக்க, இக்கும்பல் ஆப்பசைதத்த குரங்கு போல் சிக்கிக் கிடக்கின்றன.
நெருப்பு வைத்துவிட்டு ஓடமுயலும் குரங்குகள் போல் அரற்றுகிறார்கள்.
வெளிநாட்டில் குரங்குகள் என்றால் இங்கு இவை கரப்பான் பூச்சிகள்.
அப்படி ஒரு கரப்பு ஒன்று, லடாக் பக்கம் ராணுவ முகாமில் நுழைந்து, என் உரிமை, என் நாடு. என் எல்லை என அட்டகாசம் செய்து படமெல்லாம் எடுத்து அழிச்சாட்டியம் செய்திருக்கிறது
ராணுவ நிலைகளை படம் எடுப்பது , காவல் மிகுந்த இடங்களில் நுழைவது எல்லாம் தடை செய்யபட்ட ஒன்று. இச்சட்டம் எல்லோருக்கும் பொருந்தும்.
ஆனால் ஜென் இசட் கோஷ்டிகள் தாங்கள் யாருக்கும் கட்டுபடாதவர்கள் என நினைப்பு கொண்டவர்கள் என்பதால் அடங்க மறுத்திருக்கின்றது,
மேலும் "நான் ஜென் இசட்தெரியுமா?" என குரங்கு போல என கூச்சல் போட்டு உள்ளது.
உண்மையில் இம்மாதிரி இடங்களில் அத்துமீறி நுழைந்தால் சுட்டுக்கொல்ல ராணுவத்துக்கு அதிகாரம் உண்டு,
ஆனால் இப்பெண் "ஜென் இசட்" என கத்தியதால் , "ஓ இந்த கிறுக்கர் கூட்டமா, என சுடாமல் வெளித் தள்ளியிருக்கிறது.
கூச்சல் போடுவது; கிரீச்சிடுவது; ஒரு பொத்தானை அழுத்தி ஊழலை அழுத்தி விடலாம் என சிந்திப்பது; ஒரு என்டர் பட்டனை தட்டி ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனக்கனவு காண்பது; ஊர்ச்சந்தையில் ஒன்று கூடி, பீட்ஸா, பர்கர், பிரியாணி தின்று மாற்றத்தை கொண்டு வரலாம் என எப்படி நம்புகிறார்கள்?
லட்சக் கணக்கான பிரியாணி பொட்டலங்களை யார் Sponser செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பதும் புரியவில்லை என்பது பரிதாபம்.
விசனத்திற்குரிய விஷயம், இவர்களுக்கு எந்த புத்தகமும் வேண்டாம். இன்ஸ்டா போதும். அரைகுறை ரெட்டிட் போதும். சமூக வலைத்தளங்கள் இவர்களது பிடியில்.
சில வகை பைத்தியங்களுக்கு, ஒன்று போட்டால் ஒழிய புத்தி வராது. நெருப்பு என்றால் சுடும் எனத் தெரிய வேண்டும்.
