Showing posts with label Me and BSNL. Show all posts
Showing posts with label Me and BSNL. Show all posts

Tuesday, February 2, 2016

மெக்காலே இன்னமும் இறக்கவில்லை

சில தினங்களுக்கு முன், சேந்தமங்கலம் கோட்டைக்கோயில் பற்றிக் குறிப்பிட்டு, அக்காலத்திய  நமது தொழில் நுட்ப ஞானத்தை வியந்து குறிப்பிடும் வகையில், ‘இன்றைக்கு சிதைந்த கற்களைகளையே, நம்மால் திரும்ப அடுக்க முடியவில்லை, அக்காலத்தில், இப்படிப்பட்ட கோவில்களை   நூற்றுக்கணக்கில் எப்படி நிர்மாணித்தார்களோ..’ எனக் குறிப்பிட்டிருந்தேன்.  

இந்த வரிகள் குறித்து, தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் நண்பர் ஒருவர். அக்காலத்திய நமது அறிவு, இக்காலத்தியதைவிட மேம்பட்டதே என சாடினார்.

இன்றைக்கு இருக்கும் க்ரேன், டோஸர்கள், பொர்க்லேன் என்பது போன்ற கனமான பொருட்களைக் கையாளும் கருவிகள் இல்லாமலே, அக்காலத்தில் சாதித்தார்கள்.. அவர்களது அறிவு மேம்பட்டதே... என்பதே நான் கூற விழைந்தது.

ஆனால் , நமது ‘சுயமான’ இந்திய அறிவு எங்கே போய் ஒளிந்து கொண்டது, என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 

சரித்திரத்தின் எந்த கணத்தில், நாம் ‘நம்மை’ இழந்தோம்?  நமது ‘இழப்பு’ ஒரு கணத்தில் நிகழ்ந்ததா? இந்த சதிக்குப் பின்னால் இருந்த கயவானித் திட்டம் என்ன?  யார் இதைச் செய்தார்கள்? நாமே எப்படி இந்த சதிக்கு விருப்பத்துடன் பலியானோம்!” என்ற தொடர் வினாக்களும் எனக்குள் எழுந்தது.

“நாங்கெல்லாம் அப்பவே, புஷ்பகவிமானம் விட்டவர்கள்” என்பது போன்ற வாதத்திற்குள் நுழையவில்லை.  ஆனால், அக்காலத்திய நமது நுட்ப அறிவிற்கு சாட்சியாக, நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும்  கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களும்-கோயில்களும், நிரூபிக்கப்பட்ட சோழர்களின் வலுவான கப்பற் படையும், தமிழர்கள் திரைகடலோடி வியாபாரம் செய்ததும், உலகின் எந்த சிறந்த இலக்கியத்திற்கும் சற்றும் குறைவற்ற தரம் கொண்ட நமது இலக்கியங்களும் (நமது நாட்டு எந்த மொழியாக இருந்தாலும் சரியே),   நமது நாடு எல்லாத்துறையிலுமே சிறந்து விளங்கிய நாடு தான் என்பதை நிருவ போதுமானதே! இதைப் புரிந்து கொள்ள தனித்திறமை வேண்டியதில்லை. கணிதத்திலும், வானியலிலும் நமது அன்றைய அறிவு பூரணமானதே! மூட நம்பிக்கைகளும், முட்டாள்தனங்களும் மிகுந்த ஒரு நாடாக இருந்திருந்தால், இவையெல்லாம் சாத்தியமா என்ன?

பல அன்னிய படையெடுப்புகளை சந்தித்ததுதான் இந்தியா. அப்பொழுதெல்லாம் பல கோவில்கள் நிர்மூலமாக்கப் பட்டனதான். ஆனால் அவர்கள் யாவரும் நமது அறிவை குழிதோண்டிப் புதைக்க வில்லை. அவர்களது மொழியைத் நம் மீது திணிக்கவில்லை. மொகலாயர்கள் காலத்திலும் கூட, அன்னிய மொழி கட்டாயமாக்கப் படவில்லை. (ஆனால் மதம் சார்ந்த வன்முறை இருந்தது).

அப்பொழுதெல்லாம் பறிபோகாத நமது கௌரவம், சுய ஞானம், சுய சார்பு போன்றவற்றை   300 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் முழுமையாக இழந்தோம். ‘ஆங்கிலேயன்’ குயுக்தியாக ஒன்றைச் செய்தான். அது நமது மொழிகள் மீது  நாமே அவமானம் கொள்ளும்படி செய்ததுதான். 

இந்தப் புன்னிய காரியத்தை செய்தது ‘மெக்காலே’ பிரபு. இந்திய தண்டனைச் சட்டத்தையும், கல்வித் திட்டத்தையும் உருவாக்கிய மாபாவி அவனே!

எதை இழந்தாலும் திரும்பச் செய்து கொள்ளலாம். ஆனால் மொழியை இழந்தால் மீட்கவே முடியாது என்பதற்கு இந்தியாவே சரியான உதாரணம். இன்றைக்கு தமிழ் நாட்டில், தமிழில் பேசுவது கௌரவக்குறைவு, தமிழில் படிப்பது ‘விரயம்’ என்ற மனப்பாங்கு உருவானதன் விதை, ‘மெக்காலே’ போட்டதே. அவன் தான்,  ஆங்கிலப்படிப்பு மட்டுமே உயர்வானது என்று நம்பும்படி செய்தான். அவன் போட்ட கல்வித்திட்டம்தான்,  ‘தாய்மொழிக் கல்வி வீணானது’ என்ற கருத்தை நம்மில் ஊன்ற வைத்தது.  இந்த மனோபாவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் இப்படித்தான் எண்ணுகிறது.

மெக்காலேவை, அன்று, 400 மைல்கள் பல்லக்கில் சுமந்துகொண்டு, தூக்கிக் கொண்டு நடந்தோம். இன்றைக்கும் மௌனமாக அவனை சுமந்துகொண்டிருக்கிறோம்.  ஆங்கிலம் பேசுவதுதான் மரியாதையானது, அவனிடம் வேலைபார்ப்பதுதான் கௌரவத்துக்குரிய ஒன்று என்று நம்பவைத்தவன் இவனே! நம் ஒவ்வொருவர் முதுகின் மீதும் மெக்காலே உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறான். பரிதாபம் என்னவென்றால், அவனை முதுகில் சுமப்பதை நாம் ‘கௌரவம்’ என நினைப்பதே!

இந்திய மக்களில் மிகுந்த அறிவுத் திறமை மிக்கவர்கள் இருக்கிறார்கள். அறிவியல், வானவியல், கணிதம் போன்றவற்றில் இந்தியர்களுக்கு இருக்கும் தனித்திறனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால்,  ஆங்கிலக் கல்வித் திட்டத்திற்கு இந்தியர்களை மாற்றுவதே சரி என்று முன்மொழிந்தவன் ‘மெக்காலே’.

அவன் கூறினான்: “இந்நாட்டு மக்கள் மிக மதிப்பு மிக்க பாரம்பரியத்தையும் உயர்ந்த தன்மைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. 

எனவே நான் இந்த நாட்டின் பழமையான கல்விமுறையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேல்நாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்து விடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும்.”

‘கல்விக் கூடங்களை’,  ‘தண்டனைக் கூடங்களாக’ மாற்றிய பெருமையும்  இவனுக்கே! 1835, பிரப்ரவரி இரண்டாம் தேதி, தனது கல்விக் கொள்கையினை சமிர்ப்பித்தான்.  அன்றைக்கு அவன் சொன்னான், ‘இனி இந்தியர்களின் தாய்மொழி, ஆங்கிலமாகிவிடும்’ என.  அது இன்று, நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது தானே? ஆங்கிலம் பேசுவது மட்டுமல்ல, ஆங்கிலேயன் போல ‘உச்சரிக்கவும்’ செய்கின்றோம்.

ஆங்கிலம் பேசாத, ஆங்கில வழி கல்வி பயிலாத ஜப்பானோ, பிரான்ஸோ, சீனமோ, ருஷ்யாவோ முன்னேறவில்லையா? சாதிக்கவில்லையா? ஜாவாவும், விண்டோஸும், ஆன்ட்ராய்டும் கொரிய மொழி பேசவில்லையா? ருஷ்ய மொழியில் ‘கவுண்டவுன்’ நடக்கவில்லையா?

இந்த அடிப்படைச் சிந்தனையைத் தடுத்து,  நம்மையெல்லாம், கலாச்சார ரீதியாகவும் முகமிழந்த மனிதர்களாக மாற்றிவிட, நம்மை மத, இன,மொழி,பிராந்திய அடையாளங்களால் பிரித்து வைக்க, ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்களாக நம்மிடம் ஆட்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல்வியாதிகள் என்று பெயர். 


Saturday, December 17, 2011

புதிய தலைமுறை தொலைக்காட்சி


புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ‘ரெட் சல்யூட்

இன்று (17/12/20111) அன்று இரவு 2130 மணிக்கு, ‘ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியினை, "புதிய தலை முறைதொலைக்காட்சி"ஒளிபரப்பியது.  பி.எஸ்.என்.எல் ஊழியர்களும், ஓய்வு பெற்ற பொது மேலாளர்களும், தோழர் மதிவானன் அவர்களும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களும், மற்றும் சிலரும்  பேட்டி எடுக்கப்பட்டனர். நிகழ்ச்சி நிலையத்தாரால் தொகுத்து வழங்கப்பட்டது!

Saturday, October 1, 2011

H A P P Y B I R T H D A Y “B S N L”


Bharat Sanchar Nigam Limited (BSNL) completes 11 years, on 1st October 2011.

On 1st October 2000,  this PSU was formed,  changing the government Department DOT to a corporation. 

This company which had cash reserve of  Rs. 40,000 crores and posting a profit of about Rs. 5,000 crores to Rs. 10,000 crores in a year has now been reduced to a loss o Rs.6384, in 2010-11.

Government's commitment to pay ADC to BSNL, was thrown into air. Licence Fee reimbursement is also now stopped.

Now the USOF of Rs.2000/- Crores is also stopped.


In the name of level playing, the government has withdrawn its commitments. All the surplus money of BSNL,  was  taken away by the government in the name of spectrum charges.

BSNL was discriminated against the private companies, which are very CLOSE AND DEAR to the government.


The  anti-PSU policy of the government, inefficiency of the management or rather mismanagement, a certain casual attitude of the workers, corrupt officers  - all have resulted in negative growth of the company.

Procurement of equipments was stopped long back. Now it is learnt that the present tender for procurement of equipment is also facing cancellation.

In the name financial crunch,  benefits of the workers, such as Medical allowances, LTC, Bonus are denied.  BSNL Board has decided to implement VRS, and submitted its report to DOT on 29/09/2011.

Forthcoming  years are going to be the years difficult for BSNL.
                            -O-


Happy Birth Day BSNL!

Wish you many more (??!!) returns of the Day!!

Monday, September 26, 2011

BSNL AND VRS


BSNL is in deep crisis.  Its market share is dipping every month. Its  market share in mobile communications came to 14% from 25%.  Wire line connections, which are costlier and difficult to maintain are surrendered in alarming proportion.    This financial year losses may be around 6000 crores.  This company's wage bill alone comes around 50% of their revenue.  

Government of India is determined to put the BSNL in coffin.  They have buried Air India by placing purchase order for new air crafts; now trying to bury BSNL by not placing any purchase order for equipment for its mobile communication expansion project.

BSNL's problem are many.  Its officers and workers are not at all prepared to face the  challenge.  I agree that government / Managements policy are, in no way near to bail out the company. Yet, the staff and the management, with the existing asset and man power, could provide a better service and can catch the Broadband market thro' ADSL.  But, they do not have any aggressive plan to catch the Broadband market, which has got great potential.

Our engineers and staff prefer to talk more and do less. The pity is, most of its engineers, I repeat ENGINEERS are just matriculates. Its Accounts Officers have not passed even  'INTER'.  This company is happy to have matriculation auditors.  

The worst part is, most of the executives are corrupt. They are minting company's money in all possible wrongful ways. If I say bluntly, they are looting the company’s money.  How can they  motivate anybody?

Not to say about the staff,   majority attend the office by 1100, take tea, go to lunch; use the company's phone and internet and go home by 1630.  

In the present scenario, with all reasons, I do not believe, the company can revive ever.With multiple trade unions and associations at all levels, only a blame game is taking place.   

At this juncture, the management is proposing VRS.

Since most of the trade unions are “left” minded, no union, in principle, will accept this Scheme.  Curiously the leadership of all unions fails to notice the mood of the workers.  I am sure, that at lease 50% of workers will accept the scheme, with  the smiling faces.  It will be better if the trade unions accept the fact and bargain for the better compensation for VRS optees.  

I wish better sense prevail.

Friday, September 9, 2011

இறக்கும் நிலையில் இந்திய தந்தி


இன்று அலுவலகப் பணி நிமித்தமாக தொலைவில் உள்ள ஒரு தந்தி அலுவலகத்திற்கு சென்று வர நேர்ந்தது. உள்ளே சென்றால் பொதுமக்கள் யவருமில்லை.  கவுண்டரின் (Counter) உள்ளே, ஒரே ஒருவர் இருந்தார்.  அவரும் கூட தந்தி சம்பந்தமான வேலை ஏதும் செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவருக்கு இடப்பட்ட வேறு ஏதோ ஒரு பணியினைச் செய்து கொண்டிருந்தார். 

டெலகிராஃபிஸ்ட் என அழைக்கபட்டுக் கொண்டிருந்த அந்த அலுவலக பணியாளர், ‘மோர்ஸ் கோட்' அடிப்பதில் பயிற்சி பெற்றவர். எதற்காக பணியில் சேர்க்கப்பட்டாரோ, எதில் பயிற்சி பெற்றாரோ அந்த களத்திலிருந்து வேருடன் பிடுங்கப் பட்டு, சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பணியினை மேற் கொண்டிருந்தார்.


நினைவுகளை கொஞ்சம் ‘ரிவைண்ட் செய்து பார்த்தேன். அது, தொலைதொடர்புத்துறையின் ‘கற்காலம்.  செய்தி தொடர்புகளுக்கு ‘தபால்–தந்தி இலாக்கா மட்டுமே பொறுப்பேற்றிருந்த நேரம். தற்போதைய  “தொலைதொடர்பு இலாக்கா கூட ‘தபால்-தந்தி இலாக்காவில்  அடக்கம். பின்னர் தான் "தபால் தந்தி" யிலிருந்து ‘தொலை தொடர்பு தனியாக பிரிந்தது. அக்காலத்தில் சாதாரனர்களுக்கான கம்யூனிகேஷஷேன் ‘தபால் தான். அவசரமென்றால் தந்தி.

‘சார்... போஸ்ட்.. என்ற சப்தம், அக்காலத்தில் பலருக்கும்  தேனாக இனித்த  குரல். சொந்த-பந்தங்களிடமிருந்தோ, அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளுக்காகவோ, காத்திருந்து, கடிதங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.  காலை பத்து மணிக்கு, அனேகமாக எல்லா வீடுகளிலும் கேட்கும் செற்றொடர். “போஸ்ட் மேன் வந்துவிட்டு போய்விட்டாரா?” 

‘சார்... போஸ்ட்..என்ற பிரயோகத்தை பயன்படுத்தாத எழுத்தாளர்களே இல்லை என்று துணிந்து சொல்லிவிடலாம். அவ்வளவு பிரபலமான, தவிர்க்க இயலாத, ஒரு நைந்து போன வார்த்தை இது. 

தபால் அலுவலகங்களில், பிரதான இடத்தை தந்தி அலுவலகம் பெற்றிருக்கும். தபால் அலுவலகம், மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டு விட்டாலும், தந்தி அலுவலகம் திறந்தே இருக்கும். தந்தி அனுப்புவதற்காக எப்போதும் கூட்டம் காத்திருக்கும். போஸ்ட் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் ‘லேட் ஃபீஸ் பெற்றுக் கொண்டு பணியாற்றும் அலுவலகர் பலர் இருந்தனர். 

உடணடியாக செய்தி போய்ச் சேரவேண்டும் எனில், அக்காலத்தில் தந்திதான் வழி. தந்தி மணியார்டகள் கூட உண்டு.  கிராமப் புரங்களுக்கு தந்திகளை கொண்டு சேர்ப்பதற்காக, ‘மெஸஞ்சர்கள் எல்லாம் உண்டு. (இந்தியா விடுதலை ஆவதற்கு முன்னால் இவர்களுக்கு ‘ரன்னர்கள் என்று பெயர். இந்த ரன்னர்களை  சட்டப்படியாகவே எவரும் வழியில் தடுத்து நிறுத்தக் கூடாது.  சுடுவதற்கு கூட அதிகாரம் பெற்றவர்)

அக்காலத்திய தந்தி அலுவலகங்கள் நினவுக்கு வந்தன.  எந்த நேரமும் ‘ஒரு ஃபாக்டரி போல இயங்கிக் கொண்டிருக்கும், இந்த சென்ட்ரல் டெலெகிராஃப் ஆபீஸ்கள். டெலெகிராஃபிஸ்ட்கள் மோர்ஸ் கருவிகளுக்கு முன் அமர்ந்து, அபார வேகத்தோடு, துல்லியமாக ‘கட..கட..கட்டுக் கட..என செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.  பெரிய சைஸ் டைப்ரைட்டர்களைப்போல இருக்கும் “டெலி பிரிண்டர்களும், டெலக்ஸ் களும் ஓயாமல் செய்திகளை வாங்கிக் கொண்டும், அனுப்பிக் கொண்டும் இருக்கும்.  உள்ளே போனாலே பிரமிப்பாக இருக்கும். வேலை செய்தால் இந்த மாதிரியான அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என எவருக்கும் தோன்றும்.

தந்தி அலுவலகத்தின், இன்னொரு பக்கம் ‘பொதுத் தொலைபேசி கள் இருக்கும்.  பெரிய அலுவலகங்களில் நான்கு ஐந்து பூத்கள் கூட இருக்கும்.  பிரசவ அரையின் முன் காத்திருக்கும் "கணவர்கள்" போல தனது ‘கால்கள் (டிரங்கால் கள்) வரும் வரை தவிப்போடு காத்திருப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள், பாங்க் அலுவலகங்கள், வானிலை ரிபோர்ட்கள் என பலரிடமிருந்தும் தகவல்கள் பறந்து கொண்டிருக்கும்.  24 மணி நேரமும் பிஸியாக இருக்கும்.

“தகவல் தொழில்நுட்ப புரட்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்ட்து.  தபால் போய், ட்ரங்கால்கள் வந்து, அதுவும் போய், எஸ்.டி.டி வந்து, அதுவும் போய் செல்ஃபோன்கள் வந்து,  ‘செல்போனும் ஒரு கட்டைவிரலும் இருந்தால் ‘உலகமே உங்கள் கையில். செல்ஃபொன் இருந்தால், தந்தி அலுவலுகத்திற்கு மட்டுமல்ல, ‘பேங்க்குக் கூட போகத்தேவையில்லை. அனைத்தும் உங்கள் கட்டைவிரலில்.

பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாகவே இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சி, தந்தி அலுவலகத்தில் பணி புரிந்த ஆட்களுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?  ‘P&T யில் உத்தரவாதமான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், DOT –க்கு வந்து, பின் BSNL  ஆக மாறி, மத்திய அரசாங்கத்தின்  “தன் வீட்டுக் குழந்தையை தானே கழுத்தை நெரித்துக் கொல்லும் விந்தை கொள்கைகளின் காரணமாக, இந்த நிறுவனமும் (BSNL) நொடித்துப் போய், அபாயகரமான  நட்டங்களை சந்தித்துக் கொண்டு, அடுத்த வருடம் ‘சப்பளம் வருமா என கவலையுடன் இருக்கும் இந்த BSNL அலுவலகர்கள் நிலை பரிதாபமானது அல்லவா?.

‘டெலகிராஃபிஸ்ட்களின் விரல்கள் தாண்டவ மாடிய ‘மோர்ஸ் மிஷின்களும்’,  டெலி பிரிண்டர்களும், எஸ்.டி.டி மானிட்டர்களும் இப்போது எப்படி இருக்கின்றன என அறிய விழைந்தேன். அவை விருந்து முடிந்த பின்னர் அகற்றப்படாத மதுக் கோப்பைகள் போல கவனிக்கப்படாமல், சீண்டப்படாமல், இறைந்து  கிடந்தன.  

சார் எல்லாம் ‘ஸ்கிராப்பில்  (காயலான் கடை) போடப்பட்டுவிட்டது என்றார் அலுவலர்.  வேண்டுமானால் ஒன்று இருக்கிறது பாருங்கள் என்றார். மோர்ஸ் மெஷின். அதன் அருகே சென்று மெஷினில் அடித்தேன்..  கட கட..கட்.............. (நான் இறந்துவிட்டேன் என).  


இக்கால இளைஞர்கள் ‘டிரங்காலுக்காக காத்திருதேன், ‘தந்தி அனுப்பினேன் என்ற வாசங்களைக் கூட நம்ப மறுப்பார்கள்.


சார்.. தந்தி வருமானம் ஏதாவது வருகிறதா என வினவினேன்.

மிகவும் விரக்தியான  முகத்துடன், “இல்லை சார்.  தந்தி அனுப்புபவர்கள் எவருமிலர்.  சட்ட ரீதியாக (ரிகார்ட் purpose-க்காக) தந்தி அனுப்ப எப்போதாவது அத்தி பூத்தாற்போல சிலர் வருவார்கள் என்றார்.


‘அப்போது தந்தி அனுப்ப என்ன செய்வீர்கள்? மோர்ஸ் தான் காணாமற் போய் விட்டதே? என்றேன்.  Internet மூலமாக அனுப்போவோம் சார்.  என்றார்.


இந்த தடாலடி மாற்றங்கள், ஒரு வகையில், வாழ்க்கைத் தத்துவத்தை சொல்வது போல கூட இருந்த்து.


எனினும்,  150 வருடங்களுக்கு மேலாக,  இந்திய மக்களுக்கு சேவை செய்து ஓய்ந்து, அழுக்குடன் குப்பையில் கிடக்கும் மிஷின்கள் சற்று வேதனையைத் தந்தன.

கால ஓட்டத்தில், விஞ்ஞான மாற்றத்தின் விளைவாக, பல்வேறு தொழில்கள் காணாமற் போய்விட்டன. சுவற்றில் சித்திரம் மற்றும் விளம்பரம் வரைவோர், சைக்கிள் வாடகைக் கடை,  கை ரிக்ஷா,  அம்மி-ஆட்டுக்கல் செய்வோர், சுண்ணாம்பு செய்வோர் என பலரும் காணாமற் போய்விட்டனர். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?  வினவிப் பார்த்தேன். வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அவர்களை வேறு தொழிலுக்கு விரட்டி விட்டன.  தன்னை மாற்றிக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவித்துக் கொண்டுள்ளனர். மாற முடியாதவர்கள்? எதோ ஒரு ஹோடேலிலோ அல்லது கோவில் வாசலிலோ இருக்கின்றனர்.  சிலர் கூலிக்கு வேலை செய்து கொண்டுள்ளனர்.




It would take years
and countless tears
to wash away all the hate
that we have slowly create
that was been stored in our hearts
we have been scattered in to parts
like worthless outdated money
and no matter what anybody
says there is no shame
in the way that we feel
we are all the same
we just learn to deal
never miss a chance to heal! 

what has been said and done
neglected and worn down(beyond repair) 
i try to escape and run(no one seemed to care) 
not allowed to utter a sound (im speachless) 
only loneliness to be found(feel so helpless) 
keep it all inside
the worst thing we could do
keep it in morse code so
i have died 
and can not cry
the pain we deny
i really should let it all go
wishing to the misty heavens
it would always show
and through pouring rain clouds
on to purple flower petals
so we both can be found
everthing can finely settle 

Saturday, July 23, 2011

Another opportunity which should not be wasted...


மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஸ்ரீ கபில்சிபல் பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த செய்தியின் சுருக்கம்:


அனைத்து கிராமங்களுக்கும் பிராண்பேண்ட் வசதி செய்துகொடுக்கும் 
Rs 20,000 மதிப்புள்ள திட்டத்தினை DOT அங்கீகரித்துள்ளது.   விரைவில் கேபினட் அங்கீகாரத்திற்கு வைக்கப் படும். இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்திற்கான பணம் Universal Service Obligation (USO) Fund மூலம் அளிக்கப் படவுள்ளது.   இத்திட்டத்தின் நோக்கம், "தேசிய கண்ணாடி இழை நெட் வொர்க்" அமைப்பது.  


மாவட்ட தலை நகரில் ஆரம்பித்து கிராம பஞ்சாயத்து வரை இந்த நெட்வொர்க் போடப்படும்.  ஆரம்பத்தில் BSNL  மற்றும் RailTel மூலம், இந்த பிராட்பேண்ட் திட்டம் நிறைவேற்றப்படும். இத் திட்டத்தின் மூலம், 
 e-education, e-medicine and e-governance ஆகியவை சாத்தியமாகும்.



செய்தி விபரங்களுக்கு   Click Here



Tuesday, May 3, 2011

MAY DAY - BSNL


தொலைபேசித்துறை P&T இலாக்காவின் ஒரு அங்கமாக இருந்தது. 
பின் DOT ஆக மாறினோம். 

மாறி வரும் சூழ் நிலையில் DOT ஆக தொடர்வது இலாக்கா வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என BSNL ஆக மாற்றப்பட்டோம்.. 

கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாத அளவிற்கு, தொலைபேசி-தகவல் தொழில் நுட்பத்துறை அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. பேச்சு (VOICE)  ஒன்றே முக்கியமானதாக இருந்த நிலை போய் - டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் விளைவாக, VOICE என்பது, தகவல் தொழில் நுட்பத்தின் ஒரு 
சிறிய அங்கமாக மாறிவிட்டது. வங்கிகள், ரயில்வே போன்று - ஒரு துறை 
பாக்கி இல்லாமல் அனைத்து செக்டார்களும் "தகவல் தொழில் நுட்ப வலையில்"  இணைந்தன. 

இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சியினை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,  மார்க்கட்டில் முதல் நிறுவனமாக இருந்திருக்க 
வேண்டிய BSNL -ன் நிலை என்ன?

கோளாறு எங்கே துவங்கியது?

தனியாளாக 'கோலோச்சிக் கொண்டிருந்த'   நாம், நமக்கு சற்றும் பழக்க 
மில்லாத 'போட்டிகளுக்கு மத்தியில் " வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவும் எப்படிப்பட்ட போட்டி? CUT THROAT COMPETITION  என்று சொல் வார்களே, அத்தகைய போட்டி.

இந்த கடுமையான போட்டியினை சந்திக்க நமது நிறுவனம் தயார் நிலையில் இல்லை !

நமது CMD -க்கள் எவரும் "மார்க்கட் ஸ்பெஷலிஸ்ட்" இல்லை!
மாறாக 'கோப்புகளில் ஊறிப்போனஅரசாங்க உயரதிகாரிகள்.

இவர்களின் தடித்த தோல்களுக்கு நாம் மார்க்கட்டை விட்டு 
வெளியேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது மார்க்கட்டை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணரவே ஆண்டுகள் பல தேவைப்பட்டது!

CMD முதல் GM  வரை எவரும் BSNL-ஆட்கள் இல்லை!  இவர்களுக்கு நிறுவன வளர்ச்சியில் என்ன அக்கறை இருக்க முடியும்? 'விதுரன்'  போல வயிற்றுக்கு BSNL -ஐயும்,  விசுவாசத்தினை தனியாரிடமும் வைத்திருந் தார்கள். 

இவர்களுக்கு மார்க்கட் நுட்பங்களும்-அதன் மேலாண்மையும் பிடிபடவே இல்லை!

எதற்காக BSNL ஆக மாற்றப்பட்டோமோஅந்த நோக்கமே ஆட்சியாளர் களாலும்,  அதிகார வர்க்கத்தாலும் தோற்கடிக்கப்பட்டது. 

முடிவுகள் எடுப்பதில்-

டெண்டர்கள் விடுவதில்-  

வியாபார யுக்திகள் வகுப்பதில்-  

திட்டமிடுதலில் -

இருக்கும் Infra structure களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதில்  

-என அனைத்திலும் பின் தங்கினோம்.

நமது "ரெட் டேப்பிஸம்", ஊழல், ஊதாரித்தனம், பொறுப்பின்மை, குளறுபடியான திட்டங்கள்  - போன்றவை யாவும் நாம் "போட்டிகள் நிறைந்த சந்தைக் களத்தில்"  தோற்பதற்கு காரணமாயிற்று.

அனைத்து மட்டத்திலும் நமது பணிக் கலாச்சாரம் போட்டி நிலவும் சூழ் நிலையினை எதிர் கொள்ள போதுமானதாக இல்லை.

விளைவு...? 

BSNL மார்க்கட் ஷேர் (cell phone market) பதினைந்து சதவிகிதத்திற்கு வந்து விட்டது.

MTNL-மார்க்கட் ஷேர்  சொல்வதற்கே  மிகவும் சங்கடமாக உள்ளது! ஒரு சதத்திற்கும் கீழே!

இப்படியே கையாலாகாதவன் போல புலம்பப் போகிறோமா இல்லை
இல்லை நிலமைகளை திருப்பிப் போட முயற்சிக்கப் போகிறோமா?

காலம் கடந்து போய்விடவில்லை!

முதலில் நம்மால் முடியும் என நம்புவோம்!

150 ஆண்டுகளாக தொலைபேசி சேவை அளித்து வந்த நமக்கு
நேற்று வந்த கம்பெனிகளின் போட்டியினை சமாளிக்கத்தெரியாதா?
வேறு எல்லோரையும் விட நாம் மக்களை நன்கு அறிந்தவர்கள் அல்லவா?

நாம் நமது வல்லமைகளை நம்ப மறுக்கிறோம்.
நம்மாலும் செய்து காட்டமுடியும் என்பதை நம்ப வேண்டும்
மக்கள் இன்னமும் நம்மை விரும்புகிறார்கள்!

நாம்  உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் : 

BSNL - நிர்வாகத்தில் அரசியல் மற்றும் -மேல் மட்ட அதிகாரிகள் 
குறுக்கீடுகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்!

ITS -கள்  உள்ளே வரவேண்டும்-இல்லையனில், அவர்கள் மத்திய அரசாங்கத் திற்கே   திரும்பப் போய் தங்களது 'திறமை' களை காட்டட்டும்!

CMD -யாக நிபுணத்துவம் மிக்க - மார்க்கட் பொருளாதாரம் தெரிந்த, BSNL -க்கு விசுவாசமான  நபரை அமர்த்த வேண்டும்!

தனியார் நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்பட வேண்டும்!

அனைத்து நிலையிலான அதிகாரிகளும்-தொழிலாளர்களும் தங்களது  பணிக் காலாச்சாரத்தினை,  தற்காலத்தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். BSNL- ன் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.

BSNL -லிடமிருந்து மத்திய அரசு பெற்ற ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் திரும்ப அளிக்கப்பட வெண்டும். நீக்கப்பட்ட ADC கட்டணங்கள், வெளி நாடுகளுக்கான கால்களின் கட்டனங்கள் BSNL -க்கு பாதகமில்லாத வகையில் முறைப்படுத்தப் படவேண்டும்! நமக்கு கொடுக்கப் படாத 7500 கோடிகளுக்கு நாம் செலுத்தி வரும் 14.5% அநியாய வட்டியினை ரத்து செய்ய வேண்டும்! இந்த கொடுக்கப் படாத கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக BSNL சொல்வதை, DOT ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.  குறைந்த பட்சமாக இதைச் செய்தாலே நமது நட்டக் கணக்குகள் குறையும்.

காலத்திற்கேற்ற வியாபார தந்திரங்களை அனுசரிக்க வேண்டும்!

அடுத்த 'மே' தினத்தில் நமது "மார்க்கட் ஷேரினை" குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்திக் காட்ட வேண்டும்!

இதற்காக தேவைப்பட்டால் 'போராடவும்'  தயாராக வேண்டும்!

இதுவே இந்த "மேதினத்தில்"  நாம் மேற்கொள்ளவிருக்கும் சூளுரை!

அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் மேதின வாழ்த்துக்கள்!!