நீரின்றியும் பெற்றோரின்றியும் உலகு அமைவதில்லை!!
அம்மாக்கள் லெக்சர்கள் கொடுப்பதில்லை;
அனுசரணையான போலி வார்த்தைகள் பேசுவதில்லை.
வாரிசுகள் பற்றி கர்வம் கொள்வதுமில்லை.
எல்லா உயர்விற்கும் காரணமாக இருப்பார்கள்;
ஆனாலும் அமைதியானவர்கள்.
கலங்கரை விளக்குகள் வழிகாட்டும்;
தனக்குத்தானே வெளிச்சம் அடித்துக் கொள்வதில்லை!
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்”
அந்த அன்னையர்க்கு
நல்வாழ்த்துகள்!