Sunday, May 10, 2026

Mother's day

 நீரின்றியும் பெற்றோரின்றியும் உலகு அமைவதில்லை!!


அம்மாக்கள் லெக்சர்கள் கொடுப்பதில்லை;

அனுசரணையான போலி வார்த்தைகள் பேசுவதில்லை.

வாரிசுகள் பற்றி கர்வம் கொள்வதுமில்லை.


எல்லா உயர்விற்கும் காரணமாக இருப்பார்கள்;

ஆனாலும் அமைதியானவர்கள்.


கலங்கரை விளக்குகள் வழிகாட்டும்;

தனக்குத்தானே வெளிச்சம் அடித்துக் கொள்வதில்லை!


“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்”

அந்த அன்னையர்க்கு

 நல்வாழ்த்துகள்!

No comments:

Post a Comment