இளமைக் காலங்களில், இடது சாரி சித்தாந்தங்களினால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது. 'இழக்க அடிமைச் சங்கலிகள், பெறுவதற்கு பொற்காலம்' என்றால் யார்தான் மயங்க மாட்டார்கள்?
மெல்ல மெல்ல, கண்ணோட்டம் மாறிப்போய் விட்டது.
கொள்கை மோதல் மறக்கடிக்கப் பட்டு, ஈர்ப்பு அரசியலுக்குள் தள்ளப் பட்டு விட்டனர்.
“எது சரி? யார் சரி?” என்ற மோதல் தேவை இல்லை!
யார் மக்கள் மனதில் பிம்பத்தை உருவாக்க முடியும் என்றாகிவிட்டது.
சித்தாந்த வேறுபாடு தேவையற்றது என்பது விநோதம்.
நடப்பது சூழ்நிலைக்கேற்ப நடக்கும் வணிக அரசியல்.
தலைவர்கள் பிம்பங்களே (Brands).; கட்சிகள் இயக்கங்கள் அல்ல, மற்றும் ஒரு மேடை (Platforms);
தொண்டர்கள் உறுப்பினர்கள் அல்ல; லைக்கர்கள் (like); மக்கள், வாக்காளர்கள் அல்ல, ட்ரெண்ட் ஃபாலோயர்கள்.
அவர்களின் சிந்தனையைத் தூண்டும் அவசியமே இல்லை.
Data க்களும் AI க்களும் மக்களை, வடிவமைத்து உணர்ச்சியமாக்கு கின்றன. .
ஒரு வணிக நிறுவனம் சந்தையை கைப்பற்ற திட்டமிடுவது போல,
இன்றைய கட்சிகள் தரவு சேகரிப்பு,
உணர்ச்சி தூண்டல், (Emotional Targeting), மனப்பிம்ப உருவாக்கம் (Perception Building), போக்கு இயக்கம் (Trend Engineering), , கேலிச்சித்திர உளவியல் (Meme Psychology), (Image Calibration செய்கின்றனர் .
யார் உண்மையை பேசுகிறார்கள் என்பது லட்சியமே அல்ல. மக்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்தினாலே போதும்.
இவை, ஜனநாயகத்தின் புதிய வடிவமோ, பரிணாமமோ அல்ல;
இணையக் உளவியல் ஆட்சி (Digital Era Psychological Governance) மட்டுமே!
முரண்பாடுடைை சித்தாந்திகள், சண்டையிட வேண்டாம்.
கட்டிப் புரண்டு இசைந்து போகிறார்கள். Courtesy வேறு; நீர்த்துப் போதல் வேறு.
No comments:
Post a Comment