Monday, March 5, 2018

விஜய் டி.வி

சிலநாட்கள் முன், நண்பரொருவர் இல்லத்திற்கு சென்ற வேளையில், விஜய் டி.வி யில், நிகழ்ச்சியொன்றைக்  காண நேர்ந்தது.

கைத்தறிப்  பட்டுச்சேலை  நெசவு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவர், நசிந்துவரும்  கைத்தறித் தொழில் பற்றி உண்மையிலேயே நெகிழ்ச்சியான நாட்டுப்புறப் பாடலொன்றைப் பாடினார்.

விஜய் டி.வி தனக்கே உரிய பகட்டுடனும், டிராமாவுடனும் அதை ஒளிபரப்பியது! வழக்கம் போல விஐபிக்கள்  வசனங்களை உதிர்த்தனர். கண்ணீர் சிந்தினர். சோக இசை ஓடியது!

இந் நிகழ்ச்சியின் நாடகங்கள் ஒரு புறமிருக்க, கைத்தறியினால் மட்டுமே,  நாட்டின் துணித்  தேவைகள், விரும்பும் டிசைன்கள்,  தேர்வுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது சாத்தியமா  என்ற புராதன கேள்வி எழும்பியது!

பல தொழில்கள், தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக வழக்கொழிந்து போயிற்று. தந்திச்  சேவைஅளித்தோர், சுவர்களில் விளம்பரம் செய்வோர்/ஓவியம் வரைவோர், அச்சு கோர்ப்போர், கைத்தறி செய்வோர்...... என எண்ணற்றோர்  தங்களது தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு  தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.

விடாமல், தாங்கள் அறிந்திருக்கும் வழக்கொழிந்த  தொழில்களையே  புரிவோர் மீது அனுதாபம் கொள்வதா  அல்லது கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல, தங்களைத் தகவமைத்துக் கொள்ளாத இவர்கள் குறித்து வருந்துவதா எனப் புரியவில்லை!

காலத்தைப் பின்னோக்கித்  செலுத்துவது சாத்தியமானதல்ல; நவீனமயம்  எவராலும் புறக்கணிக்கணிக்கக் கூடியதே அல்ல! வளர்ந்து வரும் மக்கள் தொகையின் பகாசுர  தேவைகளை இயந்திரங்களின் துணையின்றி  பூர்த்தி செய்வது சாத்தியமல்ல!

 எனினும் புராதனத்  தொழில் புரிவோரின்  உற்பத்தியை Antique என்ற வகையில், விலை அதிகமாயினும், இயன்றவர்கள்  வாங்குவது அவர்களது ஜீவனத்திற்கு உதவக் கூடும்!! கோபிநாத் மட்டுமே,  சரியாக core Point ஐப் பிடித்தார்.

தொ.கா யினைப்  பார்ப்பதை நிறுத்தியது தவறோ  என்ன எண்ணம் அவ்வப்போது தோன்றும்! விஜயின்  ஸ்டேஜ்  ஷோவைப்  பார்த்தபின்  தொ.கா.பெ யை மூடியது  தவறெனத் தோன்றவில்லை!

Sunday, March 4, 2018

ஸ்ரீதேவி

ஶீதேவிக்கு இரங்கற்பா பாடும் சமுதாயம், எல்லையில் உயிரிழக்கும் வீரர்களைப் பற்றிக் கவலைப் படிவதில்லை என்ற 'கவலையை' சமூக வலைத் தளங்களில் காண்கிறேன்.
எல்லா இறப்பும், ஶீதேவி உட்பட, இரங்கலுக் குரியதே! ஶீதேவியின் மறைவு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இயல்பான ஒன்று!
இதையும் சோல்ஜர்ஸையும் ஒப்பிடுவது சரியா எனத் தோன்றவில்லை!
எனது கவலை வேறு!
ஒரு ஜவானின் உயிர் எளிதில் இழக்கக் கூடிய ஒன்றல்ல! ஒரு கேப்டனை உருவாக்க ஏகமாகச் செலவிடுகிறோம்! ஏராளமான உழைப்பு, பயிற்சி, அனுபவம், தியாகம் எல்லாம் பின்னால் இருக்கிறது!
எல்லையில் ஒரு வீரனை இழக்கிறோம் என்றால், அதற்கு விலையாக எதிரி ஏகப்பட்ட உயிர்களைக் கொடுத்திருக்க வேண்டும்! ஒரு அமெரிக்க, ருஷ்ய வீரரின் உயிரை எளிதாக எடுத்துவிட முடியாது; எந்த வகையான கடினச் சூழலிலும்!
ஆனால் இங்கே நிலைமை வேறு வகையாக இருக்கிறது! அடிக்கடி, நம் வீரர்கள் எல்லையில் உயிரை விடுகிறார்கள். அந்தத் தியாகத்திற்கு மரியாதை செலுத்து கிறோம்; இரங்கல் தெரிவிக்கிறோம் என்பது வேறு விஷயம்.
அதெப்படி இந்திய வீரர்களை just like that கொல்ல முடிகிறது?
நமது மேஜர்கள் இதுகுறித்து சிந்திப்பார்கள், strategy யை மாற்றியமைப்பார்கள் என நம்புவோம்....

Jio


BSNL வருவதற்கு முன்னால், தனியார் அலைபேசி   நிறுவனங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே,  நிமிடத்திற்கு  பத்து ரூபாய் வசூலித்த காலமெல்லாம் உண்டு. BSNL அலை பேசிச் சேவையை அளிக்க, அனுமதி மறுத்த அரசாங்கம், பல ஆண்டுகளுக்குப்பின்,  DoT அதிகாரிகள் முன்முயற்சியெடுத்ததால்,   அனுமதித்தது.
எடுத்த எடுப்பில், BSNL  நிமிடத்திற்கு  ஒரு ரூபாய்தான் கட்டணம் என ஆரம்பித்ததால், வேறு வழியின்றி தனியார் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைக்க ஆரம்பித்தன. அந்த கட்டணம்தான் உண்மையானது. அதனால்தான் அனைத்து நிறுவணங்களும் தாக்குப்பிடிக்க முடிந்த்து. தனியாரின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று தொலைத் தொடர்புத் துறையில், மீண்டும்  பழைய தணியார்களின் ஏகபோக கொள்ளைக்கு, நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அலைபேசிச் சேவையில், சமீப ஆண்டுகளில், இன்டர்னெட் சேவை பிரதானமாகிப்போய், வாய்ஸ் கால்ஸ்களை (Voice calls) இலவசமாகவே கொடுக்கும் காலம் வந்துவிட்டது.  VoIP (Voice over internet protocol) அறிமுகப்படுத்தப்பட்டபின் மலிவான குரல்சேவை சாத்தியமாயிற்று.
இந்த அதீத போட்டியின் காரணமாக, ஜியோவின் இலவசங்களைச் சமாளிக்க இயலாமல், நட்டமாகிப் போய், ஏர்செல் திவாலாகி விட்டது.
ஏர்செல்லின் உள்அரசியல் ஒருபுறம் இருக்க, இது இந்திய தொலைத் தொடர்பு வரலாற்றில், ஏர்செல்லின் மறைவு, தொலைதொடர்பில், ஜியோவின் ஏகபோக ஆட்சியின் துவக்கமாகவே கருதுகிறேன்.
முன்னாள் BSNL ஊழியன் என்பதற்காக இதைக் கூறவில்லை. தொலை தொடர்பில் ஏகபோகம் ஆபத்தானது மட்டுமல்ல;  பொதுத் துறை நிறுவனமான BSNL காணாமற் போவது மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல என்பதால் கூறிகிறேன்.
ஒருவருடம் இலவசமாகவே பிராட்பேண்ட் சேவையை ஜியோ அளித்தது; இது வரை நாம் கண்டிராத வேகத்தில். 4ஜி தொழில் நுட்பத்தின் காரணமாக இந்த வேகம் சாத்தியமாயிற்று.
அதிவிரைவு இண்டர்னெட் சேவையை, இலவசமாக அளித்ததால், இதுவரை உலகம் கண்டிராத வளர்ச்சி விகிதத்தை  ஜயோ கண்டது;  கூடவே சக தொலை தொடர்பு கம்பெணிகள் நஷ்டத்தின் காரணமாக  லாப விகிதங்கள் கடுமையாக குறைந்தது.  நட்டத்தைத் தாங்க முடியாத ஏர்செல், திவாலாக உள்ளது. வோடஃபோண் தடுமாறிக் கொண்டுள்ளது. ஏர்டெல்லின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. வருமாணம் பாதிப்பு. அதே நிலைமைதான் ஐடியாவிற்கும், BSNL க்கும். இது எந்த வகையிலும் வரவேற்கத்தக்க நிகழ்வல்ல. இன்று ஏர்செல்லுக்கு நிகழ்ந்தது  நாளை ஏர்டெல்லுக்கும் மற்ற நிறுவனகளுக்கும் நிகழலாம்.
எல்லா நிறுவணங்களையும் ஒழித்தபின், ஜியோ ஏகபோகமாகி, பின் அது வைத்ததுதான் கட்டணம் என்றாகிவிடும்.
அந்தக் காலத்தில், அரசாங்க டெண்டர்களில், ஏகபோகம் எதிலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு,  ஒரு விதிமுறை உண்டு. Unreasonably low tenders will not be accepted என.
ஜியோ விவகாரத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இலவசமாக சேவையளித்து, சக போட்டியாளர்களை ஒழித்துக்கட்டும் முயற்சிக்கு TRAI (தொலைதொடர்பு  ஒழுங்குமுறை ஆனையம்) துணைபோவது போல் தெரிகிறது.  இலவச சேவையளிக்க ஏன் TRAI ஒப்புக் கொள்ள வேண்டும்? ஜியோவின் இலவசங்கள் சக நிறுவணங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியென் TRAI க்குத் தெரியாதா?  இன்று இலவசங்களுக்கு தலையாட்டும் டிராய், நாளை, கடுமையான கட்டணங்களுக்கு தடைவிதிக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
ஜியோவிற்கு இந்த அளவு இலவச சேவை அளிக்க முடிந்தது எப்படி?  எந்த வங்கி, எந்த அளவு ஜியோவிற்கு கடன் கொடுத்துள்ளது? குறுகிய காலத்தில் இந்த அளவு முதலீட்டை யார் செய்தது? மாதம் பத்தாயிரம் டவர்களுக்கு மேல் நிறுவுவது அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? இதுபற்றி மக்களுக்குத் அறியப்படுத்த வேண்டாமா?
அதே சமயம், இது நாள்வரை BSNL 4ஜி சேவை அளிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லையே,, ஏன்?  அந்த நிறுவனத்திற்கு, 4ஜி சேவையை அளிக்க தேவையான மூலதனத்தை அரசாங்கம் ஏன் தர மறுக்கிறது?
தொலை தொடர்புத் துறையில் நடப்பன எதுவும் சரியெனப் படவில்லை!
எந்தத்துறையிலும் ஏகபோகம் என்பது, நாட்டிற்கும் மக்களுக்கும் கேடு!