Sunday, January 26, 2014

ஜெய் ஹோ.. (ஹிந்தித் திரைப்பட விமரிசனம்)

இன்று ‘Jai Ho’ என்ற புதிய ஹிந்தி திரைப்படம் காண நேர்ந்தது. சிரஞ்சீவி தெலுங்கில் நடித்து வெளியான ‘ஸ்டாலின்’ என்ற திரைப்படத்தின் மறுபதிப்பாம்.

திரை விமர்சன்ம் எழுதுவதற்கு முதலில் அது திரைப்படமாக இருக்கவேண்டும் அல்லவா? JAI HO திரைப்படமே அல்ல! இது ஒரு கார்ட்டூன் போல இருக்கிறது.

கதை?  நகைப்புக்கிடமான, பார்ப்பவர்களை யெல்லாம் கிறுக்கர்கள் என்ற நினைவில் தொடுக்கப்பட்ட கதை. கதையில் ஆழமும் இல்லை! தொடர்ச்சியும் இல்லை!

கதை நாயகன்.  சல்மான் கான். நாயகி: டெய்ஸி ஷா. இயக்கம் Sohail Khan.

வழக்கமான அரசியல் தாதா-மற்றும்  கோபமான, அடித்து நொறுக்கும் இளைஞனாக சல்மான் கான். இது போதாதா கதை பண்ண?

ராணுவ அதிகாரியாக இருந்தவராம் சல்மான் கான். நான் படம் பார்த்த திரையரங்கு ராணுவத்திற்கு சொந்தமானது. "டேங்க்கை" யெல்லம் வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார்கள்.  படம் பார்க்க வந்த  ராணுவ அதிகாரிகள் சிரிக்கின்றனர்.

படம் முழுக்க வில்லன்கள் இறைந்து கிடக்கிறார்கள். யாரிடம் எப்போது எவவிதம்,  எதற்காக சல்மான்கான் சண்டை போடுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆரம்பித்த சண்டை எப்போது முடியும் என்றும் புரியாது. அப்பாடா.. ஒருவழியாய் சண்டை முடிந்தது என நிமிர்ந்து உட்கார நினைக்கும் பொழுது, மீண்டும் அடிக்க ஆரம்பிக்கிறார்.

இரும்புத் தண்டவாளம், கார், லாரி எல்லாவாற்றையும் சுண்டிவிரலால் தூக்கி அடிக்கும் பராக்ரமசாலியாக சல்மான் கான்.  
பயங்கரமான ஆந்திர மசாலா. நெடி தாங்கவில்லை.

சூப்பர் ஹீரோ சல்மான் கான், உறுமுகிறார், சீறுகிறார், அனல் பறக்க வசனம் பேசுகிறார், ஓயாமல்-சளைக்காமல் சண்டைபோடுகிறார், நடுவே கண்ணீர் விடுகிறார், காதல் பண்ணுகிறார், ஹெலிக்காப்டர் முதல்-மோட்டர்பைக், சைக்கிள் வரை ஓட்டுகிறார். சகல கலைகளும் அவருக்கு அத்துப்படி.

படம் முழுவதும் ஏகப்பட்ட  நட்சத்திரங்கள். கும்பல்-கும்பலாக, திருவிழா போல வந்து போகிறார்கள்.  நம்ம ஊர் ஜெனிலியா உட்பட.

பாடல்கள் எல்லம் தமிழில் எப்போதொ கேட்ட மாதிரியே இருக்கிறது? அங்கும் ஒரு தேவா இருக்கிறார் போல!


சரியான கொட்டாவி படம்.

No comments:

Post a Comment