ஜாலி பாய்
(ஜாலிபாய் போகும்வழியில்...)
(ஜாலிபாய் போகும்வழியில்...)
(ஜாலிபாய் போகும்வழியில்...)
(ஜாலிபாய் போகும்வழியில்...)
(கண்ணாடிப் பட கின் ஊடே.....)
(கண்ணாடிப் பட கின் ஊடே.....)
(கண்ணாடிப் பட கின் ஊடே.....)
போர்ட்பிளேயரிலிருந்து 29 கி.மி தொலைவில் இருப்பது, “மகாத்மா காந்தி மரைன் நேஷனல்.பார்க்”
பார்க் என்றதும் ஏதோ ஒரு தரையில் இருக்கும
பார்க்கை நினைத்துக் கொள்ளக் கூடாது. 281 சதுர கி.மீக்கு விரிந்து படர்ந்திருக்கும்,தீவுகளும் கடலும் சூழந்த் இடத்திற்கு பெயர்
இது. உலகில் இதைவிட பொருத்தமான, அழகான்
இடம் உண்டா என சந்தேகமாயிருக்கிறது. இந்தஇடத்திற்குச் செல்லும் வழியே பேரழகு. தினம் தோறும் இங்குள்ள கடலின் நீரைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு 'டிஸ்டில்டு வாட்டரினால் நிரப்பி விடிட்டதைப்போல அப்படி ஒரு தெள்ளத்தெளிவான நீர். கிறங்கடிகடிக்கும் நீலம். ஆஹா..........
இங்கு, Jolly Buoy தீவு
மற்றும் ரெட் ஸ்கின் தீவு மிக முக்கியமானவை. சீசனுக்குத்தகுந்தாற்போல,
இரண்டு தீவுகளுக்கும் மாறி, மாறி அழைத்துப் போகிறார்கள். டிக்கட் ரூ.800/-
அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தீவுகளைச் சுற்றிக்
காட்ட கண்ணாடி படகுகளில் (அடிப்பகுதி) அழைத்துச் செல்கிறார்கள். கால்களுக்கடியில் வண்ண வண்ண மீன்கள், விதவிதமான கடல் வாழ்
உயிரைனங்கள், வருணிக்க இயலாத வகையில், கற்பனைக்கும் எட்டாத வடிவங்களில்,
நிறங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் கோரல் ரீஃப்கள்.
வாய் பிளந்து பார்த்தோம் என்பதைவிட சொல்வதற்கு ஒன்றும்
தோன்றவில்லை. ஒரு மணி நேரம் கண்ணாடிப்
படகு சவாரி ஒரு நிமிடமாய் மறைந்து போனது. இயற்கை, இதைவிட பெரிய கொடையை
இந்தியாவிற்கு வழங்கக் கூடுமா? நான்
எப்படி வருணித்தாலும், அவை யாவும் இத்தீவின் பேரழகிற்கு நியாயாம் செய்ததாகாது.
நேரில் பார்த்து அந்த சந்தோஷ கணங்களை நினைவில் நிறுத்திக் கொள்வது மட்டுமே
சாத்தியம். ஜாலி பாய் செல்லாமல் அந்தமான்
பயணம் என்பது இனிப்பு இல்லாத விருந்து என்றால் எப்படியோ, அப்படியே!
செல்லுலர் சிறைச்சாலை
சிறை வாசல்
சிறையின் மாதிரி வடிவம்
அணையா தியாக தீபம்.
ஒலி - ஒளி காட்சி அரங்கு
(பின்னணியில் சிறைச் சாலை)
(சித்தரவதைக்கூடம்)
(சிறையின் ஒருபக்கம்)
(மரணக்கிணறு)
(ஒரு செல்)
(தூக்கிலடப்படும் மின்னால் இறுதிசடங்கு நடக்கும் இடம்)
(பணிக் கூடம்)
(வீ ர சவர்க்கார் அடைக்கப்பட்டிருந்த செல்)
(நம்ம ஊரைப்பற்றி)
உலகில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சிறைச்சாலையும் ஓராயிரம் கதை பேசும்.ஒவ்வொரு சிறைக்கதவும் வாயிருந்தால் கைதிகளின்
அளப்பரிய சோகக் கதைகளை கதறக் கதறச் சொல்லும்.
மறக்கடிக்கப்படும் தேச வரலாறுகளையும், கைதிகளின் தியாகங்களையும்
சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனாலும், அந்தமான் சிறை ஏற்படுத்திய தாக்கம், பாதிப்பு போல இன்னொறு சிறை ஏற்பதுமா என்பது சந்தேகமே!
அந்தமான் செல்லுலார் சிறைச் சாலை, மூன்று மாடிகளோடு, ஏழு திக்குகளில், ஆக்டோபஸைப்போல கிளை பரப்பி நிற்கிறது.
அமிர்தசரஸூக்கு போயிருந்த பொழுது, “ஜாலியன் வாலாபாக்
படுகொலை” நிகழ்ந்த இடத்தை தரிசிக்கும் பொழுது, எவ்விதமான உணர்வு, ஆத்திரம், தேச
உணர்வு பொங்கியெழுந்ததோ அதே போன்ற உணர்வு இங்கும்,
ஏதோ, கடையில் மிட்டாய் வாங்கி வந்ததைப் போல “காந்திஜி”
சுதந்திரம் "வாங்கித் தந்தார்" என குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோமே; இதைவிட தேசத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை
அவமானப் படுத்த முடியாது. நமது சுதந்திரத்திற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகம் இருக்கிறது. போற்றப்படாத,
தியாகிகள்-போராளிகள் இருக்கின்றார்கள். வரலாற்றினால் மறக்கப்பட்ட தலைவர்கள்
இருக்கிறார்கள். சித்திரவதைகள் இருக்கின்றன.
இங்கு அடைக்கப்பட்டவர்கள் எல்லாம், திருடிவிட்டோ,
கொலை செய்துவிட்டோ வந்தவர்களா என்ன?
இந்த தேசத்தின் சுதந்திரக் கனலை ஏற்றி வைத்த ஒரே
பாவத்திற்காக அடிபட்டு, உதைபட்டு, வார்த்தைகளால் சொல்ல முடியாத சித்திரவதைகள்
அனுபவித்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்.
சித்திரவதை என்றால், அப்படி ஒரு சித்திரவதை! பதிவு
செய்யப்பட்ட அடி உதைகளே இப்படியென்றால் உண்மையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?
பீரங்கியின் வாயில் கைதிகளை கட்டிவைத்து வெடித்திருக்கிறார்கள் இங்கிலாந்தினர்.
மாடு கூட தொடர்ந்து வேலை செய்யாது! அதைவிடக் கேவலமாக,
நமது தியாகிகளை கைகளை கட்டிப்போட்டு செக்கு இழுக்க வைத்திருக்கிறார்கள்.
பக்கத்திலேயே, ஒரே நேரத்தில் மூன்று பேரை
தூக்கிலிடும் மரணக்கினறு அமைத்திருக்கிறார்கள். இந்த கேலோவினை, மரணைவிதிக்கப்பட்ட
கைதிகள் பார்க்கும்படி அமைத்திருக்கிறார்கள். மரணக்கிணறின் வாசலில்
தூக்கிலிடப்படுவதற்கு முன் இறுதிச் சடங்குகளை, உயிருடன் இருக்கும் பொழுதே
செய்வார்களாம்.
எனன வக்கிரம் இது?
மாட்டுக்குப் பதிலாக கைதிகளைக் கட்டிப்போட்டு செக்கிழுக்க வைத்தது தொடங்கி, தலைகீழாக நிற்க வைத்து அடித்தே கொன்றது வரை பல்வேறு சித்திரவதைகள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டன.
கிரிமினல்களைக் காட்டிலும் அரசியல் கைதிகளே அதிகம் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். மிதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆரோக்கியத்தை இழந்து, உணவை இழந்து, உணர்வை இழந்து அவதிப்பட்டபோதும், சுதந்தர நெருப்பை அணையவிடாமல் காத்தவர்கள் பலர்.
நமது தேசவிடுதலைப் போராட்ட தியாகிகளின் கதறலும், மரண ஓலமும் இன்னமும் அதன் நெடிதுயர்ந்த சுவர்களில் பட்டு
எதிரொலிக்கிறது.
நடந்த வரலாற்றுக் கொடுமைகளுக்கெல்லாம் மௌன சாட்சியாக, இன்னனும் நின்று
கொண்டிருக்கிறது அந்தமான் செல்லுலர் சிறைச் சாலையும் அதன் வாயிலில் நிற்கும்
பீப்பல் மரமும்.
நெஞ்சில் கொஞ்சமேமேனும் ஈரமும், தேசப்பற்றும் இருந்தால், சிறைச்சாலயில்
மண்ணை மிதித்த உடன் மெய்சிலிர்க்க வேண்டும்.
அந்தமான் சிறைச்சாலையின் சுறுக்கமான வரலாற்றை, மாலை 6.15-க்கும்,
7.15க்கும் என, இரண்டு ஒலி-ஒளிகாட்சிகளாக வழங்குகிறார்கள். ஆங்கில காட்சி
எப்பொழுது என்று கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில் புரியாத ஹிந்தி ஷோவில்
மாட்டிக் கொள்வீர்கள்.
எவரேனும் அந்தமானுக்கு செல்வதாயிருந்தால், உங்கள் குழந்தைகளை இந்த சிறைச்
சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த தேசத்தின் மகத்தான தியாகளை அவர்கள்
கொஞ்சமாவது உணரட்டும்-தெரிந்து கொள்ளட்டும்.
வீர்சவர்கரும்-நேத்தாஜியும் மெயின் லேண்டில் மறக்கடிக்கப் பட்டவர்கள்.
இங்கே சிறையிலடைக்கப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை, தனியாக ஒரு அரங்கில் அமைத்திருக்கிறார்கள்.
பாருங்கள். அவர்கள் இழுத்த செக்குகளைக் கூட காட்சிப் படுத்தியுள்ளனர்.
ஒலி-ஒளி முடிந்து வெளிவரும் பொழுது கனத்த நெஞ்சோடுதான் வருகிறோம்.
எந்த தேசம், நாட்டின் வரலாற்றை
மறக்கிறதோ, எந்த தேசம் சுதந்திரப் போராட்ட தியாகிகளை மறந்து போகிறதோ, அவை
யாவும்.... (வேண்டாம்.. நாமே நம்மை
வசைபாடிக் கொள்ளக் கூடாது.
-
