Thursday, October 13, 2011

தி ஆல்கெமிஸ்ட்



இந்த வாரம் Paulo Coelho (பாலோ கோலோ) எழுதிய “தி ஆல்கெமிஸ்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு  நேர்ந்தது.

ஒரு ஆடு மேய்க்கும் நாடோடிப் பையனை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கும் நாவல்.  இப் புத்தகம், வாசித்து முடிக்கும் பொழுதுதான் இது ஆன்மீகப் புத்தக வகையைச் சார்ந்தது என உணரமுடியும்.

இவர், மதத்தினையும் ஆன்மீகத்தினையும் பிரித்துப் பார்க்கச் சொல் கிறார்.   நல்ல அணுகுமுறை.


அடிப்படியயில் கதாசிரியர் ஒரு கத்தோலிக்க கிறித்துவர். கதையில்  இஸ்லாம் மதத்தினை தொட்டுச் செல்கிறார்.

இவர் சொல்லும் கருத்து ‘நமது வேதங்களும், உபநிடதங்களும் மிக விளக்கமாக, அழுத்தமாகச் சொல்லும் ‘அத்வைதத்தினை’ முன் வைக்கிறது.
மிக எளிமையான ஆங்கிலம். எடுத்தால் வைக்கமுடியாத வகையில், துடிப்புடன் கதையை நகர்த்திச் செல்கிறார். 

இவர் அடிக்கடி இக்கதையில் பயன்படுத்தும் ‘சகுனம்’, ஆன்மா,மரணத்திற்குப் பிந்திய வாழ்க்கை, உலகின் ஆன்மா போன்ற பல்வேறு வார்த்தைகள், நமது இந்துமதம் விஸ்த்தாரமாகப் பேசும் ‘மாயை’, ஜீவன், பரமாத்மா, ஜகம் ஆகியவற்றில் அடங்குகிறது. சுவாரஸ்யமான புத்தகம்.
படித்துப் பாருங்கள் என சிபாரிசு செய்கிறேன். விலை ரூபாய். 200/-
(இப்புத்தகம் இளவயதினருக்கு பரிசளிக்க உகந்தது. ஆன்மிகத்தைத் தவிர்த்து, விடாமுயற்சி, லட்சியத்தினை விடாப்பிடியாக துரத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக)

Friday, October 7, 2011

தாஜ்மஹாலுக்கு ஆபத்து?


ஆண்டு தோறும், வெளி நாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளைக் கவரும், இந்தியாவின் சலவைக்கல் அதிசயமான “தாஜ்  தற்போது ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.

சில ஆண்டுகளாகவே, தாஜ்மஹாலுக்கு ஆபத்து என பலரும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.  அதாவது, மாசுபட்ட காற்று மற்றும் பாதிப்படைந்த சுற்றுச் சூழல் காரணமாக,  தாஜ் தனது எழிலினையும், பொலிவினையும்,  பளபளப்பினையும் இழந்து பழுப்பு நிறமாகி வருவதாகத்தான் சொல்லி வந்தனர்.

முன்பு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, அமெரிக்க ஜனாதிபதி திரு.கிளிண்டன் கூட தாஜ் பொலிவிழப்பதை ‘சலவைக்கல்லில் புற்று நோய்என வர்ணித்தார். நானே கூட 80-களில் பார்த்த தாஜுக்கும் தற்போதைய தாஜுக்கும் பளபளப்பில் உள்ள மாற்றத்தினை உணர முடிகிறது.

சென்ற வாரம், தாஜ் பொலிவினை இழப்பது மாத்திரமல்ல..... தாஜ் இடிந்துவிழும் ஆபத்தும் உள்ளது என அச்சுறுத்தினர், சில ஆராய்ச்சியாளர்கள்.  அப்படி என்னதான் தாஜுக்கு ஆபத்து நேர்கிறது?

கம்பீரமான, முண்ணூற்று ஐம்பத்தெட்டு வயதான, தாஜ்மஹால், சிதைந்து வரும் அஸ்த்திவாரம் காரணமாக, பலவீனமடைந்து வருகிறதாம். அஸ்த்தி வாரத்தினை பலப்படுத்தாவிடில் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் தாஜ் சிதைந்துவிடும் அபாயம்  நேர்ந்துவிடும் என அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, பளபளப்பினை இழந்து விட்ட, இக்கட்டிடத்தின் அஸ்த்திவாரம், கடினத்தன்மையை இழந்து வருவதாகவும், இற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக, சென்ற வருடமே, கம்பீரமான அதன் நான்கு மினார் களிலும், மத்திய மாடத்திலும் வெடிப்புகளின் ஆரம்பங்களை கண்டுள்ளனர்.

இந்த கட்டிடத்தின் அஸ்த்திவாரம், மரங்களினால் தாங்கப்படுகிறது. இந்த மரங்கள் நிலையாக,ஸ்திரமாக இருக்க தண்ணீர் தேவைபடுகிறது.  தாஜ் கட்டப்பட்ட காலத்தில் யமுனை ஆற்றில் (இந்த  நதிக் கரையில் தான் தாஜ் கட்டப் பட்டுள்ளது), எப்பொழுதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த்து.  இம்மாதிரி, யமுனை வரண்டுவிடும் என இக்கட்டிடத்தை கட்டும்போது, எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் தண்ணீர் இருக்கும், என்ற நிலையினைக் கொண்டே, தாஜின் அஸ்த்திவாரம் வடிவமைக்கப்பட்டு, கட்டிடம் எழுப்பப் பட்டுள்ளது. எனவே ஆறு வறண்டால், தாஜும் சேதமடையும்.  எனவேதான் தாஜின் ஆயுள் யமனை ஆற்றினை சார்ந்துள்ளது

ஆனால் தற்போது யமுனை ஆண்டில் பெரும்பகுதி வரண்டு கிடப்பதால், அஸ்திவாரம் பலவீனமாகி வருகிறது என்கிறார் புரொஃபஸர் ராம் நாத். 

சரித்திரவியலாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் வாதிகளும் ‘இனியும் காத்திருக்க நேரமில்லை... அழிவை எதிர் நோக்கியிருகும் இக்கட்டி டத்தினைக் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்கின்றனர்.

அவ்வாறு ஏதும் செய்யவில்லை எனில் இரண்டு முதல் ஐந்து ஆண்டிற்கும் தாஜினை முற்றிலுமாக இழந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர்.
உண்மை அப்படி இல்லை என்றால், கடந்த முப்பது ஆண்டுகளாகவே, யாரையும் அஸ்த்திவாரத்தினை ஆய்ந்து பார்க்க அனுமதிக்கப்படுவதில்லையே – ஏன்?  என வினவுகின்றனர் இவர்கள்.
எனவே அரசாங்கம், உடனடியாக, கட்டிடவியல் நிபுனர்களைக்கொண்டு, ஆய்வு செய்து, குற்றச்சாட்டு உண்மையா-இல்லையா என தெரிவிக்க வேண்டும். அப்படி ஆபத்து இருப்பது உண்மையானல், தேவையான பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செய்வார்களா? 
இல்லை, பற்றி எரியும் பிரச்சினைகளில் கூட கும்பகர்ண தூக்கம் போடும் மன்மோகன் அரசு (உம்-தெலுங்கான, மாவோயிஸ்ட் பிரச்சினைகள்) இதிலும் ஒரு குட்டித் தூக்கம் போடுவார்களா?
சோனியாகாந்தியின் சொந்த நாடான, இத்தாலியில் “பைசா நகர சாய்ந்த கோபுரத்தினை ஓரளவுக்கு நிலை நிறுத்தியுள்ளனரே...  அங்கேபோயாவது கேட்டுக் கொண்டு வரவேண்டியதுதானே?

Thursday, October 6, 2011

ஏன் தெலுங்கானா-?

தனித் தெலுங்கானா மாநிலம் கோரி, போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன.

இந்த போராட்டம் தற்போது திரு. சந்திரசேகர ராவினால் நடத்தப் பட்டுக் கொண்டிருந்தாலும், இக் கோரிக்கையின் பின்னால் வலுவான சரித்திர காரணங்கள் இருக்கின்றன.

தற்போதைய ஆந்திரா என்பது, தெலுங்கானா, ராயலசீமா,  கடற்கரை ஆந்திரா என்ற மூன்று பகுதிகளை உள்ள டக்கியது. 

இந்த மூன்று பகுதிகளில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால், “தெலுங்கானாஎன்று அழைக்கப்படும் பிரதேசம், எப்போதும் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததில்லை.

‘ராயலசீமா, ‘கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டுமே பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு, “மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட “சென்னை ராஜதானி” மாநிலத்தில் இணைக்கப் பட்டிருந்தன. (இந்த சென்னை ராஜதானியில் தமிழகமும் உண்டு)

தெலுங்கானா பகுதி,  ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. இந்தியா 1947-ல்,  விடுதலை அடைந்த பொழுது ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை. பாகிஸ்தானுடனும் இணைய விரும்ப வில்லை. மாறாக தனியான நாடாகவே இருக்க விரும்பினார். இன்னும் சொல்லப் போனால், இந்தியப் பகுதியிலிருந்து ஒரு பாதுகாப்பான வழியினைக் கூட கோரினார்.  ஆனால் இந்த சமஸ்த்தானத்து மக்கள், இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர்.

இந்தியாவுடன் இணைய மறுத்து, சண்டித்தனம் செய்த, இந்த ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தை, இந்திய ராணுவம்,  “ஆபரேஷன் போலோ மூலம் இந்தியாவுடன் இணைத்தது.  இது நடந்தது செப்டம்பர் 17, 1948 –ல். (இது போன்று பல இடங்கள் 1947-ல் இந்தியாவுடன் இணைக்கப் படவில்லை! கோவா, நமது அண்டைப் பகுதி புதுவை-ஆகியன உதாரணங்கள. அத்தகைய பகுதிகள் யாவும் நமது இராணுவத்தாலேயே கைப்பற்றபபட்டது) 

அப்போது தெலுங்கு பேசும்  மாவட்டங்களில், 9 தெலுங்கானாவிலும்,  12 சென்னை பிரெசிடென்ஸியிலும் இருந்தன. அதேபோல தெலுங்கு பேசும் ‘ஏனாம் பகுதி பிரெஞ்சு ஆதிக்கதில் இருந்த்து.

இந்தியாவுடன் தெலுங்கானா பகுதி (நிஜாம் ஆண்ட பகுதி)
இணைக்கப் பட்ட பொழுது, தெலுங்கானவுக்கு தனி மானில அந்தஸ்த்து அளிக்கப்படும் என அனைவராலும் உறுதி அளிக்கப் பட்டது. இதே போல "தனிமாநில" வாக்குறுதி பஞ்சாபிற்கும் வழங்கப்பட்டு, நெடிய போராட்டத் திற்குப் பின் தனி மாநிலமாக மாற்றப்பட்டது.(ஒருவர் 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்தார்)  அவை பஞ்சாப்-ஹரியானா.  இப்பொழுதும், இரண்டு மாநிலத் திற்கும் பொதுவான  தலைநகர் சண்டிகர். 
ஆனால் தெலுங்கானா மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப் படவே இல்லை.


பஞ்சாபில் பெரும்பகுதி ‘சீக்கியர்கள் இருந்ததாலும்(மொழி வேறு-வேறு), அவர்கள் விடாமல் போராடியதாலும் இது சாத்தியமாயிற்று.  


ஆனால் தெலுங்கானாவில் அப்படி ஒரு நிலைமை இல்லை. ஆந்திரம்-தெலுங்கான இருபகுதியினரும் தெலுங்கு பேசுபவர்களே!  மேலும், டிசம்பர், 1953 ல், மாநில சீரமைப்பு கமிஷன், தனித் “தெலுங்கானா மாநிலம் தேவையில்லை என தீர்மாணித்தது. ஏனெனில் அப்போது ‘மொழிவாரி மாநிலம் தான் ஆதாரமான விஷயமாக இருந்த்து. ஆனால் திரு. ஜவஹர்லால் நேரு உட்பட,  பல அகில இந்திய தலைவர்களும், ஒன்றுபட்ட அந்திராவிற்கு மன மொப்பி ஆதரவளிக்கவில்லை.
அச்சமயத்தில், தெலுங்கானா,  பொருளாதார ரீதியாஆந்திராவைவிட, பின் தங்கியிருந்தது. தெலுங்கானா பகுதி மக்கள், கல்வித்துறையில் முன்னேறியுள்ள ஆந்திரா பகுதியனர்,    (பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த்தால்) தங்களது வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வார்களோ என அஞ்சினர் 


மேலும் விவசாயத்துறையில், கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் பலனை, ஆந்திரர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுவிடுவார்களோ என பயந்தனர்.

(வாரங்கல், அடிலாபாத், கம்மம், மகபூப் நகர், நலகொண்டா, ரங்காரெட்டி மாவட்டம், கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், ஐதராபாத் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா)


அதனால், மானில சீரமைப்பு கமிஷன், ஒரு தனி மாநிலமாக 'தெலுங்கானா இருக்கலாம் என்றும் (1961 பொதுத் தேர்தலுக்குப் பின்), தெலுங்கான மாநில சட்ட சபையில் பெரும்பகுதி உறுப்பி னர்கள் ஒன்று பட்ட ஆந்திராவே தேவை என தீர்மாணமியற்றி்னால் அத்தகைய ஒன்று பட்ட ஆந்திராவை உருவாக்கலாம் என்ற கருத்தினை முன் வைத்த்து.
அபோதைய ஆந்திர முதல்வர் திரு. ராமகிருஷ்ன ராவ் அவர்கள், பெரும்பான்மையான  தெலுங்கான பகுதி மக்கள், இணைப்பிற்கு ஆதரவாக இல்லையென்றும், ஆனால் தாம் இணைப்பினையே ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். 


மேலும் நவம்பர்-25, 1955 அன்று தெலுங்கான பகுதி மக்களின் அனைத்து உரிமைகளும்  ‘பாதுகாக்கப்படும் என்று மாநில சட்ட சபையில் தீர்மாணம் நிறைவேற்றினார்.


அத்தீர்மானத்தின் படி, தெலுங்கான பகுதி சிறப்பு கவனம் கொள்ளும் பகுதியாகவும், அப்பகுதியின் ‘வளர்ச்சிக்கு தனிக் கவனம் கொள்ளப்படும் எனவும், அவர்களக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஒதுக்கீடு மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 


அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை, ஆந்திர காங்கிரஸ் ‘தாஜா செய்து,  ஒன்று பட்ட ஆந்திராவிற்கு பிப்ரவரி-20, 1956 அன்று, தெலுங்கானா தலைவர்களுக்கும், ஆந்திர தலைவர்கள் ஒப்பந்தம் போட்டனர்.  இந்த ஒப்பந்த்த்தின் அடிப்படையில், ஒன்று 
பட்ட ஆந்திரா நவம்பர்-1, 1956-ல் சட்ட பூர்வமக அமைக்கப் பட்டது. 
ஆனால் நிலைமை முழுவதும் சரியாக வில்லை. ஒப்பந்தம் தலைவர்களுக்குள் ஏற்பட்ட்தே ஒழிய கனிசமான மக்கள் ‘தனித் 
தெலுங்கானா கனவை மறக்கவில்லை.  தாங்கள் ‘வஞ்சிக்ப்பட்ட தாகவே உணர்ந்தனர். 


இதன் காரணமாக, டிசம்பர் 1968-ல், தற்போதும் போராட்டத்தில் 
‘துடிப்பாக இருக்கும், ஹைதராபாத்- உஸ்மானியா பல்கலைக் கழக மானவர்கள், வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா பகுதி மக்கள் ஏமாற்றப்படுவதாக ஒரு பேரணியினை நடத்தினர்.  ஆசிரியர்களும் இந்த பேரணிக்கு ஆதரவளித்தனர்.  போராட்டம், பிற தெலுங்கானா 
பகுதிகளுக்கும் பரவியது. 


1972 வரை நீடித்த இப்போராட்ட்த்தினை, காங்கிரஸ், ‘தன் வழியில் தீர்வு கண்ட்து!  அதாவது போராட்ட்த்தில் ‘தீவீரமாய் இருந்த “தெலுங்கான பிரஜா சமிதிகட்சியினை காங்கிரஸ் தன்னுடன் ‘இணைத்துக் கொண்ட்து.

1973-ல் தெலுங்கான பகுதிக்கு அளிக்கப் பட்டிருந்த சலுகைகளை (mulki rules) எதிர்த்து, ஆந்திர பகுதிகளில் ‘ஜெய் ஆந்திரா போராட்டம் துவங்கியது.  இதனால் இந்திய அரசு,  தெலுங்கானா தலைவர்களுடன் போட்டிருந்த 'ஜெண்டில்மேன்' அக்ரிமென்டினை தளர்த்தியது.  அதற்கு பதிலாக ஆறு பாயின்ட்கள்  ஃபார்முலாவினை முன் வைத்த்து 
(http://en.wikipedia.org/wiki/Telangana_movement#Six-Point_Formula_of_1973)
இதன் பின் நடந்தவை யாவும் ‘அரசியல் சித்து விளையாட்டுக்களே!.  பதவியினைப் பிடிப்பதற்காக, எப்படி வேண்டுமானலும் பேசி,  மக்களின்-மாணவர்களின், உணர்ச்சிகளை தூண்டிவிட்டு-ஓட்டு வேட்டையாடி காசு பார்க்கும் நமது அரசியல் வாதிகள், இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையினை விட்டு வைப்பார்களா என்ன?


பி.ஜே.பி உட்பட, பலர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் (1990) தனி தெலுங்கானாவை பெற்றுத்தருவாதாக முழங்கினர்.


இன்னிலையில், திரு. சந்திரசேகர ராவ் அவர்கள்,  2001-ல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி  (TRS) என்னும் கட்சியினை, ஹைதராபாத்தினை தலை நகராகக் கொண்டு, தனி தெலுங்கான மாநிலம் என்ற ஒரே ஒரு திட்டதின் அடிப்படையில்  நிறுவினார். (அவருக்கு மட்டும் முதல்வர் ஆசை வரக்கூடாதா?)

2004-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் “தனித் தெலுங்கானா வழங்குவதாக வாக்குறுதி அளித்து TRS உடன் தேர்தல் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது.  மாநிலத்திலும், மத்தியிலும்(கூட்டணி) காங்கிரஸே வென்றது! மத்திய கூட்டணி அரசில் கூட,  TRS  பங்கேற்றது!
2008-ல் தெலுங்கானா கோரிக்கையை நிறைவேற்றித தராத காங்கி ரஸை கண்டித்து TRS  கூட்டணை அரசிலிருந்து வெளியேறியது.
TRS மட்டுமல்ல, தெலுகு தேசம், காங்கிரஸ், பி.ஜே.பி, சிரஞ்சீவியினுடைய பிரஜா ராஜ்யம் என பலரும் தெலுங்கானாவை ஆதரித்தனர்.
2009-ல் திரு. சந்திரசேகர ராவ், தனித்தெலுங்கான கோரி ‘சாகும் வரை உண்ணாவிரதத்தினை துவக்கினார். மானவர்கள் (குறிப்பாக உஸ்மானியா பல்கலைகழகம்), அரசு ஊழியர்கள என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். 2009-டிசம்பரில் நடைபெற்ற அனைத்துகட்சி கூட்டம் ‘தனித் தெலுங்கானா தேவை என ஒருமனதாக்க் கூறியது.
இந்த சமயத்தில் தான் காட்சிக்கு வந்தார் நமது ‘கதாநாயகன் திருவாளர் ப.சிதம்பரம் அவர்கள்.  டிசம்பர் ஒன்பதாம் தேதி தனித்தெலுங்கானா அமைப்பதற்கான பணிகளை பிராசஸ் செய்வதாகவும், மாநில அதற்கான தீர்மாணத்தினை கொணர ஆவண செய்வதாகவும் வாக்களித்தார்.  KCR-ம் 11  நாட்கள் நட்த்திய உண்ணாவிரதத்தை முடித்தார். தெலுங்கான மக்கள் “வெற்றி, வெற்றி என முழங்கினார்.
ஆனால், உடனே ஆரம்பித்தது இன்னொரு பிரச்சினை!  தெலுங்கானாவை பிரிக்க்க் கூடாது; ஒன்று பட்ட ஆந்திரமே வேண்டும் எனக் கோரி, கடற்கரை ஆந்திரா, ராயலசீமா மக்கள் வீதிக்கு வந்தனர்.
மத்திய அரசுக்கு பல்ட்டி அடிக்க எவரேனும் கற்றுக் கொடுக்க வெண்டுமா என்ன?  அனைத்து கட்சிகளுக்கிடையே “ஒரு மித்த கருத்து ஏற்படாதவரை தெலுங்கானா பிரச்சினையின் பேரில் ஏதும் செய்ய மாட்டோம் என அறிவித்தனர்.
உடனே, தெலுங்கான பகுதியில், அனைத்துக் கட்சிகளின் சார்பாக கூட்டி நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டு பேரணிகளும், ஸ்டிரைக்குகளும், உண்ணா விரதங்களும்  ஆரம்பித்தன.
“எப்போதுதான் தெலுங்கான அமைக்கப்படும் என மத்திய அரசின் சட்டையைப் பிடித்து கேட்டனர்.
உடனே மத்திய அரசு, பிரச்சினைகளுக்கு, 31/12/2010 க்குள், தீர்வு சொல்லச் சொல்லி, “ஸ்ரீகிருஷ்னாகமிட்டி ஒன்றைப் போட்டது. இந்த கமிட்டி ஆறு வகையான தீர்வுகளை சொல்லியது. ஆறு வகையான தீர்வுகளில் ஒன்றான ‘தனித் தெலுங்கானாவை சிக்கென  பிடித்துக் கொண்டார் சந்திரசேகர ராவ். ஹைதராபாத்தினை தலை நகராகக் கொண்டு தெலுங்கானவை  அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை உண்டாக்கினார்.
இந்த ஸ்ரீ கிருஷ்னா கமிட்டி, தனது ரிப்போர்டில், ‘எட்டாவது அத்தியாயம் ரகசியமானது என்று சொல்லி, மத்திய அரசுக்கு அளித்தது.  ஆனால், மார்ச்-23, 2011 அன்று  நீதிபதி நரசிம்ம ரெட்டி அவர்கள், இந்த எட்டாவது அத்தியாயத்தினை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். 
இந்த எட்டாவது அத்தியாயம் என்பது “எப்படியெல்லாம் தனித் தெலுங்கானாவுக்கு எதிராக, மீடியாக்கள் மூலம்  மக்கள் அபிப்ராயத்தை ஒருவாக்குவது?, “தெலுங்கானா அரசியல் கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது?,  எவ்விதமான  "சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் முறையினை கடைபிடிப்பது?என மத்திய அரசுக்கு ஆலோசனை நல்கியது. 

நீதிபதி நரசிம்ம ரெட்டி அவர்கள், ‘ஸ்ரீ கிருஷ்னா கமிட்டிதனக்கு அளிக்கப்பட்ட ரெஃப்ரன்ஸை தாண்டி செயல்பட்டுள்ளது எனவும் (The Committee travelled beyond the terms of reference in its endeavour to persuade the Union of India not to accede to the demand for Telangana"), இந்த கமிட்டியின் உபதேசங்கள் ஜன நாயக நடைமுறைக்கு விடுத்த எச்சரிக்கை (The maneuver suggested by the Committee in its secret supplementary note poses an open challenge, if not threat, to the very system of democracy.) எனவும் தீர்ப்பளித்தார்.

அதன்பின்:

17/02/2011:  16-நாட்கள் ஒத்தழையாமை இயக்கம் துவக்கம்; 8 பில்லியன் நஷ்டம்.

2/11 & 3/11:  மானில சட்ட சபை புறக்கனிப்பு.  பார்லிமென்ட் ஒத்திவைப்பு.
மார்ச்-2011: ஹைதராபாத்தில் லட்சக் கணக்கில் மக்கள் பேரணி. வன்முறை வெறியாட்டம்.

ஜூலை 2011: தெலுங்கான பகுதியைச் சார்ந்த 118 MLA ளில், 100 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். 17 M.P க்களில் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

செப்டம்பர் 13 முதல்: வேலை நிறுத்தம்,ரயில்கள் மறிப்பு, பயணிகள் பரிதவிப்பு, அரசு ஊழியர்கள்  வேலை புறக்கனிப்பு, நிலக்கரி சுரங்கங்களில் வேலை நிறுத்தம்.  தமிழகம் உட்பட பல தென் மாநிலங்களில் மின் தடை. தெலுங்கான பகுதியில்  நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்தது. வெளி மாநில பேருந்துகள் தெலுங்கானாவிற்குள் நுழைய தடை என அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.

இந்த சூழ் நிலையில்தான் நமது நிதி மந்திரி ‘திரு பிரனாப்குமார் முகர்ஜிஅவர்கள், இந்த விஷயம் ‘உணர்ச்சிகரமானது என்றும், கடந்த 50 ஆண்டுகளாக இருந்துவரும் பிரச்சினை என்றும், இதற்கு ‘குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்வு காண்பது கடினம் என்றும், தனித் தெலுங்கானாவை ஏற்றுக் கொண்டால், இது போன்ற கோரிக்கைகள் நாடெங்கும் முளைக்கும் என்றும்(தனித் தென் தமிழ் நாடு?), இது குறித்து, மேலும் விவாதங்கள் தேவை எனவும் ‘புதிதாகக் கண்டுபிடித்து திருவாய மலர்ந்துள்ளார்.

இது போதாதென்று, சட்டம் ஒழுங்கெல்லாம் கட்டுக்குள் இருப்ப தாகவும்(?) கூறி வைத்தார்.

இது போதாதா? பிரனாப்பின் இந்த அறிக்கை, ஏற்கனவே கள் குடித்திருக்கும் TRS- க்கு தேளும் கொட்டியது போலாயிற்று. விஜய சாந்தி, காங்கிரஸை ‘ஹுசைனி சாகர் ஏரிக்குள் போட்டு மூழ்கடிப்பேன் என்கிறார்.


கமிட்டி போட்டு, இழுத்து அடிப்பதும், முடிவே எடுக்காமல் ஆண்டுக் கணக்கில்-பிரச்சினையை தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதும் , எதிரிகளை “அரசியல் ரீதியாக “ வளைத்துப் போடுவது காங்கிரஸுக்கு கைவந்த கலை.  இப்போது என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்பகுதி பற்றி எரிகிறது! மோகன்சிங் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை?  இப்படி ஒரு அரசாங்கம்!

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதே?


தென் மாநிலங்களில் கடுமையான மின் வெட்டு நிலவுகிறதே?


சுரங்கப் பணிகள் முடங்கிக் கிடக்கிறதே?


ஆந்திர பகுதியைத்தாண்டி வடக்கே ரயிலில் எப்படி செல்வது?

அரசு ஊழியர்கள் எங்கனம் ‘நிர்வாகத்தினை ஸ்தம்பிக்க வைக்க உரிமை பெற்றவர்களாகிறார்கள்-அதுவும் ஒரு கட்சி-அரசியல் பிரச்சினைக்காக?

இப்படியே போனால் ‘தெலுங்கானா காவல் துறையும் ஸ்டிரைக்கில்  ஈடுபட்டால் என்னவாகும்?

அரசியல் வாதிகள் பிரச்சினகளுக்கு ஒருபோதும் தீர்வு காண ஏன் மறுக்கிறார்கள்?

-என்றெல்லாம் கவலைப் படுகிறீர்களா? 

இது தான் இந்தியா.  நமக்கு வாய்த்த அரசும், அரசியல் கட்சிகளும் இப்படிப் பட்டவைதான்.

இவர்களை வழிக்கு கொண்டுவர வேண்டு மென்றால் அதற்கு என்ன செய்யலாம். யோசியுங்கள். 

ஒருவேளை, நாம் இம்மாதிரியான அரசாங்கங்களுக்குத்தான் தகுதியானவர்களோ என்னவோ?


Wednesday, October 5, 2011

டபுள் கிராஸ்


"உங்களை எம்.டி கூப்பிடிகிறார் சார்!"  அழைத்தான் பியூன்.


"இதோ வரேன்.." கிளம்பினார் நடேசன்.  நடேசன் தன் ரூமைச் சாத்திவிட்டு,  லிஃப்ட் ஏறி,  இரண்டாவது மாடிக்குச் சென்று, எம்.டி -ஐ பார்ப் 
பதற்குள், சிறு குறிப்பாக, இவரைப்பற்றி சொல்லுவதற்கு, சமயம் இருக்கி 
றது. 


எம்.டி எனப்படுவது திரு. ராமாமிர்தம் அவர்களை குறிக்கும்.  நாலு வருடமாக இந்த "Win and Win" கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார். பொறுப்பேற்கும் பொழுது கம்பெனி "ரெட் லைனில்" இருந்தது.  'ரெட்ரெச்மெண்ட்' , 'லேஆஃப் ' எல்லாம் நடை பெற்றது.  இந்த நாலு வருடத்தில் நிலைமையை தலை கீழாக்கிவிட்டார்.  இந்த வருடம், வரிக்கு பிந்திய லாபமே கோடிகளில்.  சென்னை கேளம் பாக்கம்-சிருசேரியில் பெரிய அசெம்பளிங் யூனிட் இருக்கிறது.  இரண்டு ஷிப்ட்களில் ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.  வருஷத்திற்கு பத்து லட்சம் கம்யூட்டர்கள், லேப்டாப்கள் தயாரிக் கிறார்கள்.   பாதிக்கு மேல் ஏற்றுமதியாகும்.  இந்தியாவில் லேபர் சீப் அல்லவா? என்வே எக்ஸ் போர்ட் ஆர்டர் எப்போதும் கைவசம் இருக்கும். கம்ப்யூட்டர் உற்பத்தியில், 
இந்தியாவில் நெம்பர் டூ கம்பெனி இவர்களது.


ராமாமிர்தம் கூப்பிட்டனுப்பிய 'நடேசன்' என்பவர், இந்த "Win and Win" கம்பெனியின் நிர்வாக அதிகாரி.  நடேசன், பத்து வருடம் இங்கு நிர்வாகம் பார்த்ததினால், யார், எதற்கு எப்போது கூப்பிடுவார்கள் என்பது ஓரளவு அத்துப்படி. எதற்கும் இருக்கட்டும் என்று, போன வார சேல்ஸ் ரிப்போர்ட், ஸ்டாஃப் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றார். 


கொஞ்சம் இருங்கள்!  நடேசன் எம்.டி-யின் ரூமிற்குள் வந்துவிட்டார்.


லேசாக கதவைத்தட்டிவிட்டு எம்.டி யின் அறைக்குள் நுழைந்தார் நடேசன். 
அங்கு ஏற்கனவே ப்ரொடக்ஷன், அக்கவுண்ட்ஸ் யூனிட் இன்சார்ஜ்கள் 
அமர்ந்திருந்தனர்.


"கமின் மிஸ்டர் நடேசன்.  ஹாவ் யு சீன் த டெண்டர்ஸ் டுடே?" என்றார் எம்.டி.


"யெஸ் சார்.. ஸ்டேட் கவர்ன்மெண்ட் ஹேஸ் ஃப்லோடட் எ டெண்டர் ஃபார் டூ லாக்ஸ் கம்ப்யூட்டர்ஸ்"


"தட்ஸ்! .. வீ மஸ்ட் டேக் தட் ஆர்டர்..அட் எனி காஸ்ட்..."


"ரெண்டு லட்சம் கம்ப்யூட்டர் வாங்கி என்னப்பா செய்யப்போறாங்க...?" 


"ரூலிங் பார்ட்டி எலெக்ஷன் மேனிஃபெஸ்டோவில் கமிட் பண்ணியிருக்காங்க சார். எல்லா இஞ்சினியரிங் ஸ்டூடென்ட்ஸ்க்கும் கொடுக்கப் போறாங்க..."


'யெஸ்.. யெஸ்.   ஐ ரிமெம்பர் தட்..."


'என்ன.. புரடக்க்ஷன்...,  இன் கேஸ், இஃப் வி வின் த டெண்டர்.. கேன் யூ கோப் அப் த சுட்சுவேஷன்?


"நோ பிராம்ளம் சார்.. வி.. கேன்! வி மே அரேன்ஜ் ஃபார் தேர்ட் ஷிப்ட் ஆல்ஸோ."  


மீட்டிங்க முடிவில், அன்று மாலைக்குள் கவர்ண்மெண்ட் போட்டிருக்கும் இரண்டு லட்சம் கம்யூட்டர் டெண்டருக்கு,  கோட் செய்யப்போகும் விலை, அரசியல்,அதிகார வர்க்கத்தினருக்கு செய்ய வேண்டிய 'மாமூலினையும்' சேர்த்து, என்னவாக இருந்தால் கட்டுப்படி யாகும் என தெரிவிக்க வேண்டும் என அக்கவுண்ட்ஸுக்கும், டெண்டர் ஃபார்மாலிட்டிஸை கவணிக்கும் படி நடேசனுக்கும் உத்தரவிடப்பட்டது. 


எம்.டி போன பின் இந்த டெண்டரை எடுக்கும் விதம் பற்றி மற்றவர்கள் தனியாக மீட்டிங் போட்டனர்.  நீண்ட ஆலோசனைக்குப்பின் ஒரு கம்ப்யூட் டர் ரூ.29,200  என கோட் செய்வது என தீர்மாணமாயிற்று. டெண்டர் ஃபார்ம் களை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யும் வேலைகளில் இறங்கினார் நடேசன்.  


அடுத்த நாள் மாலை மூன்று மணியிருக்கும்.  நடேசனது செல் கூப்பிட்டது.  


"சார்..குட் ஆஃப்டர் நூன்.. ஐ யாம் ப்ரியதர்ஷினி... சுருக்கமா ப்ரியா"


நடேசன் தனது நினைவறைகளில் தேடிப்பார்த்தார்.  ப்ரியா அகப்பட வில்லை.


"சாரி.. ஐ காண்ட் ரிமெம்பர்.. விச் ப்ரியா யு ஆர்?'


"நான் உங்களை நேரில் சந்திக்கலாமா?"


"ஏன்? என்ன விஷயமா?"


"அதை, ஃபோனில் சொல்வது கடினம்.. இன்று இரவு.. ஏழு மணிக்கு ஷெரட்டானுக்கு வரமுடியுமா?"


"இதோ பாருங்கள்.. நீங்கள் யாரென்றே தெரியவில்லை..எதற்காக உங்களை சந்திக்க வேண்டும்?.. எது சம்பந்தமாக நீங்கள் சந்திக்க விரும்புகிறீகள் என சொன்னால்தானே நான் தீர்மாணிக்க முடியும்?"


"சார்.. நான் ஒரு பெண். உங்களை கடித்து விழுங்கிவிட மாட்டேன்.  ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஸ்பேர் பண்ணக் கூடாதா? விபரம் நேரில் சொல்கிறேன். இரவு ஏழு மணி ஷெரட்டான். ப்ளீஸ்" 


"ஸ்டில் ஐ அம் நாட் கன்வின்ஸ்ட். வொய் ஷுட் ஐ மீட் யூ?"


"ஒரு அழகான இளம் பெண்ணை சந்திக்க விரும்பவில்லையா? என்னிடம் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்"


யாரிவள்? என்ன வேண்டும் அவளுக்கு? அவள் குரலில் கண்ட வசீகரம், கொஞ்சலான- செக்ஸியான குரல், அவளை போய்ப் பார்த்தால்தான் என்ன இழுத்தது. மேலும் "ஸ்காட்ஸ்" சாப்பிட்டு வேறு ரொம்ப நாளாயிற்று.  


'ஓ.கே. வீ ஷெல் மீட் பை செவென்..


"தேங்க் யூ சார்"

மாலை 6.15.  தனது அன்றைய பணிகளை நிறைவு செய்துவிட்டு, ஆபீஸ் பாயை விளித்து, ரூமை பூட்டச் சொல்லிவிட்டு லிஃப்டில் இறங்கினார் நடேசன். சட்டென நினவுக்கு வந்தாள் ப்ரியா. அந்த முகம் தெரியாத ப்ரியாவை சந்திக்கப் போகும்  உற்சாகத்துடன் காரை ஷெரட்டன் நோக்கி திருப்பினார்.


லவுன்சில் கண்களை மேயவிட்டபோது, 'ஹலோ சார்... குட் ஈவினிங்க் 
கிளாட் டு மீட் யூ...'


கை நீட்டிய பெண்ணைப்பார்த்தார்.  பளீரென்ற சிவந்த மேனி, மெல்லிய ஷிபான் புடவை.  கழுத்தில் ஒரு செயின்.  அளவான உடலமைப்பு.. குறை சொல்ல முடியாத முகம். தோள் வரை கட் செய்யப்பட்டு அலையும் கூந்தல்.  கைகுலுக்கலில் 'ஜில்'லென இருந்தாள்.  தோற்றத்தை வைத்து அதிக பட்சமாக 29 வயது சொல்லலாம்.


கார்னர் டேபிள் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. 


" ஓ.கே ப்ரியா.. ஹு ஆர் யூ? வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?


சுவாதீனமாக, அவரருகில் அமர்ந்தாள்.  கிறங்கடிக்கும் பர்ஃப்யூம்..அருகில் 
வரும்போது அவளது கூந்தல் அவரது முகத்தை வருடியது. 


முதலில் 'ஸ்காட்ச்,  பின் இண்டொரொடக்ஷன்...'  ஸ்காட்ச் ஆர்டர் செய் தாள் ப்ரியா.


'நான் கே.டி.ஸ் கம்யூட்டர்ஸின் பி.ஆர்.ஓ.'  


நடேசனது பிஸினஸ் மூளைக்கு சட்டென்று எல்லாம் பிடிபட்டது.  


"ஸோ... நீங்கள் கம்யூட்டர் டென்டரில் எங்களுடன் போட்டியிடுகிறீகள்.  அதற்கு நான் உதவ வேண்டும்.. அப்படித்தானே?"


"தட்ஸ் ரைட்.. நீங்கள் மிகவும் கெட்டிக்காரர்.  விவரமாக உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.   நீங்கள் அந்த டெண்டருக்கு எவ்வளவு 'கொட்டேஷன்' கொடுக்கப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் கேட் பதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.."


'கெட் லாஸ்ட் ப்ரியா... ஐ டோண்ட் வாண் டு டாக் டு யு எனி மோர்..' எழுந்தார் நடேசன்.  சட்டென்று அவரது தோளைப்பிடித்து அழுத்தி உட்கார வைத்தாள்.  அவரது அருகில் நின்று கொண்டாள்.  'லுக்.. நடேசன்... ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?'  இந்த டெண்டரில் யார் தோற்றாலும், வென்றாலும் நம் கம்பெனிகளுக்கு பெரிய நஷ்டமில்லை.  அது நமக்கு எந்தவிதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. நமது முதலாளிகளின் லாபம் குறையப் போவதுமில்லை.   இதெல்லாம் கம்பெனிகளில் சகஜம்.  "


ஸ்காட்ச் கலப்பதில் நிபுனியாக இருந்தாள் ப்ரியா.  அவருக்கு பிடித்த மாதிரி, ஸ்காட்ச் -ஐ, 7-அப் புடன் கலந்து கொடுத்தாள்.  அவரைப் பற்றி முன்பே அறிந்து வைத்திருப்பாள் போலும். அவள் வினோதமா லைம் 
ஜூஸுடன் கலந்து ஸ்காட்ச் எடுத்துக் கொண்டாள்.


"இது என்னால் முடியாது.. துரோகம் ப்ரியா.. நான் போகிறேன்."  


"இந்த விஷயத்தை நீண்ட நேரம் பேச விரும்ப வில்லை நடேசன். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்.  நீங்கள் தரும் தகவலுக்காக இருபது வரை தருகிறோம்.  இந்த ஆஃபரை மறுக்காதீர்கள்.   நான் உங்களை வற் புறுத்தப் போவதில்லை.  பதிலை உடனே சொல்ல வேண்டியதில்லை.. யோசித்து நாளை மாலைக்குள் சொல்லுங்கள்..'


"இருபது?"


"யெஸ்... ட்வெண்டி லாக்ஸ்"


"நோ..வே ப்ரியா..ஐ டொண்ட் லைக் திஸ் ஐடியா.."


"பாசாங்கு செய்யாதீர்கள். இருபது என்பது உங்களுக்கு சாமானியமான தொகை அல்ல என்பது எனக்குத் தெரியும் நடேசன்.  நீங்கள் டிரீம் ஃப்ளாட் ஒன்றை மனதில் வைத்திருக்கிறீகள்.  அதற்கு இது பயன்படும்.  மறுப்பதால் உங்களுக்கு பயன் ஏதுமில்லை. யோசித்துப் பாருங்கள்."


"இல்லை..ப்ரியா.. மனதுக்கு சரியெனப் படவில்லை.  " கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தார் நடேசன்.


"ரொம்ப வெட்கப் படுகிறீர்கள் மிஸ்டர் நடேசன்,  'உங்களுக்கு என்னதான் 
வேண்டும் இன்று இரவு என் ஃப்ளாட்டுக்கு வாருங்கள். கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாம்.. நான் தனியாகத்தான் இருக்கிறேன்"  அவரை காமத்துடன் உரசினாள்.


அதுவரை அவர் அடக்கி வைத்திருந்த யாவும் கட்டறுந்தது.  ப்ரியாவின் 
அருகாமை, அவளின் ஸ்பரிஸம், அவள் தரும் போதை யாவும் கண நேரத் 
தில் அவரை சலனப்பட வைத்துவிட்டது.


"யு மீன்?" 


"யெஸ், ஐ மீன் தட்.  யு கேன் டேக் மீ.. இட்ஸ் அ டீல்.."


அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவர் ப்ரியாவின் ஃப்ளாட்டில் இருந் தார்.


உள்ளே சென்றிருந்த 'ஸ்காட்ச்' அவரிடம் எஞ்சியிருந்த "அனிமல் இன்ஸ் 
டிங்க்டை" தூண்டிவிட, ஃப்ரியாவை ஆரயத்துவங்கினார்.  


"நாட் நௌ நடெசன், டெல் மி த டெண்டர் ஃபிகர் அண்ட் தென் யூ கேன் டேக் மி..."


"உனக்கு அந்த தொகையை சொல்லத்தயார் ப்ரியா.. ஆனால் ஐ வாண்ட் டு பார்கெய்ன் வித் யூ ப்ரியா.."


"பார்கெய்ன்.? ஓ..கே.. உங்களுக்கு எவ்வளவு வேண்டும்.."


"இருபத்திரெண்டு.."


"ட்வெண்டி டூ..?  ஆர் யூ ஷ்யூர்...?


"யெஸ்'


'வெய்ட்..  "  அவள் அவளது பாஸுடன் பேசினாள்.. 


'ஓ.கே நடேசன்.. தட்ஸ் அ டீல்... ' பாஸ் ஒத்துக் கொண்டு விட்டார்.


"நாளை காலை என் வீட்டிற்கு கொடுத்தனுப்பு.கொண்டு வருபவரிடெமே 
அந்த தொகை குறித்து அனுப்பப்புகிறேன்."


"தட்ஸ் நைஸ்.. கமான்... லெட்ஸ் செலபரேட் இட்."  புடவையை நழுவ விட்டாள்


"நோ. ஐ டோண்ட் வாண்ட் டு பி தட் சீப்...லெட்ஸ் ஸீ லேட்டர்."
 அவளைப் புறக்கணித்துவிட்டு புறப்பட்டார் நடேசன்.


"ஏன்? என்ன ஆச்சு திடீரென்று ? நான் வேண்டாமா?"


"வேண்டாம் ப்ரியா. ஒரு பாவம் போதும்"


சொல்லியபடி, அடுத்த நாள் பணமும், டெண்டரில் குறிப்பிடப்பட 
வேண்டிய தொகையும் கை மாறியது.


டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவரவர்கள் தங்கள் தினப்படி டியூட் டிகளுக்கு திரும்பினர்.  ப்ரியா அதன்பின் அவருடன் பேசவே இல்லை. அது 
அவருக்கு பெருத்த நிம்மதியைத் தந்தது.  


ஒரு மாதம் கழிந்திருக்கும். அது ஒரு புதன் கிழமை.  மாநில அரசின் செக்ர 
டேரியட்டில் 'டெண்டர்கள்' திறக்கப் பட்டன. டெண்டர் ஓபனிங்குக்கு எம்.டி யும், நடேசனும் போனார்கள்.  


'கே.டி.ஸ் கம்யூட்டர்ஸின்' சார்பாக ப்ரியாவும், அவள் பாஸும் வந்திருந்தனர். மொத்தம் நாலு கம்பனிகள்.  அனைவருக்கும் தெரியும், போட்டி "கே.டி.ஸ் கம்யூட்டர்' க்கும் 'Win and Win' கம்ப்யூட்டர்ஸுக்கும் தான் என. 


முதலில் 'Win and Win' கம்ப்யூட்டரின் கொட்டேஷன் பிரிக்கப்பட்டது.  பின் கோட் படிக்கப்பட்டது.  ரூ.29,200.


கண்களால் நன்றி சொன்னாள் ப்ரியா.   முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் நடேசன்.  அடுத்து "கே.டி.ஸ் கம்ப்யூட்டர்ஸி' கவர்.  


டெண்டர் ஓபனிங் ஆபீஸர் குறுக்கிட்டார். "வெய்ட்.. இந்த கொட்டேஷன் கவர்.. வேக்ஸ் சீல் கொண்டு, சீல் செய்யப் படவில்லை.  செல்லோ டேப் போட்டு ஒட்டியிருக்கிறது.. நமது டெண்டர் கண்டிஷன் படி 'கோட் கவர்' அரக்கில் கம்பெனி சீல் கொண்டு சீல் செய்யப் பட்டிருக்க வேண்டும். இந்த கவரை ஏற்றுக் கொள்ள முடியாது.."




"கே.டி.ஸ் கம்ப்யூட்டர்" எம்.டி குறுக்கிட்டார்.  இட்ஸ் ஆல் த ஸேம் சார்.. யாரும் பிரிக்க முடியாதபடி 'செல்லோ' போட்டிருக்கிறதே.. என்றார்.


"'நோ... நோ.. டெண்டர் கண்டிஷன் மிகவும் தெளிவாக உள்ளது.. இந்த கோட் கவர் வேக்ஸ் சீல் செய்யப்படவேண்டும்.. அப்படி இல்லை யென்றால் அந்த கோட் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்" டெண்டர் கண்டிஷனை படித்துக் காண்பித்தார் அதிகாரி.


விவாதங்கள் பலனில்லை.  உடனிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரும், இந்த டெண்டர் பிரிக்கக் கூடாதென அபிப்ராயம் கூறினார்.


டெண்டர் முடிந்து. 'Win and Win Computers' கம்யூட்டர் சப்ளை செய்ய தேர்ந் தெடுக்கப்பட்டது.  


"கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் நடேசன்.." கை குலுக்கினாள் ப்ரியா


"நத்திங் ராங் இன் மை பார்ட்" என்றார் நடேசன்.


"யெஸ், ஐ அக்ரீ... இட்ஸ் ஆல் இன் தெ கேம்." கண்களில் சோகத்தை மறைத்தாள் ப்ரியா.


"கே.டி.ஸ் கம்ப்யூட்டர்" -ன் அக்கவுண்டெண்ட் வேணுகோபால், வேக்ஸ் சீல் வைக்காததிற்காக வேலையை விட்டு நீக்கப் பட்டார்.  அவருக்கு வருத்தமேதும் இல்லை. அவ்வாறு செய்ததிற்காக, நடேசனிடம் அவர் வாங்கிய இரண்டு லட்சம் வீட்டில் பத்திரமாக இருந்தது.  'Win and Win Computers' -ன் சிஸ்டர் கம்பனி ஒன்றில் பிறகு வேலை போட்டுத்தருவதாக நடேசன் வாக்கு கொடுத்திருக்கிறாறே!!


-0-