Pages

Sunday, May 3, 2015

சடலமானபின்.....


நானறிவேன், 
உன் கண்களில் கண்ணீர் வழியும்!
அதை நான் துடைக்க இயலாது... 
இருக்கும் பொழுதே, எனக்காக
ஒரு துளி கண்ணீர் சிந்திவிடேன்! 

நானறிவேன்,
எனக்காக கோடித் துணியெடுப்பாய்,
அதை நானே உடுத்திக்கொள்ள முடியாதல்லவா?
மூச்சிருக்கும் பொழுதே உடுத்திவிடேன்!

நானறிவேன்,
என்னைப் பற்றி புகழ்ந்துரைக்கக் கூடும்
அதைக் கேட்க முடியாதல்லவா?
இப்பொழுதே என்னைப் பற்றி சொல்லிவிடேன்.

நானறிவேன்
எனது பிழைகளை மறப்பாய்
மரித்தபின் மறந்தென்ன எனக்கு? 
மூச்சுள்ளபோதே மறக்க மாட்டாயா?

நானறிவேன்,
நான் இல்லாததை, இல்லாமல் போனபின் உணர்வாய்
நான் அறிய, இப்பொழுதே என்னை அறிந்து கொள்ளேன்!

நானறிவேன்
என்னுடன் கொஞ்ச நேரம் செலவிட்டிருக்கலாம் என 
உள்ளம் வெதும்புவாய்
என் மூச்சுள்ளபோதே, உன் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கேன்!

ஒரு ரகசிய நேரத்தில்
எவரும் எப்போதும் விலகிடுவர்,
இதயங்களில் வசிப்பவர்களோடு 
இப்பொழுதே
பேசியவேண்டியவற்றை பேசிவிடுங்கள்!
மறந்த அன்பைக் காட்டி அரவணையுங்கள்!

வாழ்வது சில நாள்,
அன்பு வளர வாழ்வு வளரும்
விரோதம் வளர வாழ்வு அழியும்

No comments:

Post a Comment